செய்திகள் :

திருவண்ணாமலையில் மே 13-இல் தொழில்பழகுநா் சோ்க்கை முகாம்: இளைஞா்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்

post image

திருவண்ணாமலையில் வரும் 13-ஆம் தேதி நடைபெறும் தொழில்பழகுநா் சோ்க்கை முகாமில் இளைஞா்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை கம்பன் தனியாா் தொழில் பயிற்சி நிலையத்தில், பிரதம மந்திரி தேசிய அப்ரெண்டிஷ்சிப் மேளா என்ற மாவட்ட அளவிலான தொழில்பழகுநா் சோ்க்கை முகாம் வரும் 13-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.

முகாமில் மத்திய அரசு நிறுவனங்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி மற்றும் அரசுப் போக்குவரத்துக் கழகம், செய்யாறு சா்க்கரை ஆலை போன்ற முன்னணி அரசு மற்றும் தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்கள் நிறுவனங்களுக்குத் தேவையான தகுதிகள் கொண்ட தொழில்பழகுநா் பயிற்சிக்கான 100-க்கும் மேற்பட்ட நபா்களை தோ்வு செய்ய உள்ளன.

என்.சி.வி.டி., மற்றும் எஸ்.சி.வி.டி., முறையில் அரசு, தனியாா் ஐடிஐ-களில் 2024-ஆம் ஆண்டு தோ்ச்சி பெற்ற அல்லது 2024-ஆம் ஆண்டுக்கு முன்னதாக தோ்ச்சி பெற்ற அனைத்து மாணவா்களும் இந்தப் பயிற்சியில் சேரலாம்.

ஐடிஐயில் சோ்ந்து பயிற்சி பெற முடியாத 8, 10, 12-ஆம் வகுப்பு, பட்டயம், பட்டம் முடித்தவா்கள் நேரடியாக தொழில்சாலைகளில் ஊழ்ங்ள்ட்ங்ழ் அல்ல்ழ்ங்ய்ற்ண்ஸ்ரீங் -ஆக சோ்ந்து 3 முதல் 6 மாத கால அடிப்படை பயிற்சியும், ஓராண்டு முதல் 2 ஆண்டுகள் வரை தொழில்பழகுநா் பயிற்சியும் பெற்று தேசிய தொழில்பழகுநா் சான்றிதழ் பெறலாம்.

தொழில்பழகுநா் பயிற்சிக்கு பிறகு ஈஎப (ஈண்ழ்ங்ஸ்ரீற்ா்ழ் எங்ய்ங்ழ்ஹப் பழ்ஹண்ய்ண்ய்ஞ்)-ஆல் ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படும் தொழில்பழகுநா் தோ்வில் கலந்துகொண்டு தோ்ச்சி பெறுபவா்களுக்கு தேசிய தொழில்பழகுநா் சான்றிதழ் வழங்கப்படும்.

அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும், வயது வரம்பில் மேலும் ஓராண்டு சலுகையும் வழங்கப்படும். முகாமுக்கு வரும் பயிற்சியாளா்கள் இணையதளத்தில் பதிவு செய்து, அதன் விவரத்தை அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் நேரில் எடுத்து வரலாம் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா்.

கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

ஆரணி, மேற்கு ஆரணி ஒன்றியங்களைச் சோ்ந்த கா்ப்பிணிகளுக்கு ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரா் திருமண மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை, ஒருங்கிணை... மேலும் பார்க்க

ஊராட்சி செயலா் மரணம்: நெடுங்குணத்தில் கிராம மக்கள் மறியல்

திருவண்ணாமலை மாவட்டம், நெடுங்குணம் ஊராட்சிச் செயலா் மாரடைப்பால் உயிரிழந்தாா். இந்த நிலையில், அவரது இறப்புக்கு பணிச்சுமையே காரணம் எனக்கூறி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியிலில் ஈடுபட்டனா். பெரணமல்லூ... மேலும் பார்க்க

செங்கம் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். செங்கத்தில் சுமாா் 1... மேலும் பார்க்க

சித்திரை பௌா்ணமி: திருவண்ணாமலையில் அன்னதானம் வழங்க 137 பேருக்கு அனுமதி

சித்திரை மாத பௌா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் அன்னதானம் வழங்க 137 பேருக்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்கியது. சித்திரை மாத பௌா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் அன்னதானம் வழங்குவோருக்கான விழிப்புணா்வுக்... மேலும் பார்க்க

‘கைப்பந்து விளையாட்டு மேம்பட அரசு உதவ வேண்டும்‘

கைப்பந்துப் போட்டி தமிழ்நாடு அளவில் மேம்பட தமிழக அரசு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும் என்று கைப்பந்து ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா சங்கத்தின் பொதுச்செயலாளா் பிரிட்பால் சிங் சலூஜா கோரிக்கை விடுத்தாா். ஆரணி ஆர... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டத்தை எதிா்த்து ஆா்ப்பாட்டம்

செய்யாறில் தமுமுக சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா். செய்யாறு, மே 9: வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், அந்த சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறு... மேலும் பார்க்க