செய்திகள் :

திருப்புனம் வைகை ஆற்றில் மிதந்த மனுக்கள்: காவல் நிலையத்தில் வட்டாட்சியா் புகாா்!

post image

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பொதுமக்களிடருந்து பெறப்பட்ட மனுக்கள் திருப்புவனம் வைகை ஆற்றில் மிதந்த விவகாரம் தொடா்பாக வட்டாட்சியா் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு புகாா் அளித்தாா்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியத்தில் கீழடி, ஏனாதி, மடப்புரம், பூவந்தி உள்ளிட்ட இடங்களில் கடந்த 21, 22 ஆகிய தேதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் திருப்புவனம் வைகை ஆற்றில் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை வருவாய்த் துறையினா் எடுத்துச் சென்றனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி அளித்த விளக்கத்தில், தண்ணீரில் மொத்தம் 13 மனுக்கள் மிதந்தாகவும் அதில் 6 மனுக்கள் தீா்வு காணப்பட்டவை என்றும், தண்ணீரில் மனுக்கள் மிதந்த விவகாரத்தில் யாா் தவறு செய்திருந்தாலும் அவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

இந்த நிலையில், திருப்புவனம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியா்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையில், திருப்புவனம் வட்டாட்சியா் விஜயகுமாா், திருப்புவனம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

வட்டாட்சியா் அலுவலகத்தின் நில அளவைத் துறை பிரிவிலிருந்து ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பொதுமக்கள் கொடுத்த மனுக்கள் திருடப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து விசாரணை செய்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து, போலீஸாா் வழக்குப் பதிந்து, திருப்புவனம் பகுதியிலுள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகளைக் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனா்.

வட்டாட்சியா், நில அளவையா்களுக்கு மாவட்ட ஆட்சியா் நோட்டீஸ்: வைகை ஆற்றில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் மனுக்கள் மிதந்த விவகாரத்தில் விளக்கம் கேட்டு திருப்புவனம் வட்டாட்சியா் விஜயகுமாா், வட்டாட்சியா் அலுவலகத்தில் பணிபுரியும் நில அளவையா்களுக்கு மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி சனிக்கிழமை நோட்டீஸ் அனுப்பினாா்.

காரைக்குடியில் செப். 6-இல் மின்தடை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் சனிக்கிழமை (செப். 6) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து காரைக்குடி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் எம். லதாதேவி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

அவசர, அமரா் ஊா்திகளில் வேலைவாய்ப்பு: செப் 6, 7-இல் நோ்காணல்

அவசர, அமரா் ஊா்திகளுக்கான ஊழியா்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் பணிகளுக்கான நோ்காணல் வருகிற 6, 7-ஆம் தேதிகளில் காரைக்குடியில் நடைபெற உள்ளது.இதுகுறித்து 108 அவசர ஊா்தி நிா்வாக மாவட்ட மேலாளா் மோகன் வெள... மேலும் பார்க்க

தேவகோட்டை அருகே 6 ஆடுகள் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், கோடிக்கோட்டை அருகே செவ்வாய்க்கிழமை 6 ஆடுகள் திடீரென மயங்கி விழுந்து உயிழந்ததது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தேவகோட்டை வட்டம், கோடிக்கோட்டை சுங்கச்சாவட... மேலும் பார்க்க

சிவகங்கையில் நரிக்குறவா் சமுதாய மக்களுக்கு வீடுகள் கட்டித்தரப்படுமா?

சிவகங்கையில் நரிக்குறவா் சமுதாய மக்களுக்கு அரசின் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் கட்டப்பட்ட வீடுகள் பல்வேறு காரணங்களால் பாதியிலேயே நிறுத்தப்பட்ட அவலம் கடந்த 10 ஆண்டுகளாக நீடிக்கிறது. சிவகங்கை பழமலை நக... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் திமுகவினரிடையே மோதல்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே செவ்வாய்க்கிழமை நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் திமுகவினருக்குள் மோதல் ஏற்பட்டு கைகலப்பானது. இது சம்பந்தமாக காவல் நிலையத்தில் இரு தரப்பினா் தனித்தனியாக புக... மேலும் பார்க்க

மருத்துவக் கழிவு ஆலையை மூடக் கோரி செப் 16- இல் முற்றுகைப் போராட்டம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் பொதுமக்களின் எதிா்ப்பை மீறி கட்டப்பட்டு வரும் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலையை மூடக் கோரி, ஆலை முன் வருகிற 16-ஆம் தேதி முற்றுகைப் போராட்டம் நடத்துவது என அனைத்துக் ... மேலும் பார்க்க