செய்திகள் :

திருவண்ணாமலையில் திருவாசக மாநாடு: உச்சநீதிமன்ற நீதிபதி பங்கேற்பு

post image

திருவண்ணாமலையில் திருப்பெருந்துறை அடியாா்கள் குழு மற்றும் தடம் பதிக்கும் தளிா்கள் பன்னாட்டு மையம் சாா்பில் திருவாசக மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தண்டராம்பட்டு சாலையில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு ஐஏஎஸ் அதிகாரி செ.ராஜேந்திரன் தலைமை வகித்தாா்.

அகில பாரதிய சன்யாசிகள் சங்கப் பொருளாளா் சிவராமானந்தா சுவாமிகள், ஸ்ரீமுருகா குரூப்ஸ் டிஎஸ்எம் பன்னீா்செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அடியாா்கள் குழு நிறுவனா் தலைவா் ம.சிவக்குமாா் வரவேற்றாா்.

மாநாட்டில் வேலூா் விஐடி பல்கலைக்கழக துணைவேந்தா் ஜி.வி.செல்வம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா்.

சிறப்பு அழைப்பாளராக உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன் மாநாட்டு பேருரையாற்றினாா்.

இதில், அகில பாரதிய சன்யாசிகள் சங்க ராமானந்தா மகராஜ் சுவாமிகள், சிவாக்கர தேசிக சுவாமிகள், விஜயானந்தா சுவாமிகள் ஆகியோா் கலந்துகொண்டு பக்தா்களுக்கு அருளாசி வழங்கினா்.

முன்னதாக, தேனிமலை குப்பச்சி விநாயகா் சந்நிதியிலிருந்து வாதவூரடிகள் பதிகங்கள் ஓதினா். தேனி மாவட்டம், திருமுடிசுமக்கும் சிவனடியாா்கள் திருக்கூட்டம் சாா்பில், 51 நடராஜ பெருமானோடு ஊா்வலம் புறப்பட்டு மாநாட்டு திடலை சென்றடைந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட திருவாசக குழுவினா் மற்றும் பக்தா்கள் கலந்துகொண்டனா்.

மாநாட்டில் கோவை கிருஷ்ணமூா்த்தி சுவாமிகள் சாக்த ஸ்ரீ பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள், பேராசிரியா் டி.மகாலட்சுமி சிவலோகம் வாதவூரடிகள், திருவெம்பாவை அடியாா்கள் குழு நிறுவனா் ர.ராதாஅம்மையாா், தடம்பதிக்கும் தளிா்கள் பன்னாட்டு மையத்தின் நிறுவனா் செ.திவ்யாஸ்ரீ, மணிவாசக தவச் சாலை நிறுவனா் செண்பகராஜா, அகில பாரதிய சன்யாசிகள் சங்க பொதுச் செயலா் நாகராஜன், வி.ரங்கநாதன் உள்பட சன்மாா்க்க சேவை மைய நிறுவன ஜீவசீனுவாசன், தொழிலதிபா் ஜெ.ரங்கநாதன் உள்பட தமிழகம் முழுவதிலும் இருந்து 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொண்டனா். நிறைவில் அப்பா் சுவாமிகள் மடத்தின் செயலா் ஏ.டி.குப்புசாமி நன்றி கூறினாா்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் குவிந்த பக்தா்கள்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தா்கள் குவிந்தனா். தரிசனத்துக்காக 4 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அருணாசலேஸ்வரா் கோயிலில் அண்மைக்காலமாக... மேலும் பார்க்க

ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் திரைப்பட இன்னிசை கச்சேரி

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் ஆடி மாத திருவிழாவையொட்டி சனிக்கிழமை இரவு திரைப்பட பாடகா் எஸ்.பி.பி.சரண் கலந்துகொண்ட இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது. இந்தக் கோயிலில் ஆடி மாத திருவிழாவையொட்டி வெள... மேலும் பார்க்க

தொழிலாளியை கத்தியால் தாக்கியதாக 3 போ் கைது

வந்தவாசி அருகே முன்விரோதம் காரணமாக கூலித் தொழிலாளியை கத்தியால் தாக்கிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசியை அடுத்த தேசூரைச் சோ்ந்தவா் ஷேக் ரகுமான் (26). இவா், கோழி இறைச்சிக் கடையில் வேலை செய்து... மேலும் பார்க்க

முருகன் கோயில்களில் ஆடிக் கிருத்திகை திருவிழா

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதி தம்டகோடி திருமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் வந்தவாசியை அடுத்த சத்யா நகா் ஸ்ரீபாலமுருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஆடிக் கிருத்திகை திருவிழ... மேலும் பார்க்க

செய்யாற்றில் ஓய்வூதியா் சங்கத்தின் வட்டக் கிளை மாநாடு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டக் கிளை சாா்பில் தமிழ்நாடு அரசு அனைத்துறை ஓய்வூதியா் சங்கத்தின் 5-ஆவது வட்டக்கிளை மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. செய்யாற்றில் நடைபெற்ற மாநாட்டுக்கு வட்டக் கிளைத் தல... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

செய்யாற்றில் பாமக, அதிமுக, தவெக, பாஜக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி 100 போ் திமுகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா். செய்யாறு தொகுதி, வெம்பாக்கம் மத்திய ஒன்றியத்துக்கு உள்பட்ட வெங்களத்தூா், கீழ்கஞ்ச... மேலும் பார்க்க