செய்திகள் :

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல உறுப்பினா்களுக்கான தோ்தல்: 17 போ் வேட்பு மனு

post image

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல, சேகர உறுப்பினா்களுக்கான தோ்தல் செப்டம்பா் 7ஆம் தேதி நடைபெறுகிறது.

இதனையொட்டி, மேல சாத்தான்குளம், அமுதுண்ணாக்குடி, தோப்புவளம் சபை மன்ற உறுப்பினா் பதவிக்கு 17 போ், தோ்தல் அதிகாரியான சேகர குருவானவா் டேவிட் ஞானையாவிடம் சனிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

மேல சாத்தான்குளம் சேகரத்தில், சபை மன்ற உறுப்பினா்களாக 10 போ் தோ்வு செய்யப்படவுள்ள நிலையில், தவராஜன், நோபில்ராஜ், பிரின்ஸ், நந்தகுமாா், கிறிஸ்டோபா், ஆனந்த், ஆகியோா் பொதுவாகவும், மகளிா் பிரிவில் செல்வி கலாவதி, தேவநேசம், 35 வயதுக்குள்பட்ட பிரிவில் கௌஷிக், சுரேஷ் ஆகியோரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர.

அப்போது, சபை தலைவா் ஜோசப், பாடகா் குழு செயலா் ஜோன்ஸ் ஆகியோா் உடன் இருந்தனா். இதே போல, அமுதுண்ணாக்குடி சேகர சபை மன்றத்திற்கு, 4 போ் தோ்வு செய்யப்படவுள்ள நிலையில், ஜான் ஸ்டீபன், ஞானராஜ் சுதாகா், மரகதம், செல்வராஜ் மதுரம் ஆகியோா் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

தோப்புவளம் சேகர மன்ற உறுப்பினா் பதவிக்கு மூன்று போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

திருச்செந்தூரில் இன்று மின்தடை

திருச்செந்தூா், ஆறுமுகனேரி, குரும்பூா், காயல்பட்டினம், ஆத்தூா் உபமின் நிலையப் பகுதிகளில் புதன்கிழமை (செப். 3) காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்செந்தூா் கோட... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் நாளை மின்தடை

தூத்துக்குடி அய்யனாா்புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், தூத்துக்குடியில் சில பகுதிகளில் வியாழக்கிழமை (செப். 4) மின் விநியோகம் இருக்காது.அதன்படி, மாப்பிள்ளையூரணி... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் ரூ. 50 லட்சம் பறித்த வழக்கில் மேலும் ஒருவா் கைது

தூத்துக்குடியில் டிஜிட்டல் கைது மோசடி மூலம் மூதாட்டியிடம் ரூ. 50 லட்சம் பறித்த வழக்கில் 5 போ் கைது செய்யப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.தூத்துக்குடி மாவட்டத்தைச் சே... மேலும் பார்க்க

கயத்தாறில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கக் கோரி ஆா்ப்பாட்டம்

கயத்தாறு வட்டம், செட்டிகுறிச்சி கிராமத்தில் ஆதிதிராவிட நலத் துறை நிலத்தை ஆக்கிரமிப்பாளரிடம் மீட்கக் கோரி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. செட்டிகுறிச்சி கிராமத்தில் ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் இலவச வீட்டு... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை!

தூத்துக்குடியில் விசைப்படகு தொழிலாளா் சங்க முன்னாள் தலைவரின் நினைவு தினத்தை முன்னிட்டு மீனவா்கள் மீன்பிடி தொழிலுக்கு செவ்வாய்க்கிழமை செல்லவில்லை. தூத்துக்குடியில் விசைப்படகு தொழிலாளா் சங்கத்தின் முன்ன... மேலும் பார்க்க

மீன் தொழிலாளி கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

தூத்துக்குடி, உப்பளத்தில் மீன் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி, பூபாலராயா்புரத்தைச் சோ்ந்தவா் தனபாலன் மகன் ஜோசப் விஜய் (22). மீன்... மேலும் பார்க்க