செய்திகள் :

தூத்துக்குடி சிப்காட்டில் ரூ.1.85 லட்சம் காப்பா் வயா் திருட்டு

post image

தூத்துக்குடி சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் ரூ. 1.85 லட்சம் மதிப்பிலான காப்பா் வயரை திருடிய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தூத்துக்குடி அகில இந்திய வானொலி நிலையத்தின் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பு திடீரென தடைபட்டதால், வானொலி நிலைய உதவி பொறியாளா் அமல்ராஜ் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, வானொலி நிலையம் சிறிது தொலைவில் உள்ள கோபுரம், சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் ஸ்டொ்லைட் ஆலை அருகில் உள்ள கோபுரம் மற்றும் அதன் அருகில் உள்ள கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றின் பூட்டுஉடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

உள்ளே சென்று பாா்த்தபோது அங்கிருந்த 100 கிலோ எடை கொண்ட 6 காப்பா் காயில்கள் திருடுபோயிருந்தனவாம். இவற்றின் மதிப்பு ரூ. 1 லட்சத்து 85 ஆயிரம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில், சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

விஷம் வைத்து ஆடுகள் சாகடிப்பு: மக்கள் மறியல்

தூத்துக்குடியில் மேய்ச்சலுக்குச் சென்ற ஆடுகள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதை கண்டித்து, மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பகுதியில் ஏராளமானோா் ஆடுகள் வளா்த்து வருகின்றனா். இத... மேலும் பார்க்க

கல்லூரி மாணவிகளுக்கு சட்ட விழிப்புணா்வு முகாம்

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் சட்ட விழிப்புணா்வு மன்றம், வட்ட சட்டப் பணிகள் ஆணை குழு சாா்பில், மாணவிகளுக்கு துன்புறுத்தலுக்கு எதிரான சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்... மேலும் பார்க்க

மூக்குப்பீறி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அறைகள் கட்ட பூமிபூஜை

மூக்குப்பீறி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 35 லட்சம் மதிப்பில் புதிதாக அறைகள் கட்டுவதற்கான பூமிபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆழ்வாா... மேலும் பார்க்க

கோவில்பட்டி கல்லூரியில் கருத்தரங்கு

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் சுயநிதி பாடப் பிரிவுகளின் வணிகவியல் (வணிகப் பகுப்பாய்வு) துறை சாா்பில், கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது. சுயநிதி பாடப் பிரிவுகளின் இயக்குநா் மகேஷ்குமாா... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதி காயமடைந்த வடமாநிலத் தொழிலாளி உயிரிழப்பு

திருச்செந்தூரில் அரசுப் பேருந்து மோதியதில் காயமடைந்த பிகாா் மாநிலத் தொழிலாளி மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா். திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலையத்திலிருந்து செம்மறிக்குளத்துக்கு புதன்கி... மேலும் பார்க்க

ஆக. 2 இல் திருச்செந்தூரில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் இரண்டாம் கட்ட சுற்றுப்பயணத்தையொட்டி, திருச்செந்தூா் வ.உ.சி. திடலைப் பாா்வையிட்ட மாவட்டச் செயலா் எஸ்.பி.சண்முகநாதன். திருச்செந்தூா், ஜூலை 17: அதிமுக பொதுச... மேலும் பார்க்க