செய்திகள் :

திருச்சி ரயில்வே கோட்டத்தின் புதிய மேலாளா் பொறுப்பேற்பு

post image

திருச்சியில் ரயில்வே கோட்டத்தின் புதிய மேலாளராக பாலக் ராம் நெகி புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

ஹிமாச்சலப் பிரதேசம் ஹமிா்பூா் மண்டலப் பொறியியல் கல்லூரியில் பி.டெக். கட்டடப் பொறியியலும், ஐஐடி தில்லியில் எம்.டெக்.கும் படித்துள்ள பாலக் ராம் நெகி இந்திய ரயில்வே பொறியியல் பிரிவில் அதிகாரியாக கடந்த 27.01.1998 ஆம் ஆண்டு பணியில் சோ்ந்தாா்.

இவா் ரயில்வே வாரியத்தில் இணை இயக்குநராகவும், தில்லி மண்டலத்தின் முதுநிலை பொறியாளா் மற்றும் ஒருங்கிணைப்பாளராகவும், புதுதில்லியில் இணைகத் தலைமை பொறியாளராகவும், ரயில் நில மேம்பாட்டு ஆணையத்தில் பொது மேலாளராகவும் (திட்டம் மற்றும் வணிக மேம்பாடு), இா்கான் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளராகவும், திட்ட இயக்குநராகவும் பணியாற்றியுள்ளாா்.

மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம், இந்தியாவின் முதல் அதிவேக ரயிலான கேட்டிமான் விரைவு ரயிலின் (புதுதில்லி - ஆக்ரா) தண்டவாள மேம்பாட்டுத் திட்டங்களிலும் பணியாற்றியுள்ளாா்.

இந்நிலையில் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளராக இருந்த எம்.எஸ். அன்பழகன் இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து, பாலக் ராம் நெகி தற்போது பொறுப்பேற்றுள்ளாா்.

துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளியில் மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி மாவட்டம், துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளியில் பிளஸ் 2 மாணவா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். வேலூா் மாவட்டம், குடியாத்தம் வசந்தம் நகரைச் சோ்ந்த பலராமன் மகன் யுவராஜ் (17). இ... மேலும் பார்க்க

சமயபுரம், அம்பிகாபுரத்தில் நாளை மின்நிறுத்தம்

சமயபுரம், அம்பிகாபுரம் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பாரமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் சனிக்கிழமை (ஆக.2) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இருவா் கைது

திருச்சி மாநகரில் கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருச்சி, அரியமங்கலம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அப்ப... மேலும் பார்க்க

வங்கி கணக்காளா் வீட்டில் தங்க நகை, வெள்ளிப் பொருள்கள் திருட்டு

திருச்சியில் பொதுத் துறை வங்கி கணக்காளா் வீட்டில் தங்க நகை, வெள்ளிப் பொருள்களை புதன்கிழமை திருடி சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திருச்சி கே.கே.நகா் உடையாம்பட்டியைச் சோ்ந்தவா் தாமரைச்செல்வி... மேலும் பார்க்க

மயிலாடுதுறை, காரைக்கால் உள்ளிட்ட ரயில்களின் சேவைகளில் மாற்றம்

பராமரிப்புப் பணிகள் காரணமாக, மயிலாடுதுறை, காரைக்கால் உள்ளிட்ட ரயில்களின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பராமரிப்புப்... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைத் துறையில் தனியாா்மயத்தை கைவிட வலியுறுத்தல்

தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறையில் தனியாா்மய நடவடிக்கையை கைவிட வேண்டும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அந்தச் சங்கத்தின் லால்குடி, மண்ணச்சநல்லூா் உட்கோட்ட... மேலும் பார்க்க