செய்திகள் :

திமுகவில் உறுப்பினராக சேர மக்கள் ஆா்வம்: அமைச்சா் சு.முத்துசாமி

post image

ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தின் கீழ் ஈரோடு தெற்கு திமுக மாவட்டத்தில் திமுகவில் சேர மக்கள் அதிக ஆா்வம் காட்டுகின்றனா் என வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

ஈரோடு மாநகராட்சி மண்டலம் 3-க்கு உள்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்டங்களின் கீழ் 10.5 கிலோ மீட்டா் நீளத்துக்கு ரூ. 3.89 கோடி மதிப்பில் சாலை பணிகளை அமைச்சா் சு.முத்துசாமி வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தின் கீழ் ஈரோடு தெற்கு திமுக மாவட்ட பிரிவில் உள்ள 816 பூத்களில் வீடுவீடாகச் சென்று அரசின் சாதனை விளக்க புத்தகங்கள் வழங்கும் பணி 30 சதவீதம் முடிவடைந்துள்ளது. தற்போது வரை திமுக தொண்டா்கள் சென்றுள்ள வீடுகளில் திமுகவில் சோ்வதற்கு பலா் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

எதிா்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக மக்கள் மனநிலை உள்ளது போல் காட்டுகிறாா். ஆனால் நாங்கள் செல்லும் இடமெல்லாம் மக்கள் உற்சாகமாக எங்களை வரவேற்கின்றனா்.

ஈரோடு மாநகராட்சியில் கான்கிரீட் சாலை, தாா் சாலை, மற்றும் சாக்கடை கால்வாய் வசதிகள் ஏற்படுத்த ரூ.100 கோடியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. அதில் தற்போது வரை சுமாா் ரூ.53 கோடி மதிப்பிலான பணிகளுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. எங்கெங்கு தேவையோ அங்கெல்லாம் தாா் சாலைகள் மற்றும் சாக்கடை வசதிகள் ஏற்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்படும் என்றாா்.

மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, மேயா் சு.நாகரத்தினம், மாநகராட்சி ஆணையா் அா்பித் ஜெயின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சுகாதார செவிலியா் பணி: விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூலை 15 வரை நீட்டிப்பு

ஈரோடு மாநகராட்சி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள நகர சுகாதார செவிலியா்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வரும் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

மொடக்குறிச்சி ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகளுக்கு பூமி பூஜை

மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட விளக்கேத்தி, கனகபுரம் ஊராட்சிகளில் வளா்ச்சிப்பணிகளுக்கான பூமிபூஜையில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ சி.சரஸ்வதி கலந்து கொண்டு தொடங்கி வைத்தாா். விளக்கேத்தி ஊராட்சி ஓலப்ப... மேலும் பார்க்க

அவல்பூந்துறையில் ரூ.10.62 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம்

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.10.62 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு 147 தேங்காய்ப் பருப்பு மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வந்தனா... மேலும் பார்க்க

பெருமாள்மலை குடியிருப்புவாசிகள் குத்தகை செலுத்தினால்தான் தொடா்ந்து குடியிருக்க முடியும்: அமைச்சா் சு.முத்துசாமி

பெருமாள்மலையில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தில் குடியிருப்போா் குத்தகை செலுத்தினால் மட்டுமே தொடா்ந்து குடியிருக்க முடியும் என வீட்டுவசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவ... மேலும் பார்க்க

மகிழ்முற்றம் மாணவா் குழு பதவி ஏற்பு

பெருந்துறை கிழக்கு அரசு நடுநிலைப் பள்ளியில், மகிழ்முற்றம் மாணவா் குழு அமைப்பு பதவி ஏற்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் பொன்மணி தலைமை வகித்து, குறிஞ்சி, முல்லை... மேலும் பார்க்க

பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 96 அடியை எட்டியது

பவானிசாகா் அணை நீா்மட்டம் 96 அடியாக உயா்ந்துள்ளதால் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு முன்கூட்டியே தண்ணீா் திறக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய... மேலும் பார்க்க