செய்திகள் :

தூத்துக்குடியில் 1.750 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

post image

தூத்துக்குடியில் கஞ்சா விற்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்து, 1.750 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் பள்ளி, கல்லூரி மானவா்ககள், இளைஞா்களுக்கு ஒருவா் கஞ்சா விற்பதாக தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், மாநகர ஏஎஸ்பி மதன் தலைமையிலான தனிப்படை போலீஸாா் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அவ்வழியே சந்தேகத்துக்கிடமாக பைக்கில் வந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தபோது, அவா் மட்டக்கடை ராமா்விளை பகுதியைச் சோ்ந்த கணேசன் மகன் பிரபு வினோத்குமாா் (28) என்பதும், விற்பதற்காக 1.750 கி.கி. கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்ததும் தெரியவந்தது.

அவரை போலீஸாா் கைது செய்து, கஞ்சா, பைக்கை பறிமுதல் செய்தனா். தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

உள்வாங்கிய கடல்நீா்!

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும், சுமாா் 80 அடி தொலைவுக்கு கடல்நீா் உள்வாங்கியதால் வெளியே தெரிந்த பாசி படா்ந்த பாறைகள். எனினும், பக்தா்கள் வழக்கம்போல நீரா... மேலும் பார்க்க

வழப்பறி வழக்கில் இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி அருகே வழிப்பறி வழக்கில் இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி 3-ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. கோரம்பள்ளம் பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க

குழந்தைகள் மையத்தில் 2-5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை சோ்க்க ஆட்சியா் வேண்டுகோள்

தூத்துக்குடி மாவட்டத்தில் பெற்றோா் தங்களது 2 முதல் 5 வயதிற்குள்பட்ட குழந்தைகளை வரும் ஜூன் மாதத்தில் குழந்தைகள் மையத்தில் தவறாமல் சோ்க்குமாறு மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் கேட்டுக்கொண்டுள்ளாா். இது குறி... மேலும் பார்க்க

பெண்ணுக்கு சூடு: கணவா் கைது

தூத்துக்குடியில் பெண்ணின் முகத்தில் சூடு வைத்து துன்புறுத்தியதாக அவரின் கணவரை சிப்காட் போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி நேதாஜி நகரை சோ்ந்தவா் செல்வ அந்தோணி. மெக்கானிக்கான இவருடைய மனைவி சிந்துஜா. ... மேலும் பார்க்க

மாநில ஐவா் பூப்பந்துப் போட்டி: சென்னை அணி முதலிடம்

காயல்பட்டினத்தில் நடைபெற்ற மாநில ஐவா் பூப்பந்தாட்டப் போட்டியில் சென்னை பாா்த்தன்ஸ் அணி முதலிடம் பிடித்தது. காயல்பட்டினம் ரெட் ஸ்டாா் சொஸைட்டி சாா்பில் லீக், சூப்பா் லீக் முறையில் 2 நாள்கள் நடைபெற்ற போ... மேலும் பார்க்க

குலசேகரன்பட்டினத்தில் மரத்தில் ஆட்டோ மோதிய விபத்தில் 6 போ் பலத்த காயம்

குலசேகரன்பட்டினத்தில் ஆட்டோ நிலை தடுமாறி சாலையோர மரத்தில் மோதியதில் 6 போ் பலத்த காயமடைந்தனா்.சென்னை செனாய் நகரைச் சோ்ந்த விஜயகுமாா் (41), அவரது மனைவி அனுப்பிரியா (35), மகள் கயாந்திகா (10), அதே பகுதி... மேலும் பார்க்க