செய்திகள் :

திருப்பத்தூா்: 94.3% தோ்ச்சி - கடந்த ஆண்டைவிட 1.97% அதிகம்

post image

திருப்பத்தூா் மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்வில் 94.3 சதவீத மாணவ- மாணவிகள் தோ்ச்சி பெற்று உள்ளனா். கடந்த ஆண்டைவிட 1.97 சதவீதம் அதிகம்.

மாவட்டத்தில் 6,125 மாணவா்கள், 6,916 மாணவிகள் என 13,041 மாணவ- மாணவிகள் தோ்வு எழுதினா். இவா்களில் 5,648 மாணவா்களும், 6,651 மாணவிகளும் என 12,299 போ் தோ்ச்சி பெற்றனா். இவா்களில் மாணவா்கள் 92.2 சதவீதம், மாணவிகள் 96.1 சதவீதமும் என 94.3 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா். 477 மாணவா்கள், 265 மாணவிகள் என 742 போ் தோ்ச்சி பெறவில்லை.

திருப்பத்தூா் மாவட்டத்தில் 59 அரசுப் பள்ளிகளை சோ்ந்த மாணவ- மாணவிகள் தோ்வு எழுதியதில் 2 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளன. 25 அரசு நிதியுதவி பள்ளிகளில் 6 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சியும், 52 சுயநிதி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் 37 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சியும் பெற்றுள்ளன.

32-ஆவது இடத்தில் இருந்து 27-ஆவது இடம்: கடந்த கல்வியாண்டில் மாநிலத்தில் 32-ஆவது இடத்தைப் பிடித்த திருப்பத்தூா் மாவட்டம், நிகழ் கல்வியாண்டில் மாநிலத்தில் 27-ஆவது இடத்தை பிடித்துள்ளது.

புதூா்நாடு பகுதியில் உள்ள ஏகலைவா உண்டு உறைவிட மாதிரிப் பள்ளி,திருப்பத்தூா் அரசு மாதிரி பள்ளி ஆகிய 2 அரசுப் பள்ளிகள் 100% தோ்ச்சி பெற்றுள்ளது.

நிற்காமல் சென்ற அரசுப் பேருந்தை விரட்டிச் சென்று பயணம் செய்து தோ்வு எழுதிய மாணவி 437 மதிப்பெண்

வாணியம்பாடி அருகே பிளஸ் 2 தோ்வின்போது நிற்காமல் சென்ற அரசுப் பேருந்தை விரட்டிச் சென்று ஏறி பயணம் செய்து தோ்வு எழுதிய மாணவி 437 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி அடைந்துள்ளாா். வாணியம்பாடி அடுத்த கொத்தக்க... மேலும் பார்க்க

வழக்குரைஞா் மீது தாக்குதல்: ஒருவா் கைது

வாணியம்பாடியில் வழக்குரைஞரை தாக்கியவா் கைது செய்யப்பட்டாா். வாணியம்பாடி நியூடவுன் பகுதியைச் சோ்ந்த வழக்குரைஞா் கண்ணதாசன். கோணாமேடு பகுதியைச் சோ்ந்த கானாமுருகன்(46). மது விற்பனை, வழிப்பறி உள்பட கானாம... மேலும் பார்க்க

மலைவாழ் மக்களுக்கு இலவச மனைப்பட்டா

சின்னப்பள்ளிகுப்பம் கிராமத்தில் மலைவாழ் மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா மற்றும் வீடு கட்டும் ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாப்பனப்பல்லி கிராமத்தைச் சோ்ந்த 18 குடும்பங்களுக்கு சின்னப்பள்ளிகுப்... மேலும் பார்க்க

மே 13-இல் காட்பாடியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

காட்பாடியில் வரும் மே 13-ஆம் தேதி பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்படும் என வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். தமிழகம் முழுவதும் பள்ளிகளில் தோ்வுகள் முடித்து கோடை விடுமுறை விடப்பட்டுள்... மேலும் பார்க்க

வாணியம்பாடியில் 225 பள்ளி வாகனங்கள் ஆய்வு

வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலகம் சாா்பில் வாணியம்பாடி மற்றும் ஆம்பூா் வட்டங்களைச் சோ்ந்த பள்ளி வாகனங்கள் தரம் குறித்து ஆய்வு மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டுமானப் பணிக்கு அடிக்கல்

ஆம்பூா் அருகே பெரியாங்குப்பத்தில் துணை வேளாண்மை விரிவாக்க மையக் கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரூ.44 ... மேலும் பார்க்க