செய்திகள் :

தாய்லாந்து: நான்கு வயது இரட்டையர்களுக்கு திருமணம் நடத்திய குடும்பம் – வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

post image

தாய்லாந்தில் நான்கு வயது இரட்டையர்களுக்கு திருமணம் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தாய்லாந்தின் கலாசின் மாநிலத்திலுள்ள ப்ரச்சயா ரிசார்டில் (Prachaya Resort) நான்கு வயது இரட்டையர்களுக்குள் திருமணம் நடத்தும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

தட்சனப்போர்ன் சோர்ன்சாய் மற்றும் தட்சதோர்ன் என்ற இரட்டையர்களுக்கு தான் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.

வைரலாகும் வீடியோவின்படி,இந்த திருமண நிகழ்வில் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், மற்றும் புத்த துறவிகள் கலந்து கொண்டுள்ளனர்.

rep image

சிறுமி தன் இரட்டையர் சகோதரரின் கன்னத்தில் முத்தமிட்டு, பிறகு திருமண சடங்குகளைச் செய்து முடிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதை தொடர்ந்து புத்த துறவிகள் குழந்தைகளை ஆசீர்வதித்தனர்.

இந்த திருமண நிகழ்வு ஜூன் 28ஆம் தேதி நடைபெற்றதாக சிங்கப்பூரைச் சேர்ந்த Must Share News தெரிவித்துள்ளது. திருமணத்தின் போது குடும்பம் நான்கு மில்லியன் பாத் பணம் மற்றும் தங்கம் வரதட்சணையாக அளித்ததாக கூறப்படுகிறது.

சமூக வலைதளங்களில் இந்த வீடியோ பரவலாக பகிரப்பட்டு பல்வேறு கருத்துக்களை பெற்று வருகிறது. சிலர் இதனை ஒரு கலாசார மரபாக ஏற்றுக்கொண்டாலும், சிலர் விமர்சித்து வருகின்றனர்.

இதுபோன்ற இரட்டையர் திருமணம் தாய்லாந்தில் ஒரு சடங்காக கருதப்படுகிறது.

தாய்லாந்து மக்களின் நம்பிக்கையின்படி, இதுபோன்ற பெண்-ஆண் இரட்டையர்கள் கடந்த ஜென்மத்தில் காதலர்களாக இருந்தவர்கள் என்றும், அவர்கள் இந்த ஜென்மத்தில் இரட்டையர்களாக பிறந்ததால், எதிர்காலத்தில் ஏற்படும் துன்பங்கள், நோய்கள் போன்ற கெட்ட விஷயங்களை தவிர்க்க இந்த சடங்கு நடத்தப்படுவதாக நம்பப்படுகிறது.

இது பிள்ளைகளுக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் நலன் தரும் என்றும் அவர்களது வாழ்க்கை இனிமையாக அமையும் என்றும் குடும்பத்தினர் நம்புகின்றனர்.10வது பிறந்தநாளுக்கு முன் இச்சடங்கு நடத்தப்பட வேண்டும் என்பதே அங்குள்ள மரபாகும்.

இந்த திருமணம் சட்டபூர்வமாக செல்லுபடியாகாது என்பதும், இது வெறும் சடங்காக மட்டுமே நடக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Gurdeep Kaur: இந்தோரின் ஹெலன் கெல்லர் என்று இவர் கொண்டாடப் படுவது ஏன்? இவர் செய்த சாதனை என்ன?

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தோர் நகரைச் சேர்ந்தவர் குர்தீப் கவுர். விழித்திறன், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் சவால் கொண்ட இவர், வருமான வரித்துறையில் அரசு உத்தியோகம் பெற்று வரலாற்றுச் சாதனை ப... மேலும் பார்க்க

AI உதவியுடன் 18 ஆண்டுகளுக்கு பின் கர்ப்பமான பெண் - எப்படி சாத்தியமாகியது?

18 ஆண்டுகளாக குழந்தை பெற முயன்ற அமெரிக்க தம்பதி, செயற்கை நுண்ணறிவால் (AI) கர்ப்பம் அடைந்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பல இடங்களில் IVF சிகிச்சை மேற்கொண்டபோதிலும், முயற்சிகள் தோல்வியடைந்திருக்கிறது. காரண... மேலும் பார்க்க

Nipah virus: கேரளாவை மீண்டும் அச்சுறுத்தும் நிபா வைரஸ் - சுகாதார அமைச்சர் சொல்வதென்ன?

கேரளாவில் நிபா வைரஸ் மீண்டும் பரவி வருகின்றது என்பதால் மக்கள் மத்தியில் புதிய அச்சம் உருவாகியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு கோழிக்கோட்டில் கடுமையான மூளைக்காய்ச்சல் (AES) நோயால் பாதிக்கப்பட்டு உயிரி... மேலும் பார்க்க

12-ம் வகுப்பில் 26 முறை தோல்வி; ஆனாலும் பி.ஹெச்டி முடித்து முனைவரான பஞ்சாயத்து தலைவர்!

படிப்புக்கு எல்லையே கிடையாது என்று சொல்வார்கள். சிலர் முதுமை காலத்திலும் படிப்பை தொடருவார்கள். குஜராத் மாநிலத்தில் பஞ்சாயத்து தலைவர் ஒருவர் பி.எச்.டி முடித்து முனைவர் பட்டம் பெற்ற பிறகும் 12வது வகுப்ப... மேலும் பார்க்க

துபாயில் திருடப்பட்ட ஆப்பிள் ஏர்பாட்ஸ்; பாகிஸ்தானுக்கு பயணம் செய்து மீட்ட பிரிட்டிஷர்- எப்படி?

துபாயில் திருடப்பட்ட ஆப்பிள் ஏர்பாட்ஸ்களை பாகிஸ்தானுக்கு பயணம் செய்து பிரிட்டிஷைச் சேர்ந்த youtuber மீட்டுள்ளார். பிரிட்டிஷ் யூடியூபரான லார்ட் மைல்ஸ் ஒரு வருடத்திற்கு முன்பு துபாய் ஹோட்டலில் தனது ஏர்ப... மேலும் பார்க்க

அமெரிக்கா: இறுதிச்சடங்கில் ஹெலிகாப்டரிலிருந்து வீசப்பட்ட டாலர்கள்; வைரல் வீடியோவில் பின்னணி என்ன?

அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபரும் பந்தய கார் ஓட்டுபவருமான டாரெல் தாமஸ் ஜூன் 15 அன்று தனது 58 வயதில் காலமானார்.இவரின் மரணத்தில் கூட பலரும் அவரை திரும்பிப் பார்க்க வேண்டும் என்று இவரின் கடைசி விருப்பத்... மேலும் பார்க்க