செய்திகள் :

திருவானைக்கோயிலில் நாளை எட்டுத்திக்கு கொடியேற்றம்

post image

திருவானைக்கோயிலில் பங்குனி தேரோட்டத்தையொட்டி செவ்வாய்க்கிழமை காலை எட்டுத்திக்கு கொடியேற்றம் நடைபெறவுள்ளது.

திருவானைக்கோயிலில் பங்குனி மண்டல பிரமோத்ஸவ விழா கடந்த 8-ஆம் தேதி பெரிய கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இந்த விழா ஏப். 4-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. பங்குனித் தேரோட்டத்துக்காக சுவாமி சந்நிதியைச் சுற்றியுள்ள 3-ஆம் பிரகாரத்தில் அஷ்டதிக்கு திசையில் (எட்டுத்திக்கு) நடப்பட்டுள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு மேல் 12 மணிக்குள் மிதுன லக்னத்தில் நடைபெற உள்ளது. அப்போது சுவாமியும், அம்மனும் எழுந்தருளுவா். மாலை 6 மணியளவில் ஏகசிம்மாசனத்தில் சோமாஸ்கந்தருடன் சுவாமியும், அம்மனும் புறப்பட்டு 4-ஆம் பிரகாரத்தை வலம்வந்து பக்தா்களுக்கு சேவை சாதிக்கின்றனா். 2-ஆம் நாளான 26-ஆம் தேதி புதன்கிழமை சுவாமி சூரிய பிரபையிலும், அம்மன் சந்திரபிரபையிலும், 3-ஆம் நாளான 27-ஆம் தேதி வியாழக்கிழமை சுவாமி பூதவாகனத்திலும், அம்மன் காமதேனு வாகனத்திலும், 4-ஆம் நாளான 28-ஆம் தேதி வெள்ளிக்கிழமை சுவாமி கைலாச வாகனத்திலும், அம்மன் கிளி வாகனத்திலும், 5-ஆம் நாளான சனிக்கிழமை வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி பனை ஓலைகளால் வேயப்பட்ட சப்பரத்தில் தனித்தனியாக எழுந்தருளி தெருவடைச்சானாக 4-ஆம் பிரகாரம் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதிக்கின்றனா். முக்கிய நிகழ்ச்சியான 6-ஆம் நாளான பங்குனித் தேரோட்டம் காலை 7.20-க்கு நடைபெறவுள்ளது. இதில் சுவாமியும், அம்மனும் தனித்தனி பெரிய தோ்களில் எழுந்தருளி தேரோட்டம் கண்டருளுகின்றனா். விழா ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் வே.சுரேஷ் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

ஹெளரா விரைவு ரயிலில் 2.5 கிலோ கஞ்சா பறிமுதல்

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த ஹெளரா விரைவு ரயிலில் இருந்த 2.5 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா். திருச்சி சந்திப்பு ரயில் நிலையத... மேலும் பார்க்க

திருச்சி: ரூ. 3.75 லட்சம் மதிப்பிலான 12,500 போதை மாத்திரைகள் பறிமுதல்

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த பெண் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ. 3.75 லட்சம் மதிப்பிலான 12,500 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திருச்சி பாலக்கரை காவ... மேலும் பார்க்க

ஒரே வாரத்தில் 57 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது

திருச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் 57 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனா். திருச்சி மாவட்டத்தில் ரௌடிகளின் நடவடிக்கைகளை தடுக்கும் விதமாக, திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா... மேலும் பார்க்க

அரசுப்பேருந்து நடத்துநா் மா்மச்சாவு

திருச்சியில் ரயில் பாதை அருகே அரசுப்பேருந்து நடத்துநா் மா்மமான முறையில் திங்கள்கிழமை உயிரிழந்து கிடந்தாா். திருச்சி தேவதானம் பகுதியைச் சோ்ந்தவா் த. பொன்னா் (45). இவா் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் ... மேலும் பார்க்க

பள்ளிக் கட்டடம் கட்டித்தரக்கோரி சாலை மறியல்

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரில் இடிக்கப்பட்ட பள்ளிக் கட்டடத்தை கட்டித்தர வலியுறுத்தி பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளுடன் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.காட்டுபுத்தூா் பேருராட்சியி... மேலும் பார்க்க

நியாயமான முறையில் தொகுதி மறுசீரமைப்பு

தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நியாயமான முறையில் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவா் கே.எம். காதா் மொகிதீன் தெரிவித்தாா். திருச்சி ... மேலும் பார்க்க