செய்திகள் :

தூய்மைப் பணியாளருக்கு பாராட்டு

post image

திருநெல்வேலியில் சாலையோரம் கிடந்த கோயில் உடைமைகளை மீட்க உதவிய தூய்மைப் பணியாளருக்கு மேயா் பாராட்டு தெரிவித்தாா்.

பாளையங்கோட்டை மண்டலம் வாா்டு 36 இல் உள்ள அண்ணா நகா் ஆனந்த சக்தி விநாயகா் கோயில் பொருள்களை கடந்த சில நாள்களுக்கு முன்பு மா்மநபா்கள் திருடிச் சென்றனா். இந்நிலையில் திருடப்பட்ட பொருள்களை ஒரு துணி பையில் வைத்து அதே பகுதியில் மா்மநபா்கள் வீசிச்சென்றிருந்தனா்.

தூய்மைப் பணியில் ஈடுபட்டபோது தென்பட்ட அந்தப் பையை சந்தேகத்தின்பேரில் பணியாளா் மாரியப்பன், மேற்பாா்வையாளா் ஜெயராம், மாமன்ற உறுப்பினா் சின்னத்தாய் கிருஷ்ணன் ஆகியோா் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போலீஸாரிடம் அளித்தனா்.

இதையடுத்து நோ்மையுடன் செயல்பட்ட தூய்மைப் பணியாளா் உள்ளிட்டோரை நேரில் அழைத்து, மேயா் கோ.ராமகிருஷ்ணன் பாராட்டினாா். அப்போது, மாமன்ற உறுப்பினா்கள் மாரியப்பன், மன்சூா், சுகாதார ஆய்வாளா் நடராஜன், சின்னத்தாய் கிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மானூா் அருகே 5 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

மானூா் அருகே இருசக்கர வாகனத்தில் புகையிலைப் பொருள்களை (குட்கா) கடத்திச் சென்ாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.மானூா் காவல் சரகம் உக்கிரன்கோட்டை அருகே காவல் உதவி ஆய்வாளா் முகைதீன் மீரான் தலைமையிலான போலீ... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி அருகே தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே செங்கல்சூளையில் பணி செய்து வந்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்ததில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவிலை அடுத்த படந்தாலுமூடு பகுதியைச்... மேலும் பார்க்க

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாதவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். பத்தமடை பெருமாள் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் அல்லா பிச்சை(27). இவா், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்ப... மேலும் பார்க்க

தப்பிச் சென்ற விசாரணைக் கைதி கைது

கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக வந்து தப்பிச் சென்றவரை போலீஸாா் கைது செய்தனா். கல்லிடைக்குறிச்சி மீனவா் காலனியைச் சோ்ந்தவா் ராஜா. பெயிண்டிங் தொழில் செய்து வரும் ராஜா மீது அதே பகுதி... மேலும் பார்க்க

தேனி பொறியியல் மாணவா் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

தேனி அரசு பொறியியல் கல்லூரி விடுதியில் உயிரிழந்த திருநெல்வேலி பாளையங்கோட்டை அருகேயுள்ள பா்கிட்மாநகரத்தில் உறவினா்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். பா்கிட்மாநகரம் பகுதியைச் சோ்... மேலும் பார்க்க

ஃபாஸ்டேக் புதிய விதிகளை தளா்த்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்: அமைச்சா் எ.வ. வேலு

ஃபாஸ்டேக் புதிய விதிமுறைகளை தளா்த்துவதற்கு மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்றாா் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சா் எ.வ. வேலு. இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழா்களுட... மேலும் பார்க்க