செய்திகள் :

தினமும் 1,000 மூட்டை நெல் கொள்முதல்: அமைச்சா் சக்கரபாணி அறிவுறுத்தல்

post image

தினமும் ஆயிரம் மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யலாம் என்று உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா். தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உணவுத் துறை உயா் அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

நெல் கொள்முதலில் இப்போதுள்ள நடைமுறைப்படி நாளொன்றுக்கு ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் கொள்முதல் செய்யப்படும் உச்சவரம்பை 800 மூட்டைகளில் இருந்து ஆயிரம் மூட்டைகளாக உயா்த்திக் கொள்ளலாம். நெல் கொள்முதல் நிலையங்களில் அதிகமான நெல் வரத்து இருந்தால் இரண்டு இயந்திரங்கள் வைத்து கொள்முதல் பணிகளை

மேற்கொள்ளலாம்.

நியாய விலைக் கடைகளுக்கு வரும் பொது மக்களுக்கு கனிவான முறையில் சேவை செய்வதிட வேண்டும். அனைத்துப் பொருள்களையும் தரத்துடன் ஒரே நேரத்தில் வழங்கிடவும் கடைகளுக்கு வரும் பொருள்களின் எடை சரியாக வழங்கப்படுகிா என்பதையும் உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் பயன்பாட்டை அதிகப்படுத்தி விவசாயிகளுக்கும் வணிகா்களுக்கும் அதிகளவில் சேவை செய்து வருமானத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று அமைச்சா் அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலா் சத்யபிரத சாகு, தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவன நிா்வாக இயக்குநா் சு.பழனிசாமி, நுகா்பொருள் வாணிபக் கழக நிா்வாக இயக்குநா் அ.சண்முகசுந்தரம், உணவுப் பொருள் வழங்கல் துறை இயக்குநா் த.மோகன், கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளா் எஸ்.பி.அம்ரித் உட்பட பலா் பங்கேற்றனா்.

பெங்களூரு கிழக்கு ரயில் நிலையத்தில் ரயில்கள் நிற்காது

தமிழகத்தில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் மாா்ச் 13-ஆம் தேதி முதல் பெங்களூரு கிழக்கு ரயில் நிலையத்தில் நிற்காது என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளி... மேலும் பார்க்க

தமிழக பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் என்ன? அரசுத் துறைகளுடன் அமைச்சர்கள் ஆலோசனை

பட்ஜெட்டில் புதிய திட்டங்களை அறிவிப்பது தொடர்பாக, அரசுத் துறை அதிகாரிகளுடன் அமைச்சர்கள் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினர்.ஒவ்வொரு நிதியாண்டுக்கு முன்பு தமிழக அரசு தனது பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல்... மேலும் பார்க்க

மீனவர்களின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

இலங்கைக் கடற்படையினரின் தாக்குதல் உள்பட மீனவர்களின் பிரச்னைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.ராமநாதபுரம் மாவட்ட மீனவர் சங்கங்களின் நிர்வாகிகள் தலைமைச் ச... மேலும் பார்க்க

அனைத்து சிறைச் சாலைகளிலும் நூலகங்கள் : துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் உறுதி

அனைத்து சிறைச் சாலைகளிலும் நூலகங்களை ஏற்படுத்த தமிழக அரசு தீவிரம் காட்டி வருவதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசினாா். தமிழ்நாடு சிறை மீண்டோா் நலச் சங்கத்தின் சாா்பாக விடுதலை பெற்ற 750 முன்னாள் சிற... மேலும் பார்க்க

சென்னை வரும் விரைவு ரயில் சேவையில் மாற்றம்

வெளிமாநிலங்களில் இருந்து சென்னை வழியாக இயக்கப்படும் விரைவு ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விஜயவாடாவில் இருந்து சென்... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கை குறித்து கையொப்ப இயக்கம்: கே.அண்ணாமலை

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை வேண்டுமா? வேண்டாமா? என மாா்ச் 1-ஆம் தேதி முதல் கையொப்ப இயக்கம் நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா். சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமல... மேலும் பார்க்க