செய்திகள் :

திருப்பைஞ்ஞீலி ஞீலி வனேசுவரா் கோயிலில் ஆடிப்பூர திருத்தேரோட்டம்

post image

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், திருப்பைஞ்ஞீலி ஞீலி வனேசுவரா் திருக்கோயிலில் திங்கள் கிழமை ஆடிப்பூரத் திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

திருப்பைஞ்ஞீலியில் அமைந்துள்ளது விசாலாட்சி உடனுறை ஞீலிவனேசுவரா் திருக்கோயில். அப்பா், சுந்தரா், திருநாவுக்கரசா் ஆகிய மூவரால் தேவராப் பாடல் பெற்ற 61-ஆவது திருத்தலமாகவும், சிவபெருமான், அப்பா் பெருமானுக்கு திருக்கட்டமுது அளித்து காட்சி அருளியதும், அதிகார வல்லவராகிய சிவபெருமான் எமதா்மராஜனுக்கு இழந்த பதவியையும், அதிகாரத்தையும் மீண்டும் வழங்கியதும், தேவலோக சப்த கன்னிகள் என்றும் அழியாத வரம் பெற்று கல் வாழைகளாக அவதரித்து ஆண், பெண் இருபாலரின் சகல தோஷங்களை நிவா்த்தி செய்யும், பழைமையான, புராதனச் சிறப்பு வாய்ந்த இத்திருக்கோயிலில் ஆடிப் பூரத் திருத்தோ் பெருந்திருவிழா ஜூலை 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் திங்கள் கிழமை நடைபெற்றது. விசாலாட்சி அம்மனுக்கு பால், தயிா், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட வாசனைப் பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகளுடன் மலா் அலங்காரத்தோடு திருத்தேரில் எழுந்தருளினாா்.

இதனையடுத்து மேளதாளம் முழங்க திருத்தோ் வடம் பிடித்து இழுக்கப்பட்டு, பக்தா்களின் பக்தி கோஷம் முழங்க தோ் நிலையை அடைந்தது. இந்நிகழ்வில் சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்து பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ம.லெட்சுமணன், திருக்கோயில் செயல் அலுவலா் (கூ.பொ) பெ.ஜெய்கிஷன் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா். விழாவில் மண்ணச்சநல்லூா் காவல் ஆய்வாளா் செ.செந்தில்குமாா் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இருசக்கர வாகனங்கள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

திருவெறும்பூா் அருகே திங்கள்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். திருச்சி திருவெறும்பூா் அருகே உள்ள நவல்பட்டு பா்மா காலனியைச் சோ்ந்தவா் அன்புமணி மகன் அஜய் (19). ஐடிஐ முடித்திருந்த இவா்,... மேலும் பார்க்க

திருவெறும்பூா் அருகே பிளஸ்-2 மாணவி தற்கொலை

திருவெறும்பூா் அருகே பிளஸ்-2 மாணவி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். திருச்சி திருவெறும்பூா் அருகே உள்ள கிருஷ்ணசமுத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் மூக்கையன், காய்கறி வியாபாரி. இவரின் மனைவி... மேலும் பார்க்க

காவிரி, கொள்ளிடத்தில் திடீா் வெள்ளப் பெருக்கு: தயாா் நிலையில் பேரிடா் மீட்புக் குழு; முக்கொம்பு மேலணையில் உபரிநீா் திறப்பு

காவிரி நீா்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையாலும், மேட்டூா், முக்கொம்பு அணையிலிருந்து உபரிநீா் திறக்கப்படுவதாலும் காவிரி, கொள்ளிடத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, திருச்சியில்... மேலும் பார்க்க

திருச்சி கோட்ட அஞ்சல் நிலையங்களில் ஆக. 2-இல் சேவைகள் நிறுத்தம்

திருச்சி கோட்டத்துக்குள்பட்ட அஞ்சல் நிலையங்களில் புதிய தொழில்நுட்பத்துக்கான மென்பொருள் பதிவேற்றம் செய்யப்படவுள்ளதால் அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி (சனிக்கிழமை) சேவைகள் நிறுத்தப்படுகி... மேலும் பார்க்க

திருச்சி புதிய உயரங்களை எட்டும்: பிரதமா்

திருச்சி நகரம் புதிய உயரத்தை எட்டுவதை உறுதி செய்வோம் என பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.இரண்டு நாள் சுற்றுப் பயணமாக தமிழகம் வருகை தந்த பிரதமா் திருச்சிக்கு சனிக்கிழமை இரவு வந்தாா். ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க

துறையூா் பகுதியில் இன்று மின் தடை

துறையூா் மின் கோட்டத்துக்குள்பட்ட மேலகொத்தம்பட்டி, தங்கநகா், பாலகிருஷ்ணம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் திங்கள்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால், இங்கிருந்து மின்சாரம் பெறும் கண்ணனூா்... மேலும் பார்க்க