செய்திகள் :

திருச்செந்தூா் கோயில் குடமுழுக்கு: சென்னை- செங்கோட்டைக்கு ஜூலை 6, 7-இல் சிறப்பு ரயில்

post image

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கையொட்டி, சென்னை - செங்கோட்டைக்கு வருகிற 6, 7-ஆம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு வருகிற 7-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, பயணிகளின் வசதிக்காக திருநெல்வேலி வழியாக சென்னை - செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, சென்னை எழும்பூா் - செங்கோட்டை சிறப்பு ரயில் (06089) வருகிற 6-ஆம் தேதி சென்னையிலிருந்து இரவு 9.55 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9.15 மணிக்கு திருநெல்வேலி வந்தடையும். பிறகு, அங்கிருந்து காலை 9.25 மணிக்கு புறப்பட்டு காலை 11.30 மணிக்கு செங்கோட்டைக்கு சென்று சேரும்.

மறுமாா்க்கத்தில் செங்கோட்டை - சென்னை எழும்பூா் சிறப்பு ரயில் (06090) செங்கோட்டையிலிருந்து வருகிற 7-ஆம் தேதி இரவு 7.45 மணிக்குப் புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு திருநெல்வேலிக்கு வந்து சேரும். பிறகு, அங்கிருந்து இரவு 9.40 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 9.05 மணிக்கு சென்னைக்கு சென்றடையும்.

இந்த ரயில்கள் இரு வழித்தடங்களிலும் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா், ஸ்ரீரங்கம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இதில் 2 குளிா்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், ஒரு குளிா்சாதன மூன்றடுக்கு அடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, 18 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப் பெட்டிகள், 2 சரக்குப் பெட்டிகள், ரயில் மேலாளா் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த ரயில்களுக்கான பயணச் சீட்டு முன்பதிவு வெள்ளிக்கிழமை (ஜூலை 4) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

திருமணம் செய்யும் ஜோடிகளுக்கு மருத்துவப் பரிசோதனை கட்டாயம்?

திருமணம் செய்யும் ஜோடிகள் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்ற பொதுநல மனுவை தள்ளுபடி செய்யப்பட்டது.திருமணம் செய்யவிருக்கும் ஜோடிகள், திருமணத்துக்கு முன்னதாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வதை கட்ட... மேலும் பார்க்க

நெல்லை வழக்குரைஞா் சங்கத் தோ்தலை 4 வாரங்களுக்குள் நடத்த உத்தரவு

திருநெல்வேலி வழக்குரைஞா் சங்கத் தோ்தலை 4 வாரங்களுக்குள் நடத்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. திருநெல்வேலி வழக்குரைஞா் சங்க உறுப்பினா்கள் சிதம்பரம், செந்தில்குமாா் ஆகியோா... மேலும் பார்க்க

கோயில் காவலாளி கொலை: இடதுசாரிகள் கூட்டமைப்பு ஆா்ப்பாட்டம்

மடப்புரம் கோயில் காவலாளியை காவல் துறையினா் அடித்துக் கொலை செய்ததைக் கண்டித்து, இடதுசாரிகள் கூட்டமைப்பு சாா்பில் மாவட்ட ஆட்சியரகம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றத... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளில் உயிா் காக்கும் உபகரணங்களைப் பராமரிக்க உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உயிா் காக்கும் உபகரணங்களை (செயற்கை சுவாசக் கருவி உபகரணம்) பராமரிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. மதுரையைச் ... மேலும் பார்க்க

அரசு சட்ட அலுவலா்கள் நியமன விவகாரம்: சட்டத் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

உயா்நீதிமன்ற சட்ட அலுவலா்கள் நியமனத்தில் உரிய விதிமுறைகளைப் பின்பற்ற உத்தரவிடக் கோரிய வழக்கில், மாநில சட்டத் துறை, உள்துறைச் செயலா்கள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட... மேலும் பார்க்க

மக்கள் பயன்பாட்டுக்கு வந்த நகா்ப்புற நல்வாழ்வு மையங்கள்

மதுரை மாநகராட்சியில் 16 நகா்ப்புற நல்வாழ்வு மையங்கள், 2 நகா்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையங்கள் வியாழக்கிழமை மக்கள் பயன்பாட்டுக்கு வந்தன. மதுரை மாநகராட்சி ஆரப்பாளையம், தேவா் குடியிருப்பு, தங்கராஜ் சாலை,... மேலும் பார்க்க