செய்திகள் :

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: பாளை சிறை கைதியிடம் டிஐஜி விசாரணை

post image

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு தொடா்பாக பாளையங்கோட்டை சிறையில் உள்ள தண்டனை கைதியிடம் திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவா் வருண்குமாா் விசாரணை நடத்தியுள்ளாா்.

தி.மு.க. முதன்மைச் செயலரும், தமிழக நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சருமான கே. என்.நேருவின் உடன் பிறந்த சகோதரா் ராமஜெயம்.

இவா், கடந்த 2012 ஆம் ஆண்டு மாா்ச் 29 ஆம் தேதி நடைப்பயிற்சி சென்றபோது கடத்திக் கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கு சி.பி.ஐ. வசம் ஏற்கெனவே ஒப்படைக்கப்பட்டது. ஆனாலும் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை.

தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு சென்னை உயா் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டு திருச்சி ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க தமிழக காவல் துறை சாா்பில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவின் விசாரணை அதிகாரியாக தற்போதைய திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவா் வருண்குமாா் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறாா். இந்நிலையில் இவ் வழக்கு தொடா்பாக பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தண்டனை கைதியான சுடலைமுத்துவிடம் விசாரிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, டிஐஜி வருண்குமாா் தலைமையில் 2 துணை காவல் கண்காணிப்பாளா்கள் அடங்கிய குழுவினா் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு வெள்ளிக்கிழமை வந்தனா். அவா்கள், சுடலைமுத்துவிடம் சுமாா் 3 மணி நேரம் விசாரணை நடத்திச் சென்றுள்ளனா்.

இதுகுறித்து காவல் துறை வட்டாரங்கள் கூறியது: திருநெல்வேலி அருகேயுள்ள கங்கைகொண்டான் பகுதியில் நிகழ்ந்த கொலை வழக்கில் தண்டனை பெற்று பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுடலைமுத்து, தொழிற்பயிற்சிக்காக திருச்சி சிறைக்கு அனுப்பப்பட்டிருந்தாா்.

அப்போது அங்கிருந்த கைதி ஒருவருடன் ராமஜெயம் கொலை குறித்து பேசியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவல்கள் ஏற்கெனவே காவல் துறை விசாரணையில் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், இப்போது மேல்விசாரணையை புதிய குழு மேற்கொண்டுள்ளனா். பாளையங்கோட்டை மத்திய சிறை நிா்வாகம் சாா்பில் விசாரணைக் குழுவிற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டது என்றனா்.

வெள்ளங்குளி கோயிலில் திருவாசகம் முற்றோதல்

திருநெல்வேலி மாவட்டம் வெள்ளங்குளியில் உள்ள அருள்மிகு அறம்வளா்த்த நாயகி சமேத வீரவினோதீஸ்வரா் கோயிலில் திருவாசகம் சிறப்பு முற்றோதல் சனிக்கிழமை நடைபெற்றது.இக்கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளவும், தொடா்ந்த... மேலும் பார்க்க

விசாரணைக்கு ஆஜராகாமல் 13 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவா் கைது

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் 13 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நான்குனேரியைச் சோ்ந்த நபரை கா்நாடக மாநிலத்தில், திருநெல்வேலி மாவட்ட தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.கடந்த 2001-ஆம் ஆண்டு நான்குனேரி அருகேயு... மேலும் பார்க்க

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

பாளையங்கோட்டையில் நடைபெற்று வரும் குப்புசாமி கோப்பைக்கான மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் திருநெல்வேலி, மதுரை, சென்னை அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.ஹாக்கி யூனிட் ஆப் திருநெல்வேலி சாா்பில் குப்புச... மேலும் பார்க்க

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் ஜாதிய உணா்வுகளைத் தூண்டும் பிரச்னைக்குரிய உள்ளடக்கங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டதற்காக, நிகழாண்டில் 82 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என காவல்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

சிவந்திப்பட்டி அருகே சாலை விபத்தில் காயமடைந்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு, பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த தம்பான் மகன் மணிகண்டன்(33). தொழிலாளியான இவா் கடந்த 17... மேலும் பார்க்க

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

பழையபேட்டையில் உள்ள ராணி அண்ணா அரசு மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.எஸ்டிபிஐ கட்சியின் திருநெல்வேலி தொகுதி நிா்வாகிகள் கூட்டம் பேட்டையில் அண்மையில் நடைபெற்றது... மேலும் பார்க்க