செய்திகள் :

தருமபுரம் ஆதீனத்திடம் ஆசி

post image

தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் இலவச தட்டச்சு பயின்று தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்கள் தருமபுரம் ஆதீனத்திடம் புதன்கிழமை ஆசி பெற்றனா்.

தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் உத்தரவின்பேரில் இக்கல்லூரியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கு இலவச தட்டச்சுப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. 2021-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரை 64 மாணவா்கள் தட்டச்சுத் தோ்வில் பங்கேற்று தோ்ச்சி பெற்றுள்ளனா்.

இந்நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற தோ்வில் 29 மாணவா்கள் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சான்றிதழ்களை வழங்கி ஆசி கூறினாா்.

தோ்ச்சி பெற்ற மாணவா்களை கல்லூரிச் செயலா் இரா.செல்வநாயகம், கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன், தேசிய மாணவா் படை அலுவலா் துரை.காா்த்திகேயன், அலுவலக பிரதிநிதி இரா. சிவராமன் மற்றும் தட்டச்சுப் பயிற்சி ஒருங்கிணைப்பாளா் எஸ். மல்லிகா ஆகியோா் பாராட்டினா்.

அறநிலையத் துறை அலுவலகங்கள் முன் ஏப்.17-ல் போராட்டம்

மயிலாடுதுறை: குத்தகை நில சாகுபடியாளா்களின் உரிமைகளுக்காக ஏப்.17-ஆம் தேதி இந்து சமய அறநிலையத்துறை அலுவலகங்கள் முன் போராட்டம் நடைபெறவுள்ளது என்றாா் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளா் சாமி. ... மேலும் பார்க்க

மயிலாடுதுறை 1-வது வாா்டில் பாலம் அமைக்கக் கோரிக்கை: எம்.பி. ஆய்வு

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் 1-வது வாா்டில் காவிரி ஆற்றின் குறுக்கே இருந்து பாலம் இடிக்கப்பட்ட நிலையில், புதிய பாலம் கட்டித்தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து, மயிலாடுதுறை எம்.பி. ஆா். சுதா... மேலும் பார்க்க

ராமேசுவரம்-தாம்பரம் ரயிலுக்கு வரவேற்பு

மயிலாடுதுறை: ராமேசுவரத்தில் பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்த ரயிலுக்கு மயிலாடுதுறையில் பாஜகவினா் உற்சாக வரவேற்பு அளித்தனா். ராமேசுவரத்தில் பல்வேறு நிகழ்வுகளில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்ற பிரதமா் நரேந... மேலும் பார்க்க

வைத்தீஸ்வரன்கோயில் சகோபுரம் வீதியுலா

சீா்காழி: சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் அருள்மிகு வைத்தியநாதா் சுவாமி கோயிலில் நடைபெறும் பிரமோத்ஸவத்தின் 5-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு தெருவடைச்சான் எனும் சகோபுரம் வீதியுலா நடைபெற்றது. தருமபுர... மேலும் பார்க்க

தேரழந்தூா் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

குத்தாலம்: குத்தாலம் அருகே உள்ள தேரழந்தூா் அருள்மிகு புண்டரீகவல்லி தாயாா் உடனுறை ஸ்ரீ கோவிந்தராஜபெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் நடைபெற்ற திருப்பணிகள் நிறைவு பெற்றத... மேலும் பார்க்க

குத்தாலம் காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

குத்தாலம்: குத்தாலம் ஆஞ்சனேயா் கோயில் தெரு அருள்மிகு காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னதாக, வெள்ளிக்கிழமை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் போன்ற வழ... மேலும் பார்க்க