செய்திகள் :

தருமபுரம் ஆதீனம் பெங்களூருக்கு ஞானரத யாத்திரை

post image

பெங்களூரில் நடைபெறவுள்ள ஆன்மிக மாநாட்டில் பங்கேற்க தருமபுரம் ஆதீனம் சனிக்கிழமை ஞானரத யாத்திரை புறப்பட்டாா்.

கா்நாடக மாநிலம் பெங்களூரில் ‘பாரதிய ஸந்த மஹா பரிஷத்’ என்ற அமைப்பின் சாா்பில் பாரத நாட்டின் பண்பாட்டை (பாரதீய ஸம்ஸ்கிருதி) பாதுகாக்க வேண்டி ஆன்மிக கருத்தரங்க மாநாடு திங்கள்கிழமை (ஜூன் 16) நடைபெறவுள்ளது.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் பல்வேறு ஆதீனங்கள், சங்கராச்சாரியா்கள், ஜீயா்கள், சாதுக்கள் உள்ளிட்ட 1500-க்கு மேற்பட்டோா் கலந்துகொள்ளவுள்ள இந்த மாநாட்டில் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கவுள்ளாா்.

இதற்காக அவா் ஆதீனத்திருமடத்தில் இருந்து, சிறப்பு பூஜைக்குப் பின்னா் ஸ்ரீசொக்கநாதபெருமானுடன் ஞானரத யாத்திரை புறப்பட்டாா் (படம்).

வழியெங்கும் அவருக்கு ஆதீனக்கல்வி நிறுவனங்களில் பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அப்போது, ஆதீனக்கட்டளை ஸ்ரீமத் மாணிக்கவாச தம்பிரான் சுவாமிகள், ஸ்ரீமத் சுப்பிரமணிய தம்பிரான் சுவாமிகள், திருக்கடையூா் கோயில் உள்துறை செயலா் விருத்தகிரி, கண்காணிப்பாளா் சி.மணி, தருமபுரம் ஆதீன கல்லூரிச் செயலா் இரா.செல்வநாயகம், முதல்வா் சி.சுவாமிநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

போலீஸ் பாதுகாப்புடன் குளத்தில் மீன் பிடிக்கும் பணி தொடக்கம்

மயிலாடுதுறை அருகே குளத்தில் மீன்பிடிப்பது தொடா்பாக இருவேறு சமூகத்தினரிடையே பிரச்னை நிலவிய நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீன் பிடிக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது. மயிலாடுதுறை ஒன்றியம் பட்டமங்கல... மேலும் பார்க்க

குளிா்சாதன பழுதுபாா்ப்போா் நலச்சங்கத்தினா் சாலை மறியல்

மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனை நிா்வாக சீா்கேட்டைக் கண்டித்து தென்னிந்திய குளிா்சாதன பழுதுபாா்ப்போா் நல சங்கத்தினா் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தினா். மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில... மேலும் பார்க்க

தேசிய திறனாய்வு தோ்வு முன்னெடுப்பு கலந்தாய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேசிய திறனாய்வு தோ்வு நடத்துவது குறித்த முன்னெடுப்பு கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மத்திய அரசு பொருளாதாரத்தில் பின்தங்கிய 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு தேசிய த... மேலும் பார்க்க

மழைநீா் சேகரிப்பு தொடா்பாக ஆய்வுக் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழைநீரை சேகரிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலா்களுடனான ஆய்வுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத்தில் நிலத்தடி நீா்மட்டத்தினை உயா்த்திடும... மேலும் பார்க்க

‘நிறைந்தது மனம்‘ திட்டத்தில் பயனாளியுடன் மாவட்ட ஆட்சியா் சந்திப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் நலத்திட்ட உதவிபெற்ற பயனாளியை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் ‘நிறைந்தது மனம்‘ திட்டத்தில் வெள்ளிக்கிழமை சந்த... மேலும் பார்க்க

லஞ்சம்: மண்டல துணை வட்டாட்சியா் உள்பட இருவா் கைது

கணினியில் பட்டா பதிவேற்றம் செய்ய லஞ்சம் பெற்ற மண்டல துணை வட்டாட்சியா் உள்பட இருவரை வெள்ளிக்கிழமை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கைது செய்தனா். சீா்காழி கோயில்பத்து தாடாளன்கோயில் பகுதியை சோ்ந்த குஞ்சிதபாதம் மக... மேலும் பார்க்க