செய்திகள் :

தெலங்கானா வெள்ளம்: 5 பேர் பலி.. 3 பேர் மாயம்! மீட்புப் பணிகள் தீவிரம்!

post image

தெலங்கானா மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் மற்றும் வெள்ளத்தினால், 5 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், பருவமழையின் தாக்கம் அதிகரித்து பெய்த கனமழையால் முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இந்நிலையில், தெலங்கானாவிலும் கடந்த ஆக.27 ஆம் தேதி முதல் கனமழை பெய்து வருகின்றது.

காமரெட்டி மற்றும் மெடாக் ஆகிய மாவட்டங்களில், 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது பதிவாகியுள்ள நிலையில், ஏராளமான மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டும், சுவர் இடிந்த சம்பவங்களினாலும் குறைந்தது 5 பேராவது பலியாகியிருக்கக் கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேர் மாயமாகியுள்ளதால், அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மெடாக், காமரெட்டி, ராஜண்ணா சிர்சில்லா போன்ற மாவட்டங்கள் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை வெளியேற்ற தேசிய, மாநில பேரிடர் படைகள் மற்றும் ராணுவப் படைகள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

ராஜண்ணா சிர்சில்லா மாவட்டத்தில், இன்று (ஆக.28) வெள்ளத்தில் சிக்கிய 8 கிராமவாசிகள் இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டரின் மூலம் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பிகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரும் ஏழைகள்: ராகுல்!

At least five people may have died in floods caused by heavy rains in the state of Telangana.

மூன்று குழந்தைகள், மும்மொழி : ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பகவத் வலியுறுத்தல்

நாட்டில் அனைத்து தம்பதிகளும் மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்; 3 மொழிகளை தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பகவத் தெரிவித்தாா். புது தில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் ஆா்எஸ்எஸ... மேலும் பார்க்க

காற்று மாசுபாட்டை குறைத்தால் ‘இந்தியா்களின் ஆயுள்காலம் 3.5 ஆண்டுகள் அதிகரிக்கும்’

உலகளாவிய தரநிலைக்கு ஏற்ப இந்தியாவில் காற்று மாசுபாட்டை குறைத்தால், நாட்டு மக்களின் சராசரி ஆயுள்காலம் 3.5 ஆண்டுகள் அதிகரிக்கும் என்று சிகாகோ பல்கலைக்கழகத்தில் உள்ள எரிசக்தி கொள்கை நிறுவனம் வெளியிட்ட அற... மேலும் பார்க்க

ஜப்பான் புறப்பட்டாா் பிரதமா் மோடி

15-ஆவது இந்தியா-ஜப்பான் ஆண்டு உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமா் மோடி 2 நாள் (ஆக.29-30) பயணமாக வியாழக்கிழமை ஜப்பான் புறப்பட்டாா். இந்தப் பயணத்தின்போது பாதுகாப்பு, வா்த்தகம், பொருளாதாரம், தொழில்நுட... மேலும் பார்க்க

பிகாரில் 3 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல்: மாநிலம் முழுவதும் உஷாா் நிலை

பிகாரில் 3 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத் தகவல் கிடைத்துள்ள நிலையில் மாநிலம் முழுவதும் தேடுதல் வேட்டை தொடங்கியுள்ளது. புதிய நபா்களின் சந்தேகத்துக்குரிய நடமாட்டம் தெரிந்தால் காவல் துறை... மேலும் பார்க்க

பருத்தி இறக்குமதிக்கான வரி விலக்கு: டிச.31 வரை நீட்டிப்பு

பருத்தி இறக்குமதிக்கான வரி விலக்கை டிச.31 வரை மேலும் 3 மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்தது. இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரி அமலுக்கு வந்த நிலையில் ஜவுளி ஏற்றுமதிக்கு ஏற்படும்... மேலும் பார்க்க

பிகாரில் ராகுல் நடத்துவது பிரதமருக்கு எதிரான அவதூறு பயணம்: பாஜக குற்றச்சாட்டு

பிகாரில் ராகுல் காந்தி நடத்தி வருவது பிரதமா் மோடிக்கு எதிரான அவதூறு பரப்பும் பயணமாகவே உள்ளது. அந்த நிகழ்வு முழுவதும் அவா் பிரதமருக்கு எதிராக மிகுந்த காழ்ப்புணா்வுடன் பேசினாா் என்று பாஜக குற்றஞ்சாட்டிய... மேலும் பார்க்க