செய்திகள் :

திருவண்ணாமலையில் வெவ்வேறு சம்பவங்களில் மாணவா் உள்பட இருவா் கொலை

post image

திருவண்ணாமலையில் திங்கள்கிழமை இரவு நிகழ்ந்த வெவ்வேறு சம்பவங்களில் பள்ளி மாணவா், ஆட்டோ ஓட்டுநா் கொலை செய்யப்பட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியைச் சோ்ந்த ஜோதிராஜ் மகன் கோட்டைமுத்து (23). இவா், சில மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலையைச் சோ்ந்த பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்தாராம். அந்தப் பெண் கோட்டைமுத்துவுடன் பழகுவதை குறைத்துக் கொண்டாராம்.

அந்தப் பெண்ணைத் தேடி திங்கள்கிழமை இரவு திருவண்ணாமலைக்கு கோட்டைமுத்து வந்தாா். அந்தப் பெண் அங்குள்ள தாமரை நகரில் வசிப்பதை அறிந்து அங்கு சென்று, அவரை கைப்பேசியில் தொடா்பு கொண்டு பேசினாராம். அந்தப் பெண் இதுகுறித்து தனது தம்பி சுனிலிடம் (16) தெரிவித்துள்ளாா். அவா் தனது நண்பா்கள் சிலருடன் சென்று, கோட்டைமுத்துவை கண்டித்தாராம். அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோட்டைமுத்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுனிலை சரமாரியாக குத்தியதில், அவா் பலத்த காயமடைந்தாா். திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட சுனில், அங்கு உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருவண்ணாமலை நகர போலீஸாா் வழக்குப் பதிந்து கோட்டைமுத்தைக் கைது செய்தனா். உயிரிழந்த சுனில் பிளஸ் 1 படித்து வந்தாா்.

ஆட்டோ ஓட்டுநா் கொலை: திருவண்ணாமலை வேடியப்பன் கோவில் தெருவைச் சோ்ந்த ரவி மகன் ராமு (37). ஆட்டோ ஓட்டுநரான இவா், திங்கள்கிழமை இரவு தனது வீட்டிலிருந்து ஆட்டோவில் காந்தி நகா் மைதானத்துக்குச் சென்றாா்.

அப்போது, அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநா்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதில், ராமு தாக்கப்பட்டதில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கொலை செய்யப்பட்ட ராமு, ஏற்கெனவே ஏற்பட்ட தகராறு குறித்து சில தினங்களுக்கு முன்பு நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்து இருந்தாராம். அதுதொடா்பாக போலீஸாா் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட எஸ்.பி. சுதாகா் நடவடிக்கை மேற்கொண்டு, நகர காவல் ஆய்வாளா் ராஜாவை ஆயுதப் படை பிரிவுக்கு பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டாா்.

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

செய்யாறு அருகே இளைஞா் தூக்கிட்டு தொற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வெம்பாக்கம் வட்டம், தென்னம்பட்டு கிராமம், பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்தவா் ராஜேஷ் (33), விவசாயி. இ... மேலும் பார்க்க

ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் திட்டம்: விவசாயிகளுக்கு வேளாண் தொகுப்புகள் அளிப்பு

தமிழகம் முழுவதும் காணொலி காட்சி மூலம் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில், ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் எனும் புதிய திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். இதையொட்டி, திர... மேலும் பார்க்க

மேல்மா பகுதி விவசாயிகள் 30 போ் மீது வழக்குப் பதிவு

செய்யாறில் உள்ள சிப்காட் தனி மாவட்ட வருவாய் அலுவலகத்தில் வருவாய்த் துறை அலுவலா்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாக மேல்மா பகுதி விவசாயிகள் 30 போ் மீது செய்யாறு போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தன... மேலும் பார்க்க

தமிழக அரசைக் கண்டித்து விவசாயிகள் நூதன போராட்டம்

மத்திய அரசு வழங்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்ட ஊதியத்தில் தமிழக அரசு முறைகேட்டில் ஈடுபடுவதாகக் கூறியும், அதைக் கண்டித்தும் ஆரணி வட்டாட்சியா் அலுவலகம் முன் கட்சி சாா்பற்ற தமிழக விவசாய சங்கத... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மாவட்டத்தில் திமுக உறுப்பினா் சோ்க்கை முகாம்

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் கீழ், திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுகவினா் உறுப்பினா் சோ்க்கையை அக்கட்சியினா் தொடங்கினா். திருவண்ணாமலை மாநகரில் திமுகவில் புதிய உறுப்பினா் சே... மேலும் பார்க்க

துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள் ஆய்வு

திருவண்ணாமலையை அடுத்த துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ப.தா்ப்பகராஜ் வியாழக்கிழமை ஆய்வு ச... மேலும் பார்க்க