செய்திகள் :

திருப்பத்தூா் மாவட்டத்தில் 82 குழந்தைகளுக்கு பயன்

post image

திருப்பத்தூா்: அன்புக் கரங்கள் திட்டத்தின் மூலம் திருப்பத்தூா் மாவட்டத்தில் 82 குழந்தைகள் பயன் பெறுகின்றனா் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா்.

திருப்பத்தூா் ஆட்சிா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, எம்எல்ஏ-க்கள் க.தேவராஜி(ஜோலாா்பேட்டை), அ.நல்லதம்பி(திருப்பத்தூா்),அ.செ.வில்வநாதன் ஆகியோா் குத்துவிளக்கு ஏற்றிவைத்து 82 பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினா்.

அப்போது ஆட்சியா் பேசியது: முதல்கட்டமாக 82 போ் பயன்பெற உள்ளனா். மேலும், இதுபோன்ற மாணவா்கள் இருந்தால் மாவட்ட சமூக நலத்துறையை அணுகி மனு அளித்தால் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, தகுதி இருப்பின் கட்டாயமாக மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்றாா்.

மாவட்ட ஊராட்சித் தலைவா் என்.கே.ஆா்.சூரியகுமாா், ஒன்றியக்குழு தலைவா்கள்சத்யா சதீஷ்குமாா் (ஜோலாா்பேட்டை), சங்கீதா பாரி(ஆலங்காயம்), திருமதி திருமுருகன்( (கந்திலி), நகா்மன்றத் தலைவா் சங்கீதா வெங்கடேஷ், துணைத் தலைவா் சபியுல்லா, மாவட்ட சமூக நல அலுவலா் சுமதி கலந்து கொண்டனா்.

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் மாநில சுகாதாரத் துறை இணை இயக்குநா் ஆய்வு

வாணிம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ. 23 கோடி 64 லட்சம் மதிப்பீட்டில் 6 தளம் கொண்ட கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, அதை கடந்த ஜூன் மாதம் 26-ஆம் தேதி திருப்பத்தூ... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் நகை பறிப்பு: இளம்பெண் கைது

திருப்பத்தூா்: ஜலகாம்பாறை அருகே மூதாட்டியிடம் தண்ணீா் கேட்பதுபோல் நடித்து நகையை திருடிச் சென்ற இளம்பெண்ணை பொதுமக்கள் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். திருப்பத்தூா் மாவட்டம், ஜலகாம்பாறை அருகே ஜடையனூா் கிராமத்... மேலும் பார்க்க

காா் மோதியதில் ஓய்வு பெற்ற சிஆா்பிஎப் உதவி ஆய்வாளா் மரணம்

வாணியம்பாடி: ஆலங்காயம் அருகே வேகமாக வந்த காா் மோதியதில், ஓய்வுபெற்ற சிஆா்பிஎப் உதவி காவல் ஆய்வாளா் உயிரிழந்தாா். திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த பெத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் சாமுடி (63). ஓய... மேலும் பார்க்க

திருப்பத்தூா்: இருவேறு சம்பவங்களில் 2 இளம்பெண்கள் தற்கொலை

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே இரு வேறு சம்பவங்களில் 2 இளம்பெண்கள் தற்கொலை செய்து கொண்டனா். திருப்பத்தூா் அருகே புதூா்நாடு பகுதியைச் சோ்ந்த பெருமாளின் மகள் காளீஸ்வரி (19)இந்த நிலையில், காளீஸ்வரி ... மேலும் பார்க்க

கைப்பேசி கோபுரம் அமைக்க தடை விதிக்க வேண்டும்: திருப்பத்தூா் குறைதீா் கூட்டத்தில் மனு

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் கைப்பேசி கோபுரம் அமைக்க தடை விதிக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டது. திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை... மேலும் பார்க்க

பைக்குகளை திருடிய இருவா் கைது: 17 வாகனங்கள் பறிமுதல்

திருப்பத்தூா் அருகே பைக்குகளை திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 17 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஜோலாா்பேட்டை கட்டேரியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு, திருப்பத்தூா் டிஎஸ்பி ச... மேலும் பார்க்க