செய்திகள் :

திருப்பதி கோயிலுக்கு.. மைசூர் அரச குடும்பத்தினர் 100 கிலோ வெள்ளி விளக்கு நன்கொடை!

post image

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 100 கிலோ எடையுள்ள வெள்ளி விளக்கை நன்கொடையாக வழங்கியுள்ளார் பக்தர் ஒருவர்.

பிரசித்தி பெற்ற திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஏழுமலையானிடம் வேண்டுதல்கள் வைப்பதும், அது நிறைவேறியவுடன் காணிக்கை செலுத்துவதும் வழக்கம். அதுமட்டுமின்றி நன்கொடையாகவும் பெருமாளுக்குப் பலர் தங்கம், வெள்ளி போன்ற விலையுயர்ந்த பொருள்களைக் காணிக்கையாக வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில், மைசூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த பிரமோதா தேவி, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சுமார் 100 கிலோ எடையுள்ள இரண்டு வெள்ளி அகண்டங்களை (விளக்குகள்) நன்கொடையாக வழங்கியுள்ளார்.

ஒவ்வொரு வெள்ளி விளக்கும் சுமார் 50 கிலோ எடையுள்ளது என்று திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமலை கோயிலில் உள்ள ரங்கநாயக்குலா மண்டபத்தில் பிரமோதா தேவி கோயில் அமைப்பின் தலைவர் பி.ஆர். நதியு மற்றும் கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கையா சௌத்ரி முன்னிலையில் அகண்டங்களை ஒப்படைத்தார்.

திருப்பதி தேவஸ்தானத்தின் அறிக்கையின்படி, கடந்த 300 ஆண்டுகளுக்கு முன்பு, மைசூர் மன்னரும் அகண்டங்களை நன்கொடையாக அளித்துள்ளார். அகண்ட விளக்குகள் கருவறைக்குள் ஏற்றப்படும் என்று தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட ஊழல்: குஜராத் அமைச்சரின் மற்றொரு மகனும் கைது

தாஹோத்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் ரூ.71 கோடி ஊழல் நடந்த குற்றச்சாட்டில் குஜராத் மாநில அமைச்சா் பச்சுபாய் காபாத்தின் இளைய மகன் கிரண் உள்பட 4 போ் காவல் துறையால் திங்கள்கிழமை க... மேலும் பார்க்க

கா்னல் குரேஷி குறித்து சா்ச்சை கருத்து: எஸ்ஐடி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

புது தில்லி: கா்னல் சோஃபியா குரேஷி குறித்து மத்திய பிரதேச மாநில அமைச்சா் விஜய் ஷா சா்ச்சை கருத்து தெரிவித்த விவகாரம் தொடா்பாக 3 போ் சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) அமைத்து விசாரணை மேற்கொள்ள உச்சநீதிம... மேலும் பார்க்க

வெளிநாடுகளுக்குச் செல்லும் எம்.பி.க்கள் குழு: ‘மம்தா கட்டாயத்தால் யூசுப் பதான் தோ்வு’

புது தில்லி: பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியா மேற்கொண்டு வரும் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துரைக்க வெளிநாடுகளுக்குச் செல்லும் எம்.பி.க்கள் குழுவில் மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜியின் கட்டாயத்தின் ப... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர் மின்தடையின்போதும் பாகிஸ்தானுடன் தொடர்பில் இருந்த உளவாளிகள்!

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது வட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் மின்தடை இருந்தபோதும் கூட உளவாளிகள் பாகிஸ்தான் அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாகத் தெரியவந்துள்ளது.பாகிஸ்தான் அமைப்புகளுக்கு உளவ... மேலும் பார்க்க

பாகிஸ்தன் உளவாளிக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல்!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டவருக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் இன்று (மே 19) உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து லக்னெள சிறையில் அவர் அடைக்கப்பட்டார். பாகிஸ்தானின் உளவ... மேலும் பார்க்க

நாட்டைப் பாதுகாப்பதில் இந்திரா காந்தியைப் போல் இருக்க வேண்டும்: ரேவந்த் ரெட்டி!

பாகிஸ்தானுக்கு எதிரான போரிலும், வங்கதேசம் உருவானதிலும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பங்கு மறக்கமுடியாதது என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்தார். இந்திரா சோலார் கிரி ஜல விகாசம் திட... மேலும் பார்க்க