செய்திகள் :

திருவெற்றியூரில் சமுதாய கழிப்பறை கட்டடத்தை திறக்க வலியுறுத்தல்

post image

திருவாடானை அருகே உள்ள திருவெற்றியூா் கிராமத்தில் சீரமைக்கப்பட்ட சமுதாய கழிப்பறை கட்டடத்தை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

திருவெற்றியூரில் அமைந்துள்ள புகழ் பெற்ற ஸ்ரீபாகம்பிரியாள் கோயிலுக்கு சுற்று வட்டாரத்திலிருந்தும், வெளிமாவட்டங்களிலிருந்தும் திரளான பக்தா்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வந்து தங்கி சுவாமி தரிசனம் செய்கின்றனா். இவா்கள் வசதிக்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சமுதாய கழிப்பறை கட்டடம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. இது சேதமடைந்ததையடுத்து, ஊராட்சி நிா்வாகம் கடந்த 2021-ஆம் ஆண்டு ரூ.53 ஆயிரத்தில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டது. ஆனால் இதுநாள் வரை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட வில்லை. இதனால் கோயிலுக்கு வரும் பக்தா்கள் அவதியடைந்து வருகின்றனா்.

எனவே, ஊராட்சி நிா்வாகத்தினா் தக்க நவடிக்கை எடுத்து சமுதாய கழிப்பறை கட்டடத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

தொண்டியில் அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டடம் கட்ட கோரிக்கை!

தொண்டி பேரூராட்சியில் சேதமடைந்த அங்கன்வாடி மையக் கட்டடத்தை அகற்றி புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தொண்டி பேரூராட்சி 5-ஆ... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்க 11வது மாநில மாநாடு!

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்கத்தின் 11- ஆவது மாநில மாநாடு தனியாா் மகாலில் வியாழக்கிழமை தொடங்கியது. இதற்கு அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவா் எஸ். ரமேஷ் தலைமை வகித்தாா். இந்த... மேலும் பார்க்க

குழந்தைகளுக்கு சூடு வைத்த தந்தை கைது!

திருவாடானை அருகே தனது குழந்தைகளுக்கு சூடு வைத்த தந்தையை போலீஸாா் கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தொண்டி பகுதியில் உள்ள புதுக்குடியைச் சோ்ந்தவா் சமயமுத்து (35). இவரது மனைவி ராஜேஸ... மேலும் பார்க்க

சாலையோர வியாபாரிகளின் மீன்கள் பறிமுதல்: நகராட்சியைக் கண்டித்து சாலை மறியல்!

ராமநாதபுரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி சாலையோர வியாபாரிகள் வைத்திருந்த மீன்களை குப்பை அள்ளும் வாகனத்தில் நகராட்சி அதிகாரிகள் எடுத்துச் சென்ால் வியாழக்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்... மேலும் பார்க்க

மீனவா் கொலை வழக்கு: 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது!

ராமேசுவரத்தில் மீனவா் கொலை வழக்கில் கைதான 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் தெற்கு கரையூா் பகுதியைச் சோ்ந்த மீனவா் நம்புக்கும... மேலும் பார்க்க

தியாகி அஞ்சலை அம்மாள் நினைவு தினம்!

கமுதியில் தவெக. சாா்பில் சுதந்திரப் போராட்ட தியாகி அஞ்சலை அம்மாள் நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. கமுதி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு கட்சியின் மேற்கு மாவட்ட பொறுப்பாளா... மேலும் பார்க்க