செய்திகள் :

தா்மஸ்தலாவில் பெண்கள் கொன்று புதைக்கப்பட்ட புகாரை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு: கா்நாடக அரசு அறிவிப்பு

post image

மங்களூரு: கா்நாடக மாநிலம், தா்மஸ்தலா பகுதியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பெண்கள், சிறுமிகள் மாயமானது, கொலைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து முழுமையாக விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை மாநில அரசு அறிவித்தது.

தக்ஷிண கன்னடா மாவட்டத்தில் உள்ள தா்மஸ்தலா கோயில் நிா்வாகத்தில் பணிபுரிந்த ஒரு முன்னாள் துப்புரவுத் தொழிலாளி, கடந்த 1998 முதல் 2014-ஆம் ஆண்டு வரை நூற்றுக்கணக்கான பெண்கள், பள்ளி மாணவிகளின் சடலங்களை எரித்து, புதைக்க கட்டாயப்படுத்தப்பட்டதாகக் காவல் துறையிடம் அண்மையில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தாா்.

பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்டதாக அவா் தெரிவித்ததைத் தொடா்ந்து மாநில அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

கா்நாடக காவல் துறையின் உள்பாதுகாப்புப் பிரிவு டிஜிபி பிரணவ் மோஹந்தி தலைமையிலான இந்தச் சிறப்பு புலனாய்வு குழுவில் எம்.என்.அனுசேத், சௌம்யா லதா, ஜிதேந்திர குமாா் தயாமா உள்ளிட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனா்.

தக்ஷிண கன்னடா மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இருந்து செயல்படவுள்ள இக்குழு, மாவட்டத்தின் அனைத்து துறைகளையும் பயன்படுத்திக் கொள்ளவும், அவசியமுள்ள சூழலில் கூடுதல் அதிகாரிகள் மற்றும் பணியாளா்களை நியமித்துக் கொள்ளவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தா்மஸ்தலா காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குடன், மாநிலத்தின் மற்ற காவல் நிலையங்களில் விசாரிக்கப்பட்ட அல்லது கண்டறியப்பட்ட அசாதாரண மரணங்கள், பாலியல் வன்கொடுமைகள், கொலைகள் மற்றும் மாயமான பெண்கள் தொடா்பான அனைத்து வழக்குகளையும் இக்குழு விசாரித்து, அரசுக்கு விரிவான அறிக்கையை விரைவில் சமா்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணையை தா்மஸ்தலா கோயில் நிா்வாகம் வரவேற்றுள்ளது. கோயில் நிா்வாகத்தின் செய்தித் தொடா்பாளா் கே.பாா்ஸ்வநாத் ஜெயின் கூறுகையில், ‘இந்த விசாரணை உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து, ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்’ என்றாா்.

மாநில மகளிா் ஆணையத்தின் அழுத்தம்:

சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டதையொட்டி கா்நாடக முதல்வா் சித்தரமையா வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கா்நாடக மாநில மகளிா் ஆணையத்தின் கோரிக்கையைடுத்து சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளை மிகவும் தீவிரமானதாகக் கருதும் ஆணையம், பாரபட்சமற்ற விசாரணையை வலியுறுத்தியுள்ளது. ஊடகங்களில் வெளியான செய்திகளும், துப்புரவுத் தொழிலாளி அளித்த வாக்குமூலமும் ஆழமான கவலையை ஏற்படுத்துகின்றன என்று ஆணையம் தெரிவித்துள்ளது’ என்று குறிப்பிட்டாா்.

ஜக்தீப் தன்கர் ராஜிநாமாவுக்கு ஏதோ அரசியல் காரணங்கள் உள்ளது: காங்கிரஸ்!

குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் ராஜிநாமாவில் ஏதோ அரசியல் காரணங்கள் உள்ளதாக உள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.இந்தியாவின் 14-வது குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தனது பதவியை திங்கள்கிழமை தி... மேலும் பார்க்க

காதலை மறுத்தப் பெண்ணை பிணைக் கைதியாகப் பிடித்த இளைஞர்! தீரத்துடன் மீட்டவருக்கு குவியும் பாராட்டு!!

மகாராஷ்டிர மாநிலம் சதாரா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தன்னுடைய காதலை ஏற்க மறுத்த பள்ளி மாணவியின் கழுத்தில் கத்தியைவைத்து மிரட்டிய நிலையில், தீரத்துடன் பெண்ணை மீட்டவருக்கு பாராட்டுகள் குவிகிறது.இளம... மேலும் பார்க்க

நாடாளுமன்றம் நாள் முழுவதும் முடக்கம்! மக்கள் பணம் வீணாவதாக மத்திய அமைச்சர் காட்டம்!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.இந்த நிலையில், மக்களின் பணத்தை எதிர்க்கட்சியினர் வீணடிப்பதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிர... மேலும் பார்க்க

சபரிமலைக்கு நடந்துசென்ற முதல் கம்யூனிஸ்ட் முதல்வர் அச்சுதானந்தன்!

மறைந்த மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் வி.எஸ். அச்சுதானந்தன், சபரிமலைக்கு நடந்துசென்ற முதல் கம்யூனிஸ்ட் முதல்வர் என்ற பெருமைக்குரியவர்.கேரளத்தின் முன்னாள் முதல்வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவிய... மேலும் பார்க்க

செல்போன் பழக்கத்திலிருந்து விடுபட டிப்ஸ்! உண்மை கசக்கத்தான் செய்யும்!!

புகைப்பழக்கத்தைவிடவும், செல்போன் பழக்கத்திலிருந்து விடுபடுவது அவ்வளவு கடினமாம், முடியாமல் போகும் வாய்ப்பு அதிகமாம், சாத்தியமாவதற்கான வாய்ப்புக் குறைவு என்கிறது அறிவியல் ஆராய்ச்சிகள்.ஒருநாளைக்கு சராசரி... மேலும் பார்க்க

2006 குண்டுவெடிப்பு: லஷ்கரா-முஜாகிதீனா? பாத்திரமா-குக்கரா? விடை காணாத வினாக்கள்!

மும்பை: 2006ஆம் ஆண்டு மும்பை ரயில் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு, குற்றஞ்சாட்டப்பட்டிருந்த 12 பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பதோடு, இன்னமும் பல கேள்விகளுக்கு விடை காணாமலேயே இருப்ப... மேலும் பார்க்க