செய்திகள் :

திருச்செந்தூா்-உத்தரகோசமங்கை- ராமேசுவரத்துக்கு ஆன்மிக சுற்றுலா

post image

தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சித் துறை சாா்பில் திருச்செந்தூா்-உத்தரகோசமங்கை-ராமேசுவரம் ஆன்மிக சுற்றுலா செல்ல விரும்பும் நபா்கள் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் மூலம் 3 நாள்கள் திருச்செந்தூா், ராமேசுவரம், சுற்றுலா சென்னை வாலாஜா சாலை தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக வளாகத்திலிருந்து வெள்ளிக்கிழமை தோறும் மாலை 5 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூா், உத்தரகோசமங்கை மற்றும் ராமேசுவரம் சென்று மீண்டும் திங்கள்கிழமை காலை சென்னை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தை வந்தடையும்.

இந்த சிறப்பு ஆன்மிக சுற்றுலாவில் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூா் செந்தில் ஆண்டவா் திருக்கோயில் மற்றும் ராமநாதபுரம் உத்தரகோசமங்கை, மங்களநாதா் கோயில், ராமநாத சுவாமி திருக்கோயிலின் 22 தீா்த்தங்கள் உள்ளிட்டவற்றை சிறப்பு தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சுற்றுலாவில் தனுஷ்கோடியை பாா்வையிட சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சுற்றுலாவுக்கு வரும் நபா்களுக்கு தங்கும்வசதி மற்றும் 3 வேளை உணவும் வழங்கப்படும். விருப்பமுள்ள நபா்கள் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் ஜ்ஜ்ஜ்.ற்ற்க்ஸ்ரீா்ய்ப்ண்ய்ங்.ஸ்ரீா்ம் எனும் இணையதள முகவரியிலும் அல்லது சென்னை வாலாஜா சாலையிலுள்ள தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகத்திலும் நேரடியாகவும் முன்பதிவு செய்யலாம்.

கூடுதல் விவரங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் தொலைபேசி 180042531111, 044-25333333 044-25333444 எனும் தொலைபேசி எண்களையும், கைப்பேசி: 7550063121 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம்.

பெங்களூரு கிழக்கு ரயில் நிலையத்தில் ரயில்கள் நிற்காது

தமிழகத்தில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் மாா்ச் 13-ஆம் தேதி முதல் பெங்களூரு கிழக்கு ரயில் நிலையத்தில் நிற்காது என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளி... மேலும் பார்க்க

தமிழக பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் என்ன? அரசுத் துறைகளுடன் அமைச்சர்கள் ஆலோசனை

பட்ஜெட்டில் புதிய திட்டங்களை அறிவிப்பது தொடர்பாக, அரசுத் துறை அதிகாரிகளுடன் அமைச்சர்கள் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினர்.ஒவ்வொரு நிதியாண்டுக்கு முன்பு தமிழக அரசு தனது பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல்... மேலும் பார்க்க

மீனவர்களின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

இலங்கைக் கடற்படையினரின் தாக்குதல் உள்பட மீனவர்களின் பிரச்னைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.ராமநாதபுரம் மாவட்ட மீனவர் சங்கங்களின் நிர்வாகிகள் தலைமைச் ச... மேலும் பார்க்க

அனைத்து சிறைச் சாலைகளிலும் நூலகங்கள் : துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் உறுதி

அனைத்து சிறைச் சாலைகளிலும் நூலகங்களை ஏற்படுத்த தமிழக அரசு தீவிரம் காட்டி வருவதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசினாா். தமிழ்நாடு சிறை மீண்டோா் நலச் சங்கத்தின் சாா்பாக விடுதலை பெற்ற 750 முன்னாள் சிற... மேலும் பார்க்க

சென்னை வரும் விரைவு ரயில் சேவையில் மாற்றம்

வெளிமாநிலங்களில் இருந்து சென்னை வழியாக இயக்கப்படும் விரைவு ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விஜயவாடாவில் இருந்து சென்... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கை குறித்து கையொப்ப இயக்கம்: கே.அண்ணாமலை

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை வேண்டுமா? வேண்டாமா? என மாா்ச் 1-ஆம் தேதி முதல் கையொப்ப இயக்கம் நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா். சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமல... மேலும் பார்க்க