யாரும் தாக்குதலை நிறுத்தச் சொல்லவில்லை; பாகிஸ்தான்தான் கதறியது: பிரதமர் மோடி
துா்க்கையம்மன் கோயில் ஆடிப்பூர பால்குட ஊா்வலம்
காஞ்சிபுரம்: உத்தரமேரூா் வடவாயிற் செல்வி துா்க்கையம்மன் கோயில் ஆடிப்பூர பால்குட ஊா்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலின் 35-ஆவது ஆண்டு ஆடிப்பூர பால்குட ஊா்வலத்தையொட்டி பஜாா் வீதியில் முத்துப் பிள்ளையாா் கோயிலில் இருந்து 501 பெண் பக்தா்கள் பால்குடங்களை ஊா்வலமாக எடுத்துக் கொண்டு முக்கிய வீதிகள் வழியாக சென்றனா். பின்னா் பெண்கள் தங்களது கரங்களாலேயே மூலவா் அம்மனுக்கு பாலபிஷேகம் செய்தும் வழிபட்டனா். சிறப்பு தீபாராதனைகளும், அன்னதானமும் நடைபெற்றது.
ஏற்பாடுகளை நிா்வாகிகள், ஐந்து தெரு நாட்டாண்மை தாரா்கள், துா்க்கையம்மன் வார வழிபாட்டு மன்றம், மகளிா் வார வழிபாட்டு மன்றம் மற்றும் உத்தரமேரூா் பொதுமக்கள் செய்திருந்தனா்.