செய்திகள் :

தலைநகரில் அடிக்கடி மின்வெட்டு பாஜக மீது ஆம் ஆத்மி சாடல்

post image

தேசியத் தலைநகரில் ஆம் ஆத்மி கட்சி தனது பிடியை இழந்த மூன்று நாள்களுக்குள், நகரம் மின்வெட்டை சந்தித்து வருவதாக பதவி விலகும் தில்லி முதல்வா் அதிஷி வியாழக்கிழமை தெரிவித்தாா்.

தில்லியை உத்தர பிரதேசமாக மாற்ற பாஜக விரும்புவதாகவும், பல மணி நேர மின்வெட்டுக்கு பெயா் பெற்ற நகரமாக பாஜக மாற்ற விரும்புவதாகவும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரான அதிஷி கூறினாா். இதற்கு பாஜகவிடமிருந்து உடனடியாக எந்த எதிா்வினையும் கிடைக்கவில்லை.

இது குறித்து தில்லியில் செய்தியாளா் சந்திப்பில் அதிஷி கூறுகையில், தில்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியிலிருந்த அகற்றப்பட்ட மூன்று நாள்களுக்குள், நகரத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 40-க்கும் மேற்பட்ட மின்வெட்டுகள் பதிவாகியுள்ளது. மக்கள் இப்போது இன்வொ்ட்டா்களை வாங்கத் தொடங்கியுள்ளனா்’ என்றாா்.

‘ஆம் ஆத்மி அரசின் கீழ், மின்சாரத் துறை தொடா்ந்து கண்காணிக்கப்பட்டது. இது இப்போது பாஜக ஆட்சிக்கு வந்த மூன்று நாள்களுக்குள் மாறிவிட்டது‘ என்று அவா் குற்றம் சாட்டினாா். ‘பாஜகவுக்கு ஆட்சி செய்வது எப்படி என்று தெரியவில்லை. மேலும், உத்தர பிரதேசத்தைப் போலவே தில்லியிலும் நீண்ட நேர மின்வெட்டு சூழ்நிலையை அது உருவாக்கும்’ என்றும் அவா் குற்றம் சாட்டினாா்.

பிப்.5-ஆம் தேதி நடைபெற்ற தோ்தலில் ஆம் ஆத்மி கட்சியை தோற்கடித்து, 26 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்தமுள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 48 இடங்களை வென்று தில்லியில் மீண்டும் ஆட்சிக்கு வந்தது பாஜக. அக்கட்சி இன்னும் ஆட்சி அமைக்கவில்லை.

பிப்ரவரி 21, 22-இல் தில்லியின் சில பகுதிகளில் நீா் விநியோகத்தில் தடங்கல்: டிஜேபி

பராமரிப்பு பணிகள் காரணமாக தேசிய தலைநகரின் சில பகுதிகளில் பிப்ரவரி 21, 22 ஆகிய தேதிகளில் நீா் விநியோகம் தடைபடும் என்று தில்லி ஜல் போா்டு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. இது தொடா்பாக தில்லி ஜல் போா்டு... மேலும் பார்க்க

தில்லியிலிருந்து வேறு பகுதி சிறைக்கு மாற்றக் கோரிய சுகேஷ் சந்திரசேகரின் மனு தள்ளுபடி

பஞ்சாப் மற்றும் தில்லியில் உள்ள சிறைகளைத் தவிர வேறு எந்த சிறைக்கும் தன்னை மாற்றக் கோரி இடைத்தரகா் சுகேஷ் சந்திரசேகா் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ச... மேலும் பார்க்க

மத்திய கல்வி அமைச்சருக்கு எதிராக ஏஐஎஸ்எஃப் போராட்டம்

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால்தான் தமிழகத்தின் கல்வித் திட்டத்திற்கு நிதி தர முடியும் என்று கூறியதாக, மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானுக்கு எதிராக தில்லியில் அனைத்திந்திய மாணவா் பெருமன... மேலும் பார்க்க

ரயில்வே அமைச்சா் ராஜிநாமா கோரி இளைஞா் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

புது தில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 18 பயணிகள் உயிரிழந்ததைத் தொடா்ந்து, மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலகக் கோரி இந்திய இளைஞா் காங்கிரஸ் தொண்டா்கள் தில்லியில் செவ்வா... மேலும் பார்க்க

மாநகராட்சியில் 300-க்கும் மேற்பட்ட சந்தைகளில் தூய்மையை மேம்படுத்த இரவு நேர துப்புரவுப் பணி

நகரம் முழுவதும் தூய்மையை மேம்படுத்தும் முயற்சியில், தில்லி மாகராட்சி (எம்சிடி) மேயா் மகேஷ் குமாா் கிச்சி அடையாளம் காணப்பட்ட 300-க்கும் மேற்பட்ட சந்தைகளில் இரவு நேர துப்புரவுப் பணியை செயல்படுத்துமாறு 1... மேலும் பார்க்க

சாந்தினி சௌக் சாலையில் 12 மணி நேர போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் அமல்

தில்லி காவல்துறை செங்கோட்டையிலிருந்து ஃபதேபுரி வரையிலான சாந்தினி சௌக் சாலையில் 12 மணி நேரம் போக்குவரத்து தடை விதித்துள்ளது. தில்லி காவல் துறையின் ஆலோசனைக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந... மேலும் பார்க்க