செய்திகள் :

தெலங்கானாவை வெளுத்து வாங்கும் கனமழை! மாநிலம் முழுவதும் ரெட் அலர்ட்!

post image

தெலங்கானாவில், தலைநகர் ஹைதராபாத் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் கனமழை தீவிரமடைந்துள்ளதால், அம்மாநிலம் முழுவதும் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதியால், தெலங்கானா மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகின்றது.

இதனால், அடுத்த 2 நாள்களுக்கு அம்மாநிலம் முழுவதுமுள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுவதாக, தெலங்கானா வானிலை ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, சங்காரெட்டி, விக்காரபாத், மெடாக், மெட்சால் - மல்காஜ்கிரி, யத்தாத்ரி புவனகிரி, கம்மம், பத்ராத்ரி, கொதாகுடெம், புபால்பள்ளி மற்றும் முழுகு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று (ஆக.13) மற்றும் நாளை (ஆக.14) ஆகிய இரண்டு நாள்களுக்கு கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இத்துடன், ஹைதராபாத், ஹனுமாகொண்டா, அதிலாபாத், ஜன்காவோன், காமாரெட்டி, குமுராம் பீம் ஆசிஃபாபாத், மஹபூபாபாத், மன்செரியால், நல்கொண்டா, ரங்காரெட்டி, சித்திபேட் மற்றும் வாராங்கல் ஆகிய மாவட்டங்களுக்கு “ஆரஞ்ச் அலர்ட்” எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

பருவமழை தொடங்கியது முதல், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகின்றது. ஹைதராபாத் நகரத்தில் பெய்த கனமழையால், அங்குள்ள பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:பருந்துப் பார்வையில்... மனதை மயக்கும் பெங்களூர் மெட்ரோ!

A 'red alert' has been issued across the state as heavy rains have intensified in all parts of Telangana, including the capital Hyderabad.

கன்னட நடிகர் தர்ஷனின் ஜாமீன் ரத்து: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: ரசிகர் ரேணுகாசாமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த கன்னட நடிகர் தர்ஷனின் ஜாமீனை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பிரபல கன்னட நடிகர் தர்ஷன், தனது தோழியும் நடிகையுமான பவித்... மேலும் பார்க்க

தமிழகத்துக்கு வரவிருந்த ஆலையை குஜராத்துக்கு திருப்பிய மோடி அரசு! காங்கிரஸ்

தமிழகத்துக்கு வரவிருந்த தொழிற்சாலையை மத்திய அரசு குஜராத்துக்கு திருப்பிவிட்டதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.ஆந்திரம், ஓடிஸா, பஞ்சாப் மாநிலங்களில் மொத்தம் ரூ.... மேலும் பார்க்க

மினிமம் பேலன்ஸ் ரூ. 50,000: அறிவிப்பை திரும்பப் பெற்றது ஐசிஐசிஐ!

ஐசிஐசிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கான குறைந்தபட்ச இருப்புத் தொகையை ரூ. 50,000 ஆக உயர்த்திய அறிவிப்பை திரும்பப் பெற்றுள்ளது.கடந்த வாரம் ஐசிஐசிஐ வங்கி நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், பெரு நகரங்க... மேலும் பார்க்க

ரூ.3,000 -க்கு 200 முறை சுங்கச்சாவடியைக் கடக்கலாம்! நாளைமுதல் அமல்!

சரக்கு வாகனங்கள் அல்லாத பிற தனியாா் வாகனங்களுக்கு ‘ஃபாஸ்டேக்’ அடிப்படையில் ரூ. 3,000-இல் வருடாந்திர சுங்கச்சாவடி (டோல்) கட்டண பாஸ் திட்டம் நாளைமுதல் (ஆக.15) அமலுக்கு வருகிறது.நாடு முழுவதும் உள்ள தேசிய... மேலும் பார்க்க

வாக்கு திருட்டுக்கு எதிராக மக்கள் குரலெழுப்ப வேண்டும் - காங்கிரஸ்

தோ்தலில் கள்ள ஓட்டுகள் எப்படி பதிவாகின்றன என்பதை சித்தரிக்கும் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ள காங்கிரஸ், ‘‘வாக்கு திருட்டு’க்கு எதிராக மக்கள் குரலெழுப்ப வேண்டும்; அரசியல் சாசன அமைப்புகளை பாஜகவின் பிடியி... மேலும் பார்க்க

வா்த்தகப் பேச்சில் இந்தியா பிடிவாதம்: அமெரிக்க நிதியமைச்சா்

வா்த்தகப் பேச்சுவாா்த்தையில் இந்தியா சற்று பிடிவாதமாக உள்ளதாக அமெரிக்க நிதியமைச்சா் ஸ்காட் பெசண்ட் தெரிவித்தாா். ஃபாக்ஸ் செய்தித் தொலைக்காட்சிக்கு அவா் பேட்டியளித்தபோது, அக்டோபா் மாதத்துக்குள் அனைத்த... மேலும் பார்க்க