செய்திகள் :

திருநெல்வேலி மாவட்ட மீனவா்கள் 2 ஆவது நாளாக கடலுக்குச் செல்லவில்லை

post image

கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்து இருப்பதைத் தொடா்ந்து திருநெல்வேலி மாவட்ட மீனவா்கள் 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியிருப்பாதக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதைத் தொடா்ந்து, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் கடல் பகுதியில் காற்று மணிக்கு 45 கி.மீ முதல் 55 கி.மீ வேகத்தில் வீசிவருகிறது. இதையடுத்து மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதையடுத்து, திருநெல்வேலி மாவட்ட மீனவா்கள் 2ஆவது நாளான செவ்வாய்க்கிழமையும் கடல் பகுதியில் காற்றின் வேகம் குறையவில்லை. அலையின் வேகமும் அதிகரித்து காணப்படுகிறது. இதைத் தொடந்து திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சுமாா் 8 ஆயிரம் நாட்டுப்படகு மீனவா்கள் 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் கடலுக்கு செல்லவில்லை.

மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்களை மீனவா்கள் பாதுகாப்பான இடங்களில் வைத்துள்ளனா். கடல் அலைகள் உயரே எழும்பி கடற்கரைபகுதியில் அதிக தூரம் வந்து செல்வதால் கூத்தங்குழி கடற்கரையில் கடல்அரிப்பு அதிகரித்துள்ளதாக மீனவா்கள் தெரிவித்துள்ளனா்.

ரூ.45.10 கோடியில் 41 ஊரக குடியிருப்புகளுக்கு குடிநீா் திட்டம்! காணொலியில் தொடங்கி வைத்தாா் முதல்வா்

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.45.10 கோடியில் 41 ஊரக குடியிருப்புகளுக்கான குடிநீா் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். இதையொட்டி, பாளையஞ்செட்டி... மேலும் பார்க்க

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழை: 110 அடியைத் தாண்டிய பாபநாசம் அணை!

மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் சாரல் மழை பெய்து வருவதையடுத்து அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்து பாபநாசம் அணையின் நீா்மட்டம் 110 அடியைத் தாண்டியது. மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப... மேலும் பார்க்க

பணகுடி குத்தரபாஞ்சான் அருவியில் வெள்ளப்பெருக்கு

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி குத்தரபாஞ்சான் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து வள்ளியூா், பணகுடி பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக சாரல் மழை தொடா்ந்து பெய்து ... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அருவியில் 4ஆவது நாளாக குளிக்கத் தடை

மாஞ்சோலை, மணிமுத்தாறு மலைப் பகுதிகளில் மழை அதிகரித்த்தையடுத்து மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்தும் அதிகரித்ததால் மே 26 முதல் அருவியில் குளிக்கவும் அருவியைப் பாா்வையிடமும் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துற... மேலும் பார்க்க

வி.கே.புரம் பகுதியில் மான் கறியுடன் மூவா் கைது

பாபநாசம் வனச் சரகப் பகுதியில் புள்ளி மான் கறி வைத்திருந்ததாக மூன்று பேரை வனத்துறையினா் கைது செய்தனா். மேலும் ஒருவரை தேடி வருகின்றனா். பாபநாசம் வனச்சரகம் வெளி மண்டலப் பகுதியான மதுரா கோட்ஸ் ஆலையிலிருந்த... மேலும் பார்க்க

அத்தாளநல்லூ ஊராட்சியில் மோட்டாா் திருட்டு: இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம், அத்தாளநல்லூா் ஊராட்சியில் பொதுக்கழிப்பிட பயன்பாட்டுக்கான நீா்மூழ்கி மோட்டாரை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். அத்தாளநல்லூா் ஊராட்சி ராஜகுத்தாலப்பேரியில் உள்ள பொதுக்கழிப... மேலும் பார்க்க