செய்திகள் :

தெஹ்ரானிலிருந்து அர்மேனியா வந்த 110 இந்திய மாணவர்கள்! தூதரகம் நடவடிக்கை!

post image

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான தாக்குதல்கள் அதிகரித்து வரும் சூழலில், தெஹ்ரானிலிருந்து இந்திய மாணவர்கள் ஏராளமானோர் வெளியேறியதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆபரேஷன் ரைசிங் லயம் என்ற பெயரில் ஈரானின் அணுசக்தி மற்றும் ராணுவ கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதலில் ஈடுபட்டது. இதனால், இருநாடுகளும் தொடர்ந்து ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களினால் இந்தியத் தூதரகத்தின் நடவடிக்கையின் மூலம், தெஹ்ரானிலுள்ள இந்திய மாணவர்கள் ஏராளமானோர் அந்நகரத்தை விட்டு வெளியேறியதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதில், 110 பேர் அர்மேனியா நாட்டின் எல்லை வழியாக வெளியேறியதாகவும், அவர்கள் அனைவரிடமும் தூதரக அதிகாரிகள் தொடர்பில் இருப்பதாகவும் வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தெஹ்ரானில் வசிக்கும், இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினரும் உடனடியாக அந்நகரத்தை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, ஜம்மு - காஷ்மீர் மாணவர் சங்கம் கூறுகையில், அர்மேனியா வழியாக வெளியேறிய உர்மியா மருத்துவக் கல்லூரியின் 110 மாணவர்களில், 90 பேர் ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் சார்பில் 24x7 செயல்படும் கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியத் தூதரகத்தின் சார்பில், ஈரானிலுள்ள இந்தியர்களின் சேவைக்காக 24 மணிநேரமும் செயல்படக்கூடிய உதவி எண்கள் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:தெஹ்ரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற அறிவுறுத்தல்!

ஈரான் மீது தீவிர தாக்குதல்: இஸ்ரேலுக்கு 20 இஸ்லாமிய நாடுகள் கண்டனம்

ஈரான் மீது இஸ்ரேல் முரட்டுத்தனமாக தாக்குதல் நடத்திவருவதாக 20 அரபு, இஸ்லாமிய, ஆப்பிரிக்க நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது குறித்து அந்த நாடுகள் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்... மேலும் பார்க்க

ஈரான் தலைவர் கமேனி பதுங்கியிருக்குமிடம் தெரிந்துவிட்டது: சரணடைந்தால் உயிர் பிழைக்கலாம் - டிரம்ப் எச்சரிக்கை!

ஈரான் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனியை கொல்ல இஸ்ரேல் திட்டமிட்டதாக தகவல் கசிந்தது. இந்த நிலையில் கமேனி பதுங்கியிருக்குமிடம் தங்களுக்கு தெரிய வந்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்த... மேலும் பார்க்க

ஈரான் வான்வெளி அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள்..! -டிரம்ப்

ஈரான் வான்வெளி இப்போது முழுமையாக அமெரிக்க கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று(ஜூன் 17) தெரிவித்துள்ளார்.இஸ்ரேல்-ஈரான் இடையிலான தாக்குதல் 5-ஆவது நாளாக செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

ரஷியாவுக்கு 6,000 ராணுவ பொறியாளர்களை அனுப்ப வட கொரியா திட்டம்!

ரஷியாவுக்கு உதவும் வகையில் 6 ஆயிரம் ராணுவ பொறியாளர்களை அனுப்ப வட கொரியா திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இது தொடர்பாக அதிபர் கிம் ஜாங் உன்னிடம் பேச்சுவார்த்தை நடத்த ரஷியாவின் பாதுகாப்பு கவுன்... மேலும் பார்க்க

இஸ்ரேல் - ஈரான் சண்டையால் பெட்ரோல் தட்டுப்பாடு வருமா?

மேற்கு ஆசிய நாடுகளான இஸ்ரேல் - ஈரான் சண்டையால், தற்போதைக்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இல்லை என்று மத்திய அரசுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.சர்வதேச சந்தையில், எரிபொருள் தேவைக்கு அதிகமாகவே இருப... மேலும் பார்க்க

வாட்ஸ்ஆப் செயலியிலும் இனிமேல் விளம்பரங்கள் வரும்! பயனர்களுக்கு இம்சையாகுமா?

வாட்ஸ்ஆப் செயலியில் முதல்முறையாக விளம்பரங்கள் வரவுள்ளன. ஆனால், இந்த விளம்பரங்களால் வழக்கமான உரையாடல்களுக்கு இடையூறு ஏதும் இருக்காது. அந்த வகையில், விளம்பரங்களுக்கான பக்கம் வாட்ஸ்ஆப்பில் வடிவமைக்கப்பட்... மேலும் பார்க்க