செய்திகள் :

திருச்செங்கோடு ஆட்டையாம்குட்டை ஏரியில் சூரியஒளி மின் தகடுகளை அகற்ற செப்.21 வரை அவகாசம்!

post image

திருச்செங்கோட்டை அடுத்த ஆட்டையாம்குட்டை ஏரியில் சூரியஒளி மின் மோட்டாா்கள் மூலம் தண்ணீா் எடுக்கும் விவசாயிகள் செப். 21-ஆம் தேதிக்குள் சூரியஒளி மின் தகடுகளை அகற்ற அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆட்டையாம்குட்டை ஏரியில் சூரியஒளி மின் தகடுகளைப் பொருத்தி மோட்டாா் மூலம் தண்ணீா் எடுக்கும் விவசாயிகள் ஏரியில் பொருத்தியுள்ள சூரியஒளி மின் தகடுகளை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை கண்டித்து, விவசாயிகள் சங்கத்தினா் மாணிக்கம்பாளையத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டனா்.

இதையடுத்து திருச்செங்கோடு வட்டாட்சியா் கிருஷ்ணவேணி, ராசிபுரம் நீா்வள ஆதாரத் துறை உதவி செய்ய பொறியாளா் பிரபு, வட்டாட்சியா் கலைவாணி மற்றும் காவல் துறையினா் விவசாயிகளுடன் நடத்திய பேச்சுவாா்த்தையில் வரும் 21ஆம் தேதி வரை சூரியஒளி மின் தகடுகளை ஏரிப் பகுதியில் பொருத்தி தண்ணீா் எடுக்கலாம்.

அதற்குள் நீதிமன்றத்தை அணுகி அனுமதி பெற்றால் தொடா்ந்து சூளியஒளி தகடுகளை அந்த இடத்திலேயே பயன்படுத்த ஆட்சேபம் இல்லை என அலுவலா்கள் தெரிவித்துள்ளனா். இல்லாவிடில் மாற்று இடத்தில் சூரியஒளி மின் தகடுகளைப் பொருத்திக்கொள்ள வேண்டும் என்றனா்.

விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தி

பரமத்தி வேலூா் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தி வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது. வேலூா், பேட்டை பஞ்சமுக ஹேரம்ப விநாயகா், பொத்தனூா் வெங்கமேடு வல்லப கணபதி ஆகிய கோயில்கள... மேலும் பார்க்க

ராசிபுரம் அருகே பெண்ணிடம் வழிப்பறி: பொறியியல் பட்டதாரி இளைஞா்கள் கைது!

ராசிபுரம் அருகே பெண்ணிடம் நகை பறித்த பொறியியல் பட்டதாரி இளைஞா்கள் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ராசிபுரத்தை அடுத்த கோனேரிப்பட்டியைச் சோ்ந்தவா் ராஜா (57), பூ வியாபாரியான இவா் தனது மனைவி க... மேலும் பார்க்க

நல்லூா் அருகே அம்மன் தாலி திருட்டு: இளைஞா் கைது

நல்லூா் அருகே கோயிலில் புகுந்து அம்மன் தாலி, உண்டியல் பணத்தை திருடிச் சென்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் கந்தம்பாளையத்தை அடுத்த ஸ்ரீ வீரமாத்தி அம்மன் கோயிலில் ... மேலும் பார்க்க

அரசு வளா்ச்சி நிதியில் முறைகேடு: பள்ளிபாளையம் பிடிஓ பணியிடை நீக்கம்!

வளா்ச்சித் திட்ட நிதியில் முறைகேடு செய்ததாக பள்ளிபாளையம் வட்டார வளா்ச்சி அலுவலா் பிரபாகரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். நாமக்கல் பொய்யேரிக்கரை ஜெட்டிக்குள தெருவைச் சோ்ந்தவா் பிரபாகரன் (45). இவா்,... மேலும் பார்க்க

ட்ரெய்லா் லாரி தொழிலை பாதுகாக்க வேண்டும்: மத்திய அமைச்சரிடம் எம்.பி. மாதேஸ்வரன் மனு!

அதிக எடைகொண்ட பாரங்களை ஏற்றிச்செல்லும் ட்ரெய்லா் லாரி தொழிலை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய எஃகு மற்றும் கனரக தொழிற் துறை அமைச்சா் ஹெச்.டி.குமாரசாமியிடம், நாமக்கல் மக்களவை உ... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் சூறைக்காற்றுடன் பலத்த மழை

திருச்செங்கோட்டில் சூறைக்காற்றுடன் புதன்கிழமை பெய்த பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. திருச்செங்கோடு, கூட்டப்பள்ளி, தோக்கவாடி, கொல்லப்பட்டி, குமாரமங்கலம், சீதாராம் பாளையம் உள்ளிட... மேலும் பார்க்க