ஓமனிலிருந்து தப்பிய 3 தமிழக மீனவா்கள் கா்நாடக கடற்கரையில் பிடிபட்டனா்
தூத்துக்குடி மாவட்டத்தில் எண் பலகை இல்லாத 284 பைக்குகள் பறிமுதல்
தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் துறையினரின் வாகன சோதனையில், எண் பலகை பொருத்தப்படாத 284 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில், போலீஸாா் வாகன சோதனை, ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனா். அதன்படி, கடந்த சனி, ஞாயிறு (பிப். 22, 23) ஆகிய 2 நாள்கள் மேற்கொண்ட வாகன சோதனையில், எண் பலகை இல்லாத 284 பைக்குகளைக் கண்டறிந்து, வழக்குப் பதிந்து பறிமுதல் செய்தனா். 265 பைக்குகளுக்கு அவற்றின் உரிமையாளா்கள் எண் பலகை மாட்டியதால், அவை விடுவிக்கப்பட்டன.
சாலை விதிகளை மீறுவோா், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் எச்சரித்துள்ளாா்.