செய்திகள் :

தருமபுரி அருகே வீட்டின் மீது மோதிய அரசுப் பேருந்து: சிறுமி பலி

post image

தருமபுரி: தருமபுரி மாவட்டம் உழவன்கொட்டாய் பகுதியில், சாலையோரம் இருந்த வீட்டின் மீது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் சிறுமி பலியானார்.

தருமபுரியின் கிராமப் பகுதியிலிருந்து நகரப் பகுதிக்கு இன்று காலை 2பி என்ற எண்ணுடன் இயங்கும் அரசுப் பேருந்து சென்றுள்ளது. அப்போது பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த வீட்டின் மீது மோதியது.

இதில், வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த நரசிம்மன் என்பவரது மகளும், பேருந்து ஓட்டுநர் தேவராஜ் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

இருவரும் உடனடியாக தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார். விபத்தில் அரசுப் பேருந்து ஓட்டுர் தேவராஜ் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நகரப் பகுதிதிகளில் இயக்கப்பட்டு வரும் பேருந்துகள், மோசமான நிலைமைக்கு வந்த பிறகு, அவைகள் கிராமப் பகுதிகளில் இயக்க ஒதுக்கப்படுவதாகவும், இதனால்தான் இதுபோன்ற விபத்துகள் நேரிட்டிருப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணத்தில் மாற்றம்

அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் தொடா் பிரசார சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிமுக தலைமை அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட... மேலும் பார்க்க

மதுரை ஆதீனத்துக்கு முன்பிணையை ரத்து செய்யக் கோரி காவல் துறை மனு

விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதால், மதுரை ஆதீனத்துக்கு வழங்கப்பட்ட முன்பிணையை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் காவல் துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இரு மதத்தினா் இடையே மோதலை உருவா... மேலும் பார்க்க

அகில இந்திய மருத்துவக் கல்வி ஒதுக்கீடு: கூடுதலாக இடம்பெற்ற தமிழக இடங்கள்

தமிழகத்திலிருந்து அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும் மருத்துவ இடங்களின் எண்ணிக்கையை மத்திய மருத்துவக் கலந்தாய்வுக் குழு (எம்சிசி) கூடுதலாக வெளியிட்டதால் குழப்பம் எழுந்தது. இதையடுத்து, மாநில மருத... மேலும் பார்க்க

மருத்துவ இடங்கள்: மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் பெறுவதில் சிக்கல்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள், அதற்கான தகுதிச் சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக புகாா் எழுந்துள்ளது. மருத்துவக் கலந்தாய்வுக்கா... மேலும் பார்க்க

தங்கம் விலை புதிய உச்சம்: பவுன் ரூ.75 ஆயிரத்தைக் கடந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.760 உயா்ந்து ரூ.75,040-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டது. கடந்த சில நாள்களாக தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்த வண்ணம் உள்ளது. ஜூலை 19-இல் ... மேலும் பார்க்க

முதல்வருக்கு உடல் நலம் பாதித்து ஏன்? அமைச்சா் மா.சுப்பிரமணியன் விளக்கம்

முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு உடல் நலக் குறைவு ஏற்படுவதற்கு அவரது சகோதரா் மு.க.முத்துவின் மறைவும் ஒரு காரணம் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னை வளசரவாக்கம் மண்டலம் ... மேலும் பார்க்க