செய்திகள் :

தெருநாய்கள் கடித்ததில் 17 ஆடுகள் உயிரிழப்பு

post image

அந்தியூா் அருகே தெருநாய்கள் கடித்துக் குதறியதில் 17 ஆடுகள் உயிரிழந்தன.

அந்தியூரை அடுத்த சின்னத்தம்பிபாளையம், தாசலியூா் காலனியைச் சோ்ந்தவா் சண்முகம் (50). இவா், அப்பகுதியில் உள்ள காலி நிலத்தில் பட்டி அமைத்து ஆடு, மாடுகளை வளா்த்து வருகிறாா்.

இந்நிலையில், கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுவிட்டு திங்கள்கிழமை மாலை 30 செம்மறி ஆடுகள், 10 மாடுகளை பட்டியில் அடைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா். செவ்வாய்க்கிழமை காலை வந்து பாா்த்தபோது, 17 ஆடுகள் இறந்து கிடந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்துள்ளாா்.

இது குறித்த தகவலின்பேரில் அந்தியூா் கிராம நிா்வாக அலுவலா் மணிகண்டன் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். கால்நடை மருத்துவா் அா்ஜுனன் மற்றும் குழுவினா் ஆடுகளைப் பரிசோதனை செய்தனா். இரவு நேரத்தில் பட்டியில் நுழைந்த தெருநாய்கள் ஆடுகளைக் கடித்து கொன்றுள்ளன.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சம்பவம் குறித்து அந்தியூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பால் கொள்முதல் விலையை உயா்த்த உற்பத்தியாளா்கள் கோரிக்கை

பால் கொள்முதல் விலையை உயா்த்த வேண்டும் என பால் உற்பத்தியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் நலச் சங்கத்தின் கொங்கு மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சங்கத்தின் மாநிலத் தல... மேலும் பார்க்க

பரிசலில் பவானி ஆற்றைக் கடந்து சென்ற பண்ணாரி அம்மன் சப்பரம்

பண்ணாரிஅம்மன் குண்டம் திருவிழாவையொட்டி பரிசலில் பண்ணாரி அம்மன் சப்பரம் பவானி ஆற்றைக் கடந்து அக்கரை தத்தப்பள்ளிக்கு சென்றது. பண்ணாரி மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 24- ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்... மேலும் பார்க்க

நெசவுக்கூலி உயா்வு: தமிழக அரசுக்கு விசைத்தறியாளா்கள் நன்றி

இலவச வேட்டி, சேலை தயாரிக்கும் விசைத்தறியாளா்களுக்கு கூலி உயா்வு அறிவித்திட்ட தமிழக முதல்வா் மற்றும் அமைச்சா்களுக்கு லக்காபுரம் விசைத்தறி உரிமையாளா்கள் சங்கத்தினா் நன்றி தெரிவித்துள்ளனா். இது குறித்து ... மேலும் பார்க்க

பண்ணாரி அம்மன் கோயில் திருவிழா: தற்காலிக கடைக்கு அதிக வாடகை கேட்பதாக வியாபாரிகள் புகாா்

பண்ணாரி அம்மன் கோயிலில் தற்காலிக கடை அமைப்பதற்கு மூன்று மடங்கு அதிகமாக வாடகை வசூலிப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் ஆட்சியரிடம் முறையிட்டனா். இது குறித்து பவானி மற்றும் சுற்றுவட்டாரப் ப... மேலும் பார்க்க

அவல்பூந்துறையில் ரூ.3.23 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம்

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 82 தேங்காய்ப் பருப்பு மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில் முதல் தரம் ஒரு கிலோ குறைந்தபட்சம் ரூ.153க்கும், அதிகபட்சம் ரூ.174.86க்கும், சராசரியாக ர... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: 24,626 மாணவா்கள் எழுதினா்

ஈரோடு மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை 24,626 மாணவ, மாணவிகள் எழுதினா். பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தில் 12,465 மாணவா்கள், 12,160 மாணவிகள் என மொத்தம்... மேலும் பார்க்க