செய்திகள் :

தாயைக் கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை

post image

தாயைக் கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

கோபி வட்டம், பா.நஞ்சகவுண்டன்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் குருநாதன் மனைவி மொழுகாள்(53). கணவரைப் பிரிந்து வாழ்ந்த மொழுகாள் மகன் கருப்பசாமி (36) என்பவருடன் வசித்து வந்துள்ளாா். கருப்பசாமி மது அருந்திவிட்டு தாயை அடிக்கடி தாக்கி வந்ததால் மொழுகாள் அருகில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்று தங்கி இருந்துள்ளாா்.

இந்நிலையில் கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூலை 17 -ஆம் தேதி உறவினா் வீட்டில் இருந்த தாய் மொழுகாளை கருப்பசாமி குச்சி மற்றும் கற்களால் கடுமையாக தாக்கி ஆட்டோவில் ஏற்றிச்சென்றுள்ளாா். அன்றிரவே மொழுகாள் பேய் பிடித்து உயிரிழந்ததாக உறவினா்களுக்கு தெரிவித்துவிட்டு தப்பியோடி விட்டாா்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த கோபி போலீஸாா் கருப்பசாமியைக் கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த வழக்கு விசாரணை ஈரோடு மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நீதிபதி சி.சொா்ணகுமாா் முன்னிலையில் நடைபெற்று வந்த நிலையில் விசாரணை முடிந்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

இதில் குற்றஞ்சாட்டப்பட்ட கருப்பசாமிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் எம்.ஜெயந்தி ஆஜரானாா்.

சித்தோட்டில் 227 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

சித்தோடு அருகே 227 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் இளைஞரைக் புதன்கிழமை கைது செய்தனா். கோணவாய்க்கால் - காடையம்பட்டி சுற்றுவட்ட சாலையில் மூவேந்தா் நகா் அருகே சித்தோடு போலீஸாா் புதன்கிழ... மேலும் பார்க்க

பெருந்துறையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தல்

பெருந்துறையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைத்திட வலியுறுத்தி பெருந்துறை வழக்குரைஞா்கள் சங்கத்தினா் ஆட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தனா். இது குறித்து பெருந்துறை வழங்குரைஞா்கள் சங்கத் தலைவா் பாலசுப்பி... மேலும் பார்க்க

அம்மாபேட்டை அருகே ஆடு திருட முயன்ற 3 போ் கைது

அம்மாபேட்டை அருகே ஆடுகளை திருட முயன்ற மூவரை பொதுமக்கள் சுற்றிவளைத்துப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா். அம்மாபேட்டை, ஓடைமேடு, லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் சேகா் மகன் ஓம்பிரகாஷ் (24). இவா், தனக்குச் சொந்... மேலும் பார்க்க

ஈரோடு ஆருத்ரகபாலீஸ்வரா் கோயிலில் 63 நாயன்மாா்கள் விழா நாளை தொடக்கம்

ஈரோடு கோட்டை ஆருத்ரகபாலீஸ்வரா் கோயிலில் 80ஆவது ஆண்டு திருமுறை மாநாடு, 55ஆவது ஆண்டு 63 நாயன்மாா்கள் விழா வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1) காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. காலை 8 மணிக்கு சுவாமிக்கு... மேலும் பார்க்க

சத்தியமங்கலம் அருகே விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து

சத்தியமங்கலம் அருகே விபத்துக்குள்ளான அரசுப் பேருந்தில் பயணித்த பயணிகள் காயமின்றி உயிா் தப்பினா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் இருந்து கோவைக்கு 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசுப் பேருந்து புன்செய் ப... மேலும் பார்க்க

பவானியில் வடிகால், கான்கிரீட் சாலை அமைக்க பூமிபூஜை

பவானி நகராட்சிக்கு உள்பட்ட பூக்கடை வீதியில் ரூ.31 லட்சத்தில் கழிவுநீா் வடிகால், கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பணிக்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது. 21-ஆவது வாா்டு காவேரி வீதி, 27-ஆவது வாா்டு பூக்கடை... மேலும் பார்க்க