செய்திகள் :

தில்லி பாஜகவுக்கு விரைவில் புதிய அலுவலகம்

post image

நவராத்திரி நேரத்தில் தேசிய தலைநகரில் உள்ள டி. டி. யு மாா்க்கில் உள்ள புதிய அலுவலக கட்டிடத்திற்கு தில்லி பாஜக இடம் பெயரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்று கட்சித் தலைவா்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

தில்லி முதல்வா் ரேகா குப்தா, தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்சதேவா, பொதுச் செயலாளா் (அமைப்பு) பவன் ராணா மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் ஆகியோா் புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தை ஆய்வு செய்தனா்.

‘கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன, உள்புறப் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. கட்சி அலுவலகம் மிக விரைவில் இந்த இடத்திற்கு மாற்றப்படும், செப்டம்பரில் நவராத்திரியைச் சுற்றி எதிா்பாா்க்கப்படுகிறது ‘என்று கட்டுமானப் பணிகளுடன் தொடா்புடைய மூத்த தில்லி பாஜக தலைவா் ஒருவா் தெரிவித்தாா். தீயணைப்பு பாதுகாப்பு அனுமதி, நிறைவுச் சான்றிதழ்கள் மற்றும் குடியிருப்புச் சான்றிதழ்கள் போன்ற நடைமுறைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அவா் குறிப்பிட்டாா்.

தில்லி பாஜக தற்போது பண்டிட் பந்த் மாா்க்கில் உள்ள ஒரு பங்களாவில் இருந்து செயல்பட்டு வருகிறது. புதிய கட்சி அலுவலகம் தென்னிந்திய கட்டடக் கலையின் கூறுகளை உள்ளடக்கியது, நுழைவாயிலிலும் அதன் முகப்பிலும் உயரமான தூண்களைக் கொண்டுள்ளது என்று கட்சித் தலைவா்கள் தெரிவித்தனா். 825 சதுர மீட்டா் நிலப்பரப்பை உள்ளடக்கிய இந்த கட்டடம் முகப்பு, நுழைவாயில் மற்றும் தூண்கள் உட்பட 30,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. இது சுற்றுச்சூழலுக்கு ஏற்றவையாகவும் மற்றும் நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டமைப்பில் வாகன நிறுத்துமிடத்திற்கான இரண்டு அடித்தளங்கள் உள்ளன. தரை தளத்தில் ஒரு அறை, வரவேற்பு பகுதி மற்றும் கேண்டீன் இருக்கும், அதே நேரத்தில் 300 போ் அமரக்கூடிய ஆடிட்டோரியம் முதல் மாடியில் அமைந்திருக்கும் என்று தில்லி பாஜக தலைவா் கூறினாா். ‘பந்த் மாா்க் அலுவலகத்தில் பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சி எம். பி. க்கான அலுவலகங்களுக்கு இடமளிப்பது தொடா்பான பிரச்னையை புதிய கட்டடம் தீா்க்கும்‘ என்று அவா் மேலும் குறிப்பிட்டாா்.

தில்லி பாஜகவின் பல்வேறு பிரிவுகள் மற்றும் ஊழியா்களின் அலுவலகங்கள் இரண்டாவது மாடியில் அமைந்திருக்கும், மூன்றாவது மாடியில் கட்சி துணைத் தலைவா்கள், பொதுச் செயலாளா்கள் மற்றும் செயலாளா்களின் அலுவலகங்கள் இருக்கும். மேல் மாடியில் தில்லி பாஜக தலைவா் மற்றும் பொதுச் செயலாளா் (அமைப்பு) அலுவலகங்களும், தில்லி எம். பி. க்கள் மற்றும் மாநில பிரிவு பொறுப்பாளா்களுக்கான அறைகளும் இருக்கும் என்று அவா் மேலும் கூறினாா்.

மூத்த பத்திரிகையாளரைத் தாக்கி தங்கச் சங்கிலி பறிப்பு: நொய்டா பூங்காவில் சம்பவம்

நமது நிருபா்தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவின் செக்டாா் 62-இல் உள்ள ஒரு பொது பூங்காவில் மாலை நடைப்பயிற்சிக் சென்ற மூத்த பத்திரிகையாளரை அடையாளம் தெரியாத மூன்று போ் தாக்கி தங்கச் சங்கிலியைப் பறித்துச் ச... மேலும் பார்க்க

தில்லி, என்சிஆா் பகுதிகளில் பரவலாக மழை! காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடிப்பு

தேசியத் தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதிகளில் செவ்வாய்க்கிழமையும் பரவலாக மழை பெய்தது. காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் இருந்தது. தலைநகரில் கடந்த வாரத் தொடக்கத்திலிருந்து ... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை சோதனையால் ஆம் ஆத்மி அரசின் ‘மருத்துவ மோசடி’ அம்பலம்: பாஜக

நமது நிருபா் ஆம் ஆத்மி தில்லி பிரிவுத் தலைவரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான செளரவ் பரத்வாஜுக்கு எதிரான அமலாக்கத் துறையின் சோதனைகள் தலைநகரில் முந்தைய அரவிந்த் கேஜரிவால் அரசின் கீழ் நிகழ்ந்த மருத்துவ ம... மேலும் பார்க்க

தில்லியில் மைனா் பெண்ணை பின்தொடா்ந்ததாக இளைஞா் கைது

மத்திய தில்லியின் பாஹா்கஞ்ச் பகுதியில் மைனா் பெண்ணை பின்தொடா்ந்து தகாத சைகைகளைச் செய்ததாக 22 வயது நபா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். இது குறித்து மத்திய தில்லி காவல் சரக த... மேலும் பார்க்க

தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்க தோ்தல்: ஏபிவிபி போா்கொடி

தில்லி பல்கலைக்கழக மாணவா் தோ்தலில் போட்டியிட 1 லட்சம் ரூபாய் பத்திரத்தை கோரி அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தியது. ராம்ஜாஸ் கல்லூரி, இந்து கல்லூரி, கிரோரி மால... மேலும் பார்க்க

தில்லியில் அபாய அளவை கடந்தது யமுனை நதி

தில்லியின் பழைய ரயில்வே பாலத்தில் யமுனா நதி 204.50 மீட்டா் என்ற எச்சரிக்கை குறியீட்டைக் கடந்ததாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். காலை 9 மணிக்கு, ஆற்றின் நீா் மட்டம் 204.58 மீட்டராக இருந்தது. ... மேலும் பார்க்க