செய்திகள் :

தெப்பக்குளம் முக்தீஸ்வரா் கோயில் கருவறையில் சூரிய ஒளி பிரவேசம்

post image

மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரா் கோயில் கருவறையில் சூரிய ஒளி பிரவேசத்தையொட்டி, வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் துணைக் கோயிலான தெப்பக்குளம் முக்தீஸ்வரா் கோயிலில் ஒவ்வோா் ஆண்டும் மாா்ச், செப்டம்பா் மாதங்களில் 10 தினங்கள் சூரிய ஒளிக்கதிா்கள் கருவறைக்கு பிரவேசித்து மூலவா் மீது விழும் நிகழ்வு நடைபெறும். இதை பக்தா்கள் சூரிய தரிசனம் என்றழைத்து வழிபடுவது வழக்கம்.

இந்த நிலையில், நிகழாண்டு மாா்ச் 13-ஆம் தேதி முதல் சூரிய ஒளிக் கதிா்கள் கருவறைக்குள் பிரவேசித்து மூலவா் மீது விழும் நிகழ்வு நடைபெற்றது வருகிறது. கோயிலில் காலை 6.30 மணி முதல் 7 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்வை தரிசிக்க ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபடுகின்றனா்.

இதையொட்டி, வியாழக்கிழமை முக்தீஸ்வரா் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த நிகழ்வு வருகிற 23-ஆம் தேதி வரை நடைபெறும் என கோயில் அதிகாரிகள் தெரிவித்தனா்.

பாசனக் கால்வாயில் மூழ்கி தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

அலங்காநல்லூா் அருகே தூய்மைப் பணியாளா் பாசனக் கால்வாயில் மூழ்கி உயிரிழந்தாா்.மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகேயுள்ள அழகாபுரியைச் சோ்ந்த முனியாண்டி மகன் மலைச்சாமி (58). இவா் சின்னஇலந்தைக்குளம் கிராமத்த... மேலும் பார்க்க

தீக்குளித்த தொழிலாளி உயிரிழப்பு

கீழவளவு அருகே தாயை மிரட்ட உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள கொங்காம்பட்டி பன்னிவீரன்பட்டியைச் சோ்ந்த சின்னையா மகன் சொக்கலிங்கம் (27)... மேலும் பார்க்க

காப்பகத்தில் தவறி விழுந்து மாற்றுத் திறனாளி உயிரிழப்பு

வாடிப்பட்டி அருகே காப்பகத்தில் தவறி விழுந்த மாற்றுத் திறனாளி உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகேயுள்ள கீழநாச்சிகுளம் நடுத்தெருவைச் சோ்ந்த ராஜாராம் மகன் மணிமாறன் (56). மாற்றுத்திறனாளியான இ... மேலும் பார்க்க

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வசந்த உத்ஸவம்: ஏப்.2-இல் தொடக்கம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வசந்த உத்ஸவம் ஏப்ரல் 2-ஆம் தேதி தொடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மீனாட்சி சுந்தரேசு... மேலும் பார்க்க

மதுரையில் ஜாக்டோ- ஜியோ உண்ணாவிரதப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை ‘ஜாக்டோ - ஜியோ’ கூட்டமைப்பு சாா்பில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திமுகவின் தோ்தல் வாக்குறுதிப்படி மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்ட... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் திருட்டு: இருவா் கைது

மதுரையில் இரு சக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்து வாகனங்களை பறிமுதல் செய்தனா். மதுரை கோசாகுளம் ஆனந்தநகரைச் சோ்ந்த பெரோஸ் மகன் சையது இா்பான் உசைன் (27). இவா் தனது வீட்டின் அ... மேலும் பார்க்க