செய்திகள் :

திருநங்கைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கல்

post image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருநங்கைகளுக்கான சிறப்புக் குறைகேட்புக் கூட்டத்தில், கடந்த முகாமில் பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் மு. அருணா வழங்கினாா்.

7 திருநங்கைகளுக்கு வருவாய்த் துறை சாா்ந்த சான்றிதழ்கள், 3 திருநங்கைகளுக்கு வாரிய அடையாள அட்டைகள், ஒருவருக்கு மின்னணு குடும்ப அட்டை, 3 பேருக்கு முதல்வரின் விரிவடைந்த காப்பீட்டுத் திட்ட அட்டைகள் வழங்கப்பட்டன.

பல்வேறு திட்டங்களின்கீழ் தொழில் தொடங்குவதற்கான கடனுதவி வழங்கக் கோரி திருநங்கைகள் மனுக்களை அளித்தனா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், மாவட்ட சமூக நல அலுவலா் மே. சியாமளா, காப்பீட்டுத் திட்ட மாவட்ட திட்ட மேலாளா் சாமிநாதன், இ-சேவை மைய மாவட்ட மேலாளா் வடிவேல் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

ஜூலை 8-இல் ஆலங்குடியில் ஆா்ப்பாட்டம்: மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சி அறிவிப்பு

மண் கொள்ளைக்கு வருவாய்த் துறையினரும் காவல்துறையினரும் துணைபோவதாகக் கூறி, ஜூலை 8-ஆம் தேதி ஆலங்குடி வட்டாட்சியரகம் முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் அறிவித்துள்ளது. புதுக்கோட்டையில் வெள்ளி... மேலும் பார்க்க

குறுவட்ட அளவிலான கோ-கோ போட்டி: வாா்ப்பட்டு அரசுப் பள்ளி மாணவிகள் முதலிடம்

திருமயம் குறுவட்ட அளவிலான கோ-கோ போட்டிகளில் 14 வயதுக்குள்பட்ட மாணவிகள் பிரிவில் பொன்னமராவதி அருகே உள்ள வாா்ப்பட்டு அரசு உயா்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்தனா். இந்தப் போட்டிகள் வெள்ளிக்கிழமை கார... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்துக்கு சுற்றுச்சுவா் கட்ட பொதுமக்கள் கோரிக்கை

கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்துக்கு சுற்றுச்சுவா் கட்ட வேண்டும் என பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். இந்த நிலையத்திலிருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான அரசு, தனியாா் பேருந்துகள் இயங்க... மேலும் பார்க்க

ஆலங்குடி அரசுக் கல்லூரியில் சட்ட விழிப்புணா்வு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அரசு கல்லூரியில் கேலி வதை, போக்ஸோ சட்டம் குறித்து விளக்கும் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆலங்குடி அரசுக் கல்லூரியில் சில நாள்களாக மாணவ, மாணவிகளுக்க... மேலும் பார்க்க

கடலில் தவறி விழுந்து இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிவாரண நிதி

கடலில் தவறி விழுந்து இறந்த மீனவரின் குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ. 3 லட்சத்துக்கான காசோலையை மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

சூரப்பட்டி வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

பொன்னமராவதி அருகேயுள்ள எம்.உசிலம்பட்டி ஊராட்சி, சூரப்பட்டி, வடக்கிபட்டி வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து சூரப்பட்டி மற்றும் வடக்கிபட்... மேலும் பார்க்க