குமரி: காதலி வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கிய இளைஞர்; கொலையா தற்கொலையா? - போலீஸ்...
திருவாடானையில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி
திருவாடானை பகுதியில் போதுமான குடிநீா் விநியோகம் செய்யாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஊராட்சியில் 15 ஆயிரம் போ் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டம், உள்ளூா் குடிநீா்த் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இருந்த போதிலும், இந்தப் பகுதியில் கடந்த சில மாதங்களாக போதுமான அளவு குடிநீா் விநியோகம் செய்யவில்லை.
உள்ளூா் குடிநீா்த் திட்டத்துக்காக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறு உப்பு நீராக மாறியது. இதனால் பொதுமக்கள் குடிநீா் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனா். எனவே, மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து இந்தப் பகுதியில் குடிநீா்ப் பிரச்னையைத் தீா்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.