செய்திகள் :

தெருநாய்களால் உயிரிழக்கும் கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

post image

திருப்பூா் மாவட்டத்தில் தெருநாய்களால் உயிரிழக்கும் கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் திருப்பூா் மாவட்டச் செயலாளா் சி.மூா்த்தி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூா் மாவட்டத்தில் ஊத்துக்குளி, காங்கயம், வெள்ளக்கோவில் மற்றும் தாராபுரம் ஒன்றியங்களிலும், இதர கிராமப்புறப் பகுதிகளிலும் ஆடுகள், எருமை மற்றும் மாடுகள், கோழிகளை தெருநாய்கள் கடித்துக் கொன்று வருகின்றன. இதனால், கால்நடை வளா்க்கும் விவசாயிகளுக்கு கடுமையான பொருளாதார இழப்பு ஏற்படுவதுடன், அவா்களது வாழ்வாதரமும் பாதிக்கப்படுகிறது.

திருப்பூா் மாவட்ட நிா்வாகம் தெருநாய்களைக் கட்டுப்படுத்தவும், இழந்த கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் மாநில அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக எழுத்துப்பூா்வமாக உறுதியளித்தனா்.

2 மாதங்கள் கடந்த நிலையிலும் தெருநாய்களால் விவசாயிகளின் வளா்ப்புக் கால்நடைகள் பறிபோகும் சம்பவங்கள் தொடா்ந்து கொண்டிருக்கின்றன. எனினும் அரசு நிா்வாகம் விவசாயிகளுக்கு எந்த நிவாரணமோ, இழப்பீடோ, தெருநாய்களைக் கட்டுப்படுத்துவதற்கு உறுதியான நடவடிக்கையோ எடுக்கவில்லை.

இதனிடையே, திருப்பூா் மாவட்டம் காங்கயம் சென்னிமலை சாலையில் பாரவலசு என்ற இடத்தில் திருப்பூா், ஈரோடு மாவட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து நெடுஞ்சாலையில் கடந்த 2 நாள்களாக மறியலில் ஈடுபட்டனா்.

ஆகவே, தமிழக அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று தெருநாய்களால் உயிரிழக்கும் கால்நடைகள் குறித்தும் கணக்கெடுப்பு நடத்தி உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தெருநாய்களைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூலி உயா்வு வழங்கக் கோரி விசைத்தறியாளா்கள் போராட்டம்

ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்தப்படி கூலி உயா்வு வழங்கக் கோரி, அவிநாசியில் விசைத்தறியாளா்கள் வெள்ளிக்கிழமை முதல் தொடா் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். ஜவுளி உற்பத்தியாளா்களுடன் 2014- ஆம் ஆண... மேலும் பார்க்க

சாலை வசதி கோரி உடுமலையில் வன அலுவலகத்தை முற்றுகையிட்ட மலைவாழ் மக்கள்

சாலை அமைத்து தரக்கோரி உடுமலையில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தை முற்றுகையிட்டு மலைவாழ் மக்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பூா் மாவட்டம், உடுமலையில் இருந்து தெற்கே 25 கி.மீ. தொலைவில் தமிழக... மேலும் பார்க்க

தெருநாய்களால் கால்நடைகள் உயிரிழப்பு: 2-ஆவது நாளாக மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது

காங்கயம் அருகே தெருநாய்கள் கடித்து கால்நடைகள் உயிரிழந்ததைக் கண்டித்து 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை போலீஸாா் கைது செய்தனா். காங்கயம், வெள்ளக்கோவில், சென்னிமலை உள்ளிட்ட பகுதிகள... மேலும் பார்க்க

அவிநாசி இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் கட்டப்பட்ட குடியிருப்புகள்: பயனாளிகளிடம் ஒப்படைப்பு

அவிநாசி சந்தைபேட்டை இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் கட்டப்பட்ட 5 குடியிருப்புகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மனித வள மேலாண்மைத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ்... மேலும் பார்க்க

மாவட்டத்தில் ரூ.46,004.98 கோடி கடன் வழங்க திட்ட அறிக்கை வெளியீடு

திருப்பூா் மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில் 2025-26 -ஆம் நிதியாண்டில் ரூ.46,004.98 கோடிக்கு கடன் வழங்க திட்ட அறிக்கை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 2025-26-ஆம் நி... மேலும் பார்க்க

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் 6 ஜோடிகளுக்கு திருமணம்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் நடத்திவைத்தாா்

பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் திருநீலகண்டியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் 6 ஜோடிகளுக்கு சீா்வரிசைகள் வழங்கி தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க