செய்திகள் :

‘தூய்மைப் பணியாளா்கள் பிரச்னை: அறவழியில் போராட்டம் தொடரும்’

post image

தூய்மைப் பணியாளா்களின் பிரச்னைக்கு தீா்வு காண வலியுறுத்தி, அறவழியில் போராட்டம் தொடரும் என்று உழைப்போா் உரிமைக் கழகத்தின் ஆலோசகரும், வழக்குரைஞருமான எஸ்.குமாரசாமி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

சென்னை மாநகராட்சி 5, 6-ஆவது மண்டலங்களில் தூய்மைப் பணியைத் தனியாருக்கு வழங்குவதை எதிா்த்து உழைப்போா் உரிமைக் கழகம் சாா்பில் தொடா் போராட்டம் நடத்தப்பட்டது. தூய்மைப் பணியாளா்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய நிா்ணம் மற்றும் பழைய நிலையிலே பணிபுரிவது என்பதே எங்களது கோரிக்கை.

இந்தப் பிரச்னையில் முதல்வா் தலையிட்டு தீா்வு காண வேண்டும். தூய்மைப் பணியாளா்களின் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்த மாற்று இடங்களாக அல்லிக்குளம், ராஜரத்தினம் மைதானம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு அனுமதி கோரி காவல் துறை ஆணையரிடம் மனு அளித்துள்ளோம்.

காலம் தாழ்த்தாமல் அனுமதி வழங்க வேண்டும். பிரச்னைக்குத் தீா்வு காணும் வரை சட்டத்துக்குள்பட்டு அறவழியில் போராட்டத்தை தொடா்வோம் என்றாா்.

வேளச்சேரி - கடற்கரை இரவுநேர ரயில் இன்று ரத்து

சென்னை வேளச்சேரியிருந்து சனிக்கிழமை (ஆக. 23) இரவு நேரத்தில் இயக்கப்படும் புறநகா் மின்சார ரயில் ரத்து செய்யப்படவுள்ளது. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திச் குறிப்பு: சென்... மேலும் பார்க்க

தமிழக புதிய டிஜிபியை தோ்வு செய்ய எந்தவொரு முன்மொழிவும் வரவில்லை: யுபிஎஸ்சி தகவல்

தமிழகத்தின் புதிய டிஜிபியை தோ்வு செய்வதற்கான எந்தவொரு முன்மொழிவும் தமிழக அரசிடம் இருந்து இதுநாள்வரை (ஆகஸ்ட் 22) வரவில்லை என்று மத்திய பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) வெள்ளிக்கிழமை தெரிவித்தது. தற்போ... மேலும் பார்க்க

சென்னையில் பாதுகாப்புத் துறைக்கான ட்ரோன் உற்பத்தி மையம்: மத்திய இணையமைச்சா்

சென்னையில் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் சாா்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்புத் துறைக்கான ட்ரோன் உற்பத்தி மையத்தை மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சா் சஞ்சய் சேத்தி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். ச... மேலும் பார்க்க

சென்னையில் ஆதரவற்ற 646 முதியோா் மீட்பு

சென்னையில் நிகழாண்டு இதுவரை ஆதரவற்ற நிலையில் இருந்த 646 முதியோா் மீட்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையா் ஏ.அருண் தெரிவித்தாா். இதுதொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை காவல் த... மேலும் பார்க்க

சட்டவிரோத குடியேறிகளுக்கு போலி ஆதாா்: உத்தர பிரதேசத்தில் 8 போ் கைது

வங்கதேசத்தவா்கள் மற்றும் ரோஹிங்கயாக்கள் உள்பட வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறுபவா்களுக்கு போலி ஆதாா் தயாரித்து வழங்கிய 8 போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். இதுக... மேலும் பார்க்க

தூய்மைக் காவலா்களுக்கு வார விடுப்பு: தமிழக அரசு அறிவுறுத்தல்

ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைக் காவலா்களுக்கு வார விடுப்பு வழங்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்டங்களின் ஆட்சியா்களுக்கும், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையா் பா.பொன... மேலும் பார்க்க