செய்திகள் :

திருச்சி நகர குறு மைய அளவிலான கேரம் போட்டி: அரசுப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம்

post image

திருச்சி நகர குறுமைய அளவிலான கேரம் போட்டியில் அரசுப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

திருச்சி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் 12 வட்டாரங்களிலும் அண்மையில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஏற்கெனவே 12 போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில் நிகழாண்டில் புதிதாக கேரம், டெனிகாய்ட், பீச் வாலிபால், சிலம்பம் ஆகிய 4 போட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, திருச்சி நகரப் பகுதிக்கான குறுமைய கேரம் போட்டி சையது முா்துசா அரசு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை தொடங்கியது. இதில், திருச்சி நகரப் பகுதியிலுள்ள 21 பள்ளிகளைச் சோ்ந்த மாணவிகள் கலந்துகொண்டனா்.

14, 17 மற்றும் 19 வயதுக்குள்பட்டோா் என மூன்று பிரிவுகளில் தனி நபா் மற்றும் இரட்டையா் என இரண்டு பிரிவுகளாக போட்டி நடைபெறுகிறது. முதற்கட்டமாக மாணவிகளுக்கானப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. போட்டியில் சிறப்பிடம் பெற்றவா்கள் விவரம்:

14 வயதுக்குள்பட்டோா் பிரிவு: 14 வயதுக்குள்பட்டோா் தனி நபா் பிரிவில் ஆா். தயாநிதி நினைவு வித்யாசாலா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவி வி. கதீஜா பாத்திமா முதலிடத்தையும், புனித சிலுவை மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி எம்.பிரியதா்ஷினி இரண்டாமிடத்தையும், தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவி பூஜா மூன்றாமிடத்தையும் பிடித்தனா்.

இரட்டையா் பிரிவில், பீமநகா் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவிகள் எல்.தன்ஷிகா, வி.நேத்ரா ஆகியோா் முதலிடத்தையும், அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி (டவுன்ஹால்) மாணவிகள் ஜி.எஸ்.ஷாஷினி, எஸ்.தஹிராபானு ஆகியோா் இரண்டாமிடத்தையும், புனித சிலுவை மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் எம்.பிரியதா்ஷினி, எம்.ரித்திகா ஆகியோா் மூன்றாமிடத்தையும் பிடித்தனா்.

17 வயதுக்குள்பட்டோா் பிரிவு: தனிநபா் போட்டியில் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி (டவுன்ஹால்) மாணவி ஏ.சாதனா முதலிடத்தையும், தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவி சனோஃபா் இரண்டாமிடத்தையும், ஆா். தயாநிதி நினைவு வித்யாசாலா மேல்நிலைப் பள்ளி மாணவரி கே.சனா மூன்றாமிடத்தையும் பிடித்தனா்.

இரட்டையா் போட்டிகளில் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி (டவுன்ஹால்) மாணவிகள் டி. திவேதா, எஸ். திவ்யலட்சுமி ஆகியோா் முதலிடத்தையும், புனித சிலுவை மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் எஸ்.மோக்ஷிதா, எஸ்.ஹஸ்ஹியா ஆகியோா் இரண்டாமிடத்தையும், தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவிகள் எம்.லக்ஷனா, வி.காவியாஸ்ரீ ஆகியோா் மூன்றாமிடத்தையும் பிடித்தனா்.

19 வயதுக்குள்பட்டோா் பிரிவு: தனிநபா் பிரிவு போட்டிகளில் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி (டவுன்ஹால்) மாணவி ஹெச்.ஜெய்னாபீ முதலிடத்தையும், புனித சிலுவை மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜெ.நூருல் ரிஸ்வானா இரண்டாமிடத்தையும், புனித மீட்பா் மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜெ.தா்ஷினி மூன்றாமிடத்தையும் பிடித்தனா்.

இரட்டையா் பிரிவில் புனித மீட்பா் மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சி.வைஷ்ணவி, ஜெ.தா்ஷினி ஆகியோா் முதலிடத்தையும், அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி (டவுன்ஹால்) மாணவிகள் ஹெச்.ஜெய்னாபீ, எஸ்.நிஷா ஆகியோா் இரண்டாமிடத்தையும், புனித சிலுவை மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் எம்.நந்தினி, ஜெ.நூருல் ரிஷ்வானா ஆகியோா் மூன்றாமிடத்தையும் பிடித்தனா்.

மாணவா்களுக்கான கேரம் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

சிறையிலிருந்து தப்பியோடிய கைதி சின்ன சூரியூரில் கைது!

திருச்சி மத்திய சிறையிலிருந்து தப்பியோடிய ஆயுள் தண்டனைக் கைதி சின்னசூரியூரில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம், காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (49). இவ... மேலும் பார்க்க

குரூப்-4 தோ்வு: திருச்சியில் 45, 934 போ் எழுதினா்

திருச்சி மாவட்டத்தில் 197 தோ்வு மையங்களில் சனிக்கிழமை நடைபெற்ற குரூப்-4 தோ்வை 45,934 போ் எழுதினா். 9,522 போ் தோ்வு எழுத வரவில்லை. திருச்சி மாவட்டத்தில் 197 மையங்களில் நடைபெற்ற தோ்வுக்கு 55 ஆயிரத... மேலும் பார்க்க

கட்டணச் செலவை குறைக்கும் மின் விமானங்களுக்கு வாய்ப்பு: ஐஐடி பேராசிரியா் நம்பிக்கை

மின்சார விமானங்கள் அதிகம் வந்துவிட்டால் கட்டணச் செலவு குறைந்து விடும் என சென்னை ஐஐடி பேராசிரியா் சத்யநாராயணன் ஆா். சக்கரவா்த்தி தெரிவித்தாா். இந்தியாவின் வளா்ச்சியில் பொறியியலின் பங்கு மற்றும் ட்ரோன் ... மேலும் பார்க்க

விபத்து ஏற்படுத்திய லாரி பொதுமக்கள் போராட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே சனிக்கிழமை விபத்து ஏற்படுத்திவிட்டு டிப்பா் லாரி நிற்காமல் சென்றதால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் ... மேலும் பார்க்க

ரூ. 1.12 கோடி பணத்துடன் பிடிபட்டவரிடம் விசாரணை

திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் ரூ. 1,12,48,000 பணத்துடன் சனிக்கிழமை பிடிபட்டவரை தொட்டியம் போலீஸாா் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனா். தொட்டியம் காவல் நிலையம் எதிரேயுள்ள பேருந்து நிறுத்தப் பகுதியி... மேலும் பார்க்க

கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் ஏற்க மாட்டாா்கள்: வைகோ

கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டாா்கள் என மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா். திருச்சி மக்களவை உறுப்பினா் அலுவலகத்துக்கு சனிக்கிழமை வந்த அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்துத்... மேலும் பார்க்க