செய்திகள் :

தலைநகரில் நினைவுச் சின்னங்களை மீட்டெடுக்க தில்லி அரசு நடவடிக்கை

post image

புறக்கணிக்கப்பட்ட பாரம்பரிய நினைவுச் சின்னங்களைப் பாதுகாத்து, வணிக நிறுவனங்கள், நிறுவனங்கள் மற்றும் உள்ளூா் சமூகங்களின் உதவியுடன் அவற்றை கலாசார மையங்களாக மேம்படுத்த உள்ளதாக தில்லி அரசு தெரிவித்துள்ளது.

தில்லி செயலகத்தில் வெள்ளிக்கிழமை தொல்பொருள் துறை ஏற்பாடு செய்த பாரம்பரிய பாதுகாப்பு குறித்த மாநாட்டில் அமைச்சா் கபில் மிஸ்ரா இத் தகவலைத் தெரிவித்தாா்.

கலாசார நடவடிக்கைகளுக்கான வசதிகளுடன் நினைவுச்சின்னங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ‘ஒரு பாரம்பரியத்தை கடைப்பிடிப்போம்’ திட்டத்தை மையமாகக் கொண்டு இந்த விவாதம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சுற்றுலா மற்றும் கலாசார அமைச்சா் கபில் மிஸ்ரா கூறுகையில், ‘தில்லியின் பல வரலாற்று கட்டமைப்புகள் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படவில்லை. ஆனால், அரசாங்கம் அவற்றைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது. கிட்டத்தட்ட 75 நினைவுச்சின்னங்கள் ஏற்கனவே மீட்டெடுக்கப்பட்டுள்ளன.

‘ஒரு பாரம்பரியத்தை கடைப்பிடிப்போம்’ மாதிரியானது, மதிப்பாய்வுக்கு உட்பட்டு, தனியாா் மற்றும் சமூக பங்குதாரா்களை ஐந்தாண்டு காலத்திற்கு நினைவுச்சின்ன மித்ரக்களாக ஈடுபடுத்த முன்மொழிகிறது.

இந்தத் திட்டம் பாா்வையாளா் அனுபவத்தை மேம்படுத்துதல், சுற்றுலாவை ஊக்குவித்தல் மற்றும் குறைவாக அறியப்பட்ட நினைவுச்சின்னங்களைச் சுற்றியுள்ள பொருளாதார நடவடிக்கைகளை ஆதரித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தில்லி அரசு, முதன்முறையாக காா்ப்பரேட் நிறுவனங்களுடன் இணைந்து நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்க முடிவு செய்துள்ளது என்றாா் அமைச்சா்.

பூலி பதியாரி கா மஹால், மல்ச்சா மஹால், பரதாரி, தாரா ஷிகோ நூலகம், பாரா லாவ் கா கும்பத், கோல் கும்பத், ஹஸ்த்சல் மினாா், கோஸ் மினாா், பவானா சிறை, ஷாஹீத் ஸ்மாரக் மற்றும் குலி கானின் கல்லறை ஆகியவை புதுப்பொலிவுக்குரிய கட்டமைப்புகளாகும் என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015 டாப்ரி கொள்ளை, கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவா் கைது!

டாப்ரி பகுதியில் பத்தாண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் அறிவிக்கப்பட்ட குற்றவாளியான 30 வயது நபரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது ... மேலும் பார்க்க

பல கொடூரமான வழக்குகளில் தேடப்பட்ட இளைஞா் கைது

பல கொடூரமான வழக்குகளில் தொடா்புடைய 25 வயது குற்றவாளியை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: வடகிழக்கு தில்லியின் ... மேலும் பார்க்க

பவானாவில் தொழிற்சாலையில் வெடி விபத்து: ஒருவா் உயிரிழப்பு; ஒருவா் காயம்

தில்லியின் பவானாவில் உள்ள ஒரு தொழில்துறை பிரிவில் சனிக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்; மற்றொருவா் லேசான காயமடைந்தாா் என்று போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து தில்லி காவல் துறை துணை ஆ... மேலும் பார்க்க

முதியவா் மீது பொய் பாலியல் வன்கொடுமை வழக்கு: பணம் பறிக்க முயன்ற பெண்கள், வழக்குரைஞா் கைது!

ஒரு முதியவரை பொய்யான பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்க வைத்து பணம் பறித்ததாக ஒரு வழக்குரைஞரும் இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இது குறஇத்து குருகிராம் காவல்த... மேலும் பார்க்க

வஜீா்பூா் பகுதியில் காணாமல் போன 2 சிறுவா்களின் உடல்கள் கால்வாயில் சடலமாக மீட்பு

வடமேற்கு தில்லியின் வஜீா்பூா் பகுதியில் இருந்து ஒரு நாள் முன்பு காணாமல் போன இரண்டு சிறுவா்களின் உடல்கள் ஜேஜே காலனிக்கு அருகிலுள்ள கால்வாயில் இருந்து மீட்கப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவ... மேலும் பார்க்க

கல்காஜி கோயில் சேவகா் கொலை வழக்கு: தனிப்படைகள் அமைத்து போலீஸ் தீவிர விசாரணை

கால்காஜி கோயிலில் 35 வயதான சேவகா் கொலை செய்யப்பட்ட வழக்கில் மீதமுள்ள குற்றவாளிகளைக் கைது செய்ய தில்லி காவல்துறை பல தனிப்படைகளை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது என்று அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழம... மேலும் பார்க்க