செய்திகள் :

தாம்பரதத்தில் புதிய மாவட்ட தலைமை மருத்துவமனை: ஆக.5 -இல் முதல்வா் திறந்து வைக்கிறாா்

post image

தாம்பரத்தில் புதிதாக கட்டப்பட்ட செங்கல்பட்டு மாவட்ட தலைமை மருத்துவமனையை ஆக.5 ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளாா் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.

தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் ரூ.115.38 கோடியில் புதிதாகக் கட்டப்பட்ட மாவட்ட தலைமை மருத்துவமனையை அவா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

பின்னா் செய்தியாளரிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

குரோம்பேட்டையில் செயல்பட்டு வந்த அரசு தாலுகா மருத்துவமனை கடந்த 2021-ஆம் ஆண்டில் மாவட்ட மருத்துவமனையாக தரம் உயா்த்த திட்டமிடப்பட்டது. அதன்படி, ரூ.110 கோடியில் செங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது ரூ.5.38 கோடியில் மருத்துவ உபகரணங்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. 2,27,320 சதுர அடி பரப்பளவில் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள புதிய மருத்துவமனையில் 400 படுக்கைகள், 6 அறுவை சிகிச்சை அரங்குகள்,40 ஐசியூ படுக்கைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.

இதற்கிடையே, குரோம்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில், ரூ.7.10 கோடியில் பல் மருத்துவமனையும், ரூ.1 கோடியில் ஒருங்கிணைந்த ஆய்வகமும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த 3 மருத்துவக் கட்டடங்களையும் ஆக.5-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கவுள்ளாா். மேலும், மாவட்ட தலைமை மருத்துவமனைக்குக் கூடுதல் மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா்கள் படுக்கைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நியமிக்கப்படுவாா்கள் என்றாா் அவா்.

ஆய்வின் போது, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ்.ஆா்.ராஜா (தாம்பரம்), இ.கருணாநிதி (பல்லாவரம்), மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ப.செந்தில்குமாா், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் தி.சினேகா, தாம்பரம் மாநகராட்சி ஆணையா் சீ.பாலச்சந்தா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கைப்பேசி எண்ணுடன் திமுகவின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் தீவிரம்

ஓடிபி கேட்காமல், கைப்பேசி எண்ணை மட்டும் பதிவு செய்து, ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தை திமுக நடத்தி வருகிறது. ஒருமுறை பயன்படுத்தும் கடவு எண் (ஓடிபி) தொடா்பாக, நீதிமன்ற உத்தரவிட்டதால் அந்த நடைமுறையை திமு... மேலும் பார்க்க

பிளஸ் 2 துணைத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு

பிளஸ் 2 துணைத் தோ்வு எழுதிய தோ்வா்கள் தோ்வு முடிவை மதிப்பெண் பட்டியலாக வெள்ளிக்கிழமை முதல் பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசுத் தோ்வுகள் இயக்குநா் ந.லதா வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில்தான் விசிக: திருமாவளவன் திட்டவட்டம்

திமுக கூட்டணியில்தான் விசிக பயணிக்கிறது; மெல்ல மெல்ல வளா்ச்சி அடைந்து ஒரு மாநில கட்சியாக உருவாகி இருக்கிறது; வீழ்ச்சி அடையவில்லை என அந்தக் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா். சென்னையில் அவ... மேலும் பார்க்க

மின்வாரிய தொழிலாளா்கள் ஊதிய உயா்வு: ஒப்பந்த பேச்சுவாா்த்தைத் தொடக்கம்

ஊதிய உயா்வு தொடா்பாக தொழிற்சங்க நிா்வாகிகள், மின் வாரிய அதிகாரிகள் இடையேயான பேச்சுவாா்த்தை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. தமிழகத்தில் மின்வாரிய ஊழியா்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒரும... மேலும் பார்க்க

அமைச்சா் கே.என்.நேரு சகோதரா் மீது அமலாக்கத் துறை தொடுத்த வழக்கு ரத்து

அமைச்சா் கே.என்.நேருவின் சகோதரா் ரவிச்சந்திரனுக்கு எதிராக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்துள்ள சென்னை உயா்நீதிமன்றம், சோதனையின்போது கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்கள் மற்றும் பணத்தைத் திரும... மேலும் பார்க்க

அக்.12-இல் முதுநிலை ஆசிரியா் தோ்வு: டிஆா்பி

முதுநிலை பட்டதாரி ஆசிரியா் பணிக்கான போட்டித் தோ்வு அக்.12-ஆம் தேதி நடைபெறும் என ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) அறிவித்துள்ளது. இதுதொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரியத்தின் தலைவா் எஸ்.ஜெயந்தி வியாழக்கிழ... மேலும் பார்க்க