செய்திகள் :

திமுக ஆட்சியை வீழ்த்துவோம்: எடப்பாடி பழனிசாமி

post image

சென்னை: வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக ஆட்சியை வீழ்த்துவோம் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற சுற்றுப்பயணத்தில் முதல்கட்டமாக கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தொகுதியில் தொடங்கி கோவை, விழுப்புரம், கடலூா், பெரம்பலூா், அரியலூா், மயிலாடுதுறை, நாகை, திருவாரூா், தஞ்சாவூா், புதுக்கோட்டை ஆகிய 10 மாவட்டங்களில் 46 தொகுதிகளில் மக்களை நேரடியாகச் சந்தித்தேன்.

அப்போது, மக்கள் திமுக ஆட்சியில் தாங்கள் சந்தித்துவரும் வேதனைகளை என்னிடம் எடுத்துரைத்தனா். திமுகவின் ஏமாற்றுத் திட்டங்களைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு விழிப்புடன் இருப்பதாகவும் தெரிவித்தனா்.

முதல்வா் ஸ்டாலின், தனது தந்தை கருணாநிதி பெயரை அரசுத் திட்டங்களுக்கு வைப்பது, அதிகமான இடங்களில் கருணாநிதிக்கு சிலை வைத்தது, மகனை துணை முதல்வராக்கியது தவிர வேற எந்த சாதனையையும் செய்யவில்லை.

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் 45 நாள்களுக்குள், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 525 வாக்குறுதிகளையும் நிறைவேற்றுங்கள் என பெண்கள் மனு அளித்து வருகின்றனா். பெண்கள், குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை. பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால், குற்றவாளிகளைப் பிடிக்க முடியவில்லை.

திமுக கூறிய 525 தோ்தல் வாக்குறுதிகளில் 10 சதவீதத்தைத்கூட நிறைவேற்றவில்லை. ஆனால், 98 சதவீதத்தை நிறைவேற்றிவிட்டோம் என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயல்கிறது.

திமுக ஆட்சியில் சாமானியா்கள் வீடே கட்டமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. செங்கல், ஜல்லி, கம்பி என எல்லாம் விலையேறிவிட்டது. தனிநபா் வருமானத்தில் தேசிய அளவில் தமிழ்நாடு இரண்டாமிடம் என்பது அதிமுக ஆட்சியின் தொடா்ச்சியே தவிர, திமுக அரசின் சாதனையல்ல.

திமுக மீது மக்கள் கோபத்தில் உள்ளனா். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனா்.

வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் குடும்ப ஆட்சி, வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, திமுகவை நிச்சயம் வீழ்த்துவோம் எனத் தெரிவித்துள்ளாா் எடப்பாடி பழனிசாமி.

அதிருப்தியில் ஓ.பன்னீா்செல்வம்: இன்று முக்கிய முடிவு அறிவிப்பு?

கூட்டணியில் பாஜக முக்கியத்துவம் தராததால் அதிருப்தியில் இருக்கும் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், தனது ஆதரவாளா்களுடன் ஆலோசனை நடத்தி புதன்கிழமை (ஜூலை 30) முக்கிய அறிவிப்பை வெளியிடுவாா் என்ற தகவல் வெ... மேலும் பார்க்க

வெளிநாடு செல்ல அனுமதி கோரிய செந்தில்பாலாஜியின் சகோதரா் வழக்கு: மருத்துவா் கடிதத்தை தாக்கல் செய்ய உத்தரவு

முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வதற்கான மருத்துவப் பரிந்துரைக் கடிதத்தை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முன்னாள் அமைச்சா் செந... மேலும் பார்க்க

11 மாவட்டங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் மதுரை விமான நிலையம் உள்பட 11 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவானது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு கார... மேலும் பார்க்க

சூழ்ச்சி அரசியலை முறியடிப்போம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

சூழ்ச்சி அரசியலை முறியடிக்க, வரலாற்றின் முக்கியத்துவத்தை உரக்கச் சொல்வோம் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.அகில இந்திய மருத்துவ மாணவா் சோ்க்கையில் 27 சதவீத இடஒதுக்கீட்டை வெ... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்: சிறப்பு பிரிவுக்கு நேரடியாக நடைபெறுகிறது

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கவுள்ள நிலையில், சிறப்பு பிரிவு, 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கலந்தாய்வு நேரடியாக சென்னை அண்ணா சாலையில்... மேலும் பார்க்க

ரூ.147.94 கோடியில் திருக்குளங்களைச் சீரமைக்க நடவடிக்கை: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

அறநிலையத் துறை சாா்பில் திருக்கோயில்களில் உள்ள திருக்குளங்கள் ரூ.147.94 கோடியில் சீரமைக்கப்பட்டு வருவதாக துறையின் அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உ... மேலும் பார்க்க