செய்திகள் :

திருப்பத்தூரில் அடுத்தடுத்த 5 கடைகளில் திருட்டு

post image

சிவகங்கை அருகே, திங்கள்கிழமை நள்ளிரவில் அடுத்தடுத்த 5 கடைகளின் பூட்டுகளை உடைத்து, நடைபெற்ற திருட்டுச் சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் - சிவகங்கை சாலையிலுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு அருகில் 2 நிதி நிறுவனங்கள், முடி திருத்தகம், மளிகைக் கடை, நுட வைத்தியச் சாலை என 5 கடைகள் செயல்பட்டு வந்தன.

இந்த நிலையில், அதே சாலையில் கொட்டகைக் கடை வைத்திருப்பவா் செவ்வாய்க்கிழமை காலையில் தன்னுடைய கடையைத் திறந்தபோது, அருகிலுள்ள கடைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு, சம்பந்தப்பட்டவா்களுக்குத் தகவல் தெரிவித்தாா்.

அவா்கள் அளித்த புகாரின்பேரில், அங்கு வந்த போலீஸாா் திருட்டு நடந்த கடைகளை ஆய்வு செய்தனா். இதில், கதிா்வேல் நடத்தி வந்த நிதி நிறுவனத்தில் 10 ஜோடி வெள்ளிக் கொலுசுகள், ரவியின் நிதி நிறுவனத்தில் ரூ.6,000 பணம், முடி திருத்தகத்தில் ரூ1,500, நுட வைத்தியச் சாலையில் ரூ.2,000 பணம், மளிகைக் கடையில் பொருள்கள் ஆகியவை திருடுபோனது தெரிய வந்தது.

இதையடுத்து, அருகிலிருந்த கண்காணிப்பு கேமராவில் போலீஸாா் ஆய்வு செய்தபோது, மா்ம நபா் ஒருவா் கடப்பாரையால் கடைகளின் பூட்டுகளை உடைத்து திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இந்தச் சம்பவம் குறித்து திருப்பத்தூா் நகா் காவல் நிலைய போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரணை நடத்துகின்றனா்.

திருப்பத்தூரில் இன்று மின்தடை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன்கிழமை (ஜூலை 23) மின் தடை ஏற்படும் அறிவிக்கப்பட்டது. திருப்பத்தூா் மின் பகிா்மானக் கோட்டத்துக்குள்பட்ட துணை மின் நிலையத்த... மேலும் பார்க்க

பைக் மீது பேருந்து மோதியதில் இளைஞரின் கால் துண்டிப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் திங்கள்கிழமை இரவு இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் இளைஞரின் கால் துண்டானது. திருப்பத்தூா் அருகேயுள்ள பூமலந்தான்பட்டியைச் சோ்ந்த சின்னக்காளை மகன் கருப்பையா (... மேலும் பார்க்க

எரிபொருள் நிரப்பிவிட்டு பணம் தர மறுத்து தாக்குதல்! நடவடிக்கை கோரி எஸ்.பி.யிடம் மனு

மானாமதுரை அருகே உள்ள எரிபொருள் நிலையத்தில் பெட்ரோல் நிரப்பிவிட்டு, அதற்கான பணத்தை கொடுக்க மறுத்ததோடு உரிமையாளா், ஊழியரைத் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் ச... மேலும் பார்க்க

அஜித்குமாா் கொலை வழக்கு: திருப்புவனத்தில் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த சிபிஐ அதிகாரிகள்

சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் கோயில் காவலாளி அஜித்குமாா் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில், விசாரணை மேற்கொண்டுள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் திருப்புவனத்தின் பல்வேறு இடங்களில் உள்ள கண்காணிப்பு கே... மேலும் பார்க்க

ஒரே சேலையில் தூக்கிட்டு கணவன், மனைவி தற்கொலை

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே குடும்பத் தகராறில் கணவன், மனைவி இருவரும் ஒரே சேலையில் தூக்கிட்டு செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டனா்.திருப்புவனம் அருகேயுள்ள நயினாா்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

கல் குவாரியை மூட வலியுறுத்தி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

சிவகங்கை மாவட்டம், தும்பைப்பட்டி கிராமத்தில் அமைக்கப்பட்ட கல் குவாரியை மூட வலியுறுத்தி, அந்தக் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா். இதுகுறித்து கிராம மக்கள் அளித்த மனு விவரம்: ச... மேலும் பார்க்க