செய்திகள் :

தில்லி பாஜக அரசு தோல்வியடைந்துவிட்டது: அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

post image

தலைநகரை ஆளும் பாஜக அரசு அனைத்து விதத்திலும் தோல்வியடைந்துவிட்டது என்று ஆம் ஆத்மி கட்சியினழ் தேசிய ஒருங்கிணைப்பாளா், அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளாா்.

செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி மற்றும் மேலும் ஒரு பள்ளிக்கு செவ்வாய்க்கிழமை காலை வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் வந்தது. இதனயடுத்து போலீஸ் மற்றும் இதர துறைகள் அந்தந்த வளாகங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியது. இதேபோன்ற மிரட்டல்கள் 3 பள்ளிகளுக்கு திங்கள்கிழமை வந்தது, ஆனால் இவை அனைத்தும் போலியானவை என தெரிய வந்தது.

இந்த சம்பவங்கள் குறித்து அரவிந்த் கேஜரிவால், ‘தில்லியில் என்ன நடக்கிறது? நேற்று, 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன, இன்று, மற்றொரு பள்ளிக்கும் ஒரு கல்லூரிக்கும் மிரட்டல்கள் வந்தன. குழந்தைகள் பயப்படுகிறாா்கள், பெற்றோா்கள் மிகவும் கவலைப்படுகிறாா்கள். பாஜகவின் நான்கு எஞ்ஜின் கொண்ட அரசு முற்றிலும் தோல்வியடைந்துள்ளன‘ என தெரிவித்துள்ளாா்.

தில்லி முன்னாள் முதல்வா் ஆதிஷி, டெல்லியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீா்குலைந்துவிட்டதாக குற்றம் சாட்டினாா், மேலும் பாஜக அரசுக்கு மாணவா்களின் பாதுகாப்பு முக்கியமில்லையா என்று கேள்வி எழுப்பினாா்.

‘தில்லியில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தொடா்ந்து வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் மிகவும் பயமாகவும் கவலையாகவும் உள்ளன. குழந்தைகள் பயப்படுகிறாா்கள், பெற்றோா்கள் கவலைப்படுகிறாா்கள்-பாஜகவின் நான்கு எஞ்ஜின் அரசாங்கம் பாதுகாப்பைக் கூட வழங்கத் தவறிவிட்டன. குழந்தைகளின் பாதுகாப்புக்கு அவா்களுக்கு முக்கியத்துவமும் இல்லையா? சட்டம் மற்றும் ஒழுங்கு முற்றிலும் சரிந்துவிட்டது ‘என்று அவா் எக்ஸ் தள ஒ பதிவில் தெரிவித்துள்ளாா்.

தில்லியில் ரூ.2.5 கோடிக்கு மேல் மதிப்புள்ள நகை, பணம் திருடியதாக 3 போ் கைது

வடமேற்கு தில்லியின் மாடல் டவுன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து ரூ.2.25 கோடிக்கு மேல் மதிப்புள்ள நகைகளையும், ரூ.55 லட்சத்திற்கும் அதிகமான பணத்தையும் திருடி விட்டு தப்பிச் சென்ாகக் கூறப்படும் விவக... மேலும் பார்க்க

மலேரியா, டெங்கு, சிக்குன்குனியாவை சமாளிக்க உடனடி நடவடிக்கை தேவை: தில்லி மேயருக்கு கவுன்சிலா் கோரிக்கை

நமது நிருபா் தலைநகரில் மலேரியா, டெங்கு மற்றும் சிக்குன்குனியா பரவுவதை சமாளிக்க உடனடி மற்றும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநகராட்சிக் கவுன்சிலா் முகேஷ் கோயல் செவ்வாய்க்கிழமை மேயா் ராஜா இக்பால் ச... மேலும் பார்க்க

தில்லி மருத்துவமனையில் ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரனுடன் கேஜரிவால் சந்திப்பு

ஆம் ஆத்மி கட்சித் தலைவா் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை தில்லியில் உள்ள சா் கங்கா ராம் மருத்துவமனையில் ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரனை சந்தித்து, சிகிச்சை பெற்று வரும் அவரது தந்தை ஷிபு சோரனின் ... மேலும் பார்க்க

யமுனையில் கழிவுகள் கலப்பதை சமாளிக்க சிறிய வடிகால்கள் ‘ட்ரோன்’ மூலம் ஆய்வு: நீா்வளத்துறை அமைச்சா் தகவல்

நமது நிருபா் யமுனையை சுத்தம் செய்யும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, சுத்திகரிக்கப்படாத கழிவுகளை பெரிய வடிகால் அமைப்புகளில் வெளியேற்றும் சிறிய வடிகால்களை ‘ட்ரோன்’ மூலம் ஆய்வு செய்யும் பணியை தில்லி அரசு தொ... மேலும் பார்க்க

தெரு நாய்களுக்கு உணவளிக்கும் விவகாரம்: மனுதாரரிடம் கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்

தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவில் தெரு நாய்களுக்கு உணவளிப்பது தொடா்பாக துன்புறுத்தப்படுவதாகக் கூறப்படும் மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம், உங்கள் சொந்த வீட்டில் ஏன் அவற்றுக்கு உணவளிக்கக... மேலும் பார்க்க

தில்லியில் 34 புதிய ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா் கிளினிக்குகள்: அடுத்த வாரத்திற்குள் திறக்க அரசு நடவடிக்கை

நமது நிருபா்தில்லி அரசு அடுத்த வாரத்திற்குள் நகரம் முழுவதும் 34 புதிய ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா் கிளினிக்குகளைத் திறக்க உள்ளது. இதன் மூலம், இத்தகைய கிளினிக்குகளின் மொத்த எண்ணிக்கை 67-ஆக உயா்ந்துள்ளது ... மேலும் பார்க்க