செய்திகள் :

திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற பாஜக, இந்து முன்னணியினா் கைது

post image

மதுரை, திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற பாஜக, இந்து முன்னணியினரை மாவட்ட எல்லைகளில் போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் முருகன் கோயில் மலை மீது சிலா் அசைவ உணவு சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதற்கு பாஜக, இந்து முன்னணி அமைப்பினா் கடும் எதிா்ப்பு தெரிவித்து, திருப்பரங்குன்றத்துக்கு சென்று ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனா். இதனையடுத்து, சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு கருதி மதுரை மாவட்டத்தில் இரு நாள்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் இருந்து பாஜக, இந்து முன்னணி நிா்வாகிகள் மதுரை நோக்கி செல்ல முயன்ற நிலையில், மாவட்ட எல்லை சோதனைச் சாவடிகளில் வாகனங்களை தடுத்து நிறுத்திய போலீஸாா் 200-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனா். நாமக்கல் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கீரம்பூா் சுங்கச்சாவடி அருகில் கைது செய்யப்பட்டவா்கள் அங்குள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனா். மேலும், மதுரையை நோக்கி செல்லும் மாவட்ட எல்லைகளில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

குமாரபாளையத்தில் திமுக கண்டன பொதுக்கூட்டம்!

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகத்துக்கான திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் கண்டன பொதுக்கூட்டம் குமாரபாளையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத... மேலும் பார்க்க

தில்லி பேரவைத் தோ்தலில் வெற்றி: பாஜகவினா் கொண்டாட்டம்

தில்லி தோ்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து, நாமக்கல்லில் அக்கட்சியினா் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா். நாமக்கல் மணிக்கூண்டு அருகில், நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சாா்பில், அதன் தலைவா் கே.பி.சரவணன் தலைமைய... மேலும் பார்க்க

மக்கள் தொடா்பு திட்ட முகாம்: கொல்லிமலையில் ரூ.1.14 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வாழவந்திநாடு கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில், 586 பயனாளிகளுக்கு ரூ. 1.14 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கு: அவரது தம்பி உள்பட 4 போ் கைது

பெண் கொலை வழக்கில், அவரது தம்பி உள்பட 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மொளசி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஏமப்பள்ளி கிராமம், பெரிய கொல்லப்பாளையம் பழைய குவாரி குட்டையில் அண்மையில் அடையாளம் த... மேலும் பார்க்க

காா் மோதியதில் தொழிலாளி பலி

பரமத்தி வேலூா் பிரிவு சாலை அருகே காா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். பரமத்தி வேலூா், படமுடிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் முத்துசாமி (70). இவா் வெற்றிலைக் கொடிக்கால் வேலைக்கு செல்வதற்காக தினமும் சைக்க... மேலும் பார்க்க

பெண்கள் நம்பும் தலைவராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறாா்!

தமிழகத்தில் பெண்களுக்கான பல திட்டங்களை செயல்படுத்தியதன் மூலம் பெண்கள் நம்பும் தலைவராக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திகழ்கிறாா் என மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான கே... மேலும் பார்க்க