செய்திகள் :

தூத்துக்குடி: `பாட்டுக்குப் பாட்டு' - போலீஸாரின் நூதன தண்டனை

post image

தூத்துக்குடி, முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்  ராஜா என்ற எலி ராஜா. இவர் மீது  கொலை, கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள்  நிலுவையில் உள்ளன. இவரை குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்து போலீஸார் கண்காணித்து வருகின்றனர். ராஜா, கடந்த சில நாட்களுக்கு முன் தனது நண்பர்களுடன் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடினார். அதனை ஒரு வீடியோவாக பதிவிட்டு சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்தார். அந்த வீடியோவில், ‘‘யாரா வேணாலும் இரு, நம்ம லைனில் கரெக்டா இரு, திரையரங்கம் சிதறட்டும், இவன் பெயர் முழுக்க களைக்கட்டும்.

முத்தையாபுரம் காவல் நிலையம்

சிறுசுங்க எல்லாம் கதறட்டும், விசில் பறக்கட்டும், நரகத்துக்கே தெரியட்டும், அந்த எமனுக்குமே புரியட்டும், உலகத்துக்கே கேட்கட்டும்’’ என்ற திரைப்பட பாடலின் பின்னணியில் அந்த வீடியோ அமைந்து இருந்தது.  பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும், எதிரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் இந்த வீடியோவை அவர் வெளியிட்டதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதுகுறித்து தூத்துக்குடி நகர உதவி காவல் கண்காணிப்பாளர் மதன் தலைமையிலான போலீஸார்  விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டதாக ராஜா உள்ளிட்ட சிலரை போலீஸார் கைது செய்தனர். மேலும் வீடியோ வெளியிட்டது தொடர்பாக, ராஜா மற்றும் அவரது நண்பர்கள் 2 பேரையும் முத்தையாபுரம் காவல் நிலையத்தின் முன்பு நிற்க வைத்து போலீஸார் நூதன தண்டனை விதித்தனர்.

முத்தையாபுரம் காவல் நிலையம்

”ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்”  என்ற திருக்குறளை ராஜா உள்பட 3 பேரையும் நன்றாக வாசிக்க சொல்லியும், அதன் பொருளை விளக்கி கூறச் சொல்லியும், போலீஸார்  வீடியோ பதிவு செய்து  அந்த வீடியோவை  சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ காட்சிகளும் தற்போது வேகமாக பரவி வருகிறது. நூதன தண்டனைக்கு பிறகு ராஜாவை தவிர மற்ற 2 பேரையும் போலீஸார் விடுவித்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

'கருவின் பாலினத்தைக் கண்டறிய ரூ.25,000' - புரோக்கரை மடக்கிப் பிடித்து சுகாதாரத்துறை; என்ன நடந்தது?

சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கர்ப்பிணிகளை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், கடலூர் மற்றும் ஆந்திரா மாநிலம் சித்தூருக்கு சட்டவிரோதமாக பாலினத்தைக் கண்டறிய அனுப்ப... மேலும் பார்க்க

`பொய்' பாலியல் புகார்; சிக்கவைத்த மாணவிகள்... 11 ஆண்டுகள் போராடி மீண்ட பேராசிரியர்!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டுவருகிறது. இங்கு பேராசிரியராக பணியாற்றியவர் ஆனந்த் விஸ்வநாதன். இவர் பொருளாதாரத்துறை துறைத்தலைவராகவும் இருந்துவந்தார். இதற்கிடையே பேராச... மேலும் பார்க்க

2வது மனைவி பிரிந்துசென்றதால் ஆத்திரம்; போதையில் குழந்தையைக் கொன்ற டெம்போ ஓட்டுநர்; என்ன நடந்தது?

கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம் தோப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரலிங்கம். இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு அபினவ் என்ற ஐந்து வயது மகன் இருந்தான்.சுந்தரலிங்கத்துக்கு செல்விக்கும் கருத்து வேறுபாடு ஏற... மேலும் பார்க்க

`52 முறை துபாய் சென்று தங்கம் கடத்தல்' - நடிகை ரன்யா ராவுக்கு ரூ.102 கோடி அபராதம்

கடந்த மார்ச் மாதம் 3ஆம் தேதி துபாயிலிருந்து 14.8 கிலோ தங்கத்தை கடத்திக் கொண்டு வந்த கன்னட நடிகை ரன்யா ராவ், பெங்களூரு விமான நிலையத்தில் பிடிபட்டார். அவர்மீது தற்போது வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள்... மேலும் பார்க்க

பெண்ணை எரித்துக் கொன்ற நபர்: லிவ்இன் உறவில் வாழ்ந்த பெண்ணை வேறு நபருடன் பார்த்ததால் வெறிச்செயல்!

பெங்களூருவில் உள்ள ஹுலிமாவு ரோட்டில் வனஜாக்‌ஷி(25) என்ற பெண் தனது ஆண் நண்பருடன் காரில் சென்று கொண்டிருந்தார். அவரது காரை பின் தொடர்ந்து வந்த மற்றொரு காரில் இருந்த நபர் தொடர்ந்து ஹாரன் அடித்துக்கொண்டே ... மேலும் பார்க்க

பாலியல் கொடுமை புகாரில் கைது: போலீஸார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி தப்பிய ஆம் ஆத்மி கட்சி எல்.எல்.ஏ

பஞ்சாப் மாநிலம், சனூர் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பாக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஹர்மீத் பதன்மஜ்ரா. இவர் மீது பெண் ஒருவர் போலீஸில் பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்திருந்தார். அப்புகாரில், `தனது மனைவிய... மேலும் பார்க்க