செய்திகள் :

தேசவிரோத கருத்து: ஒடிஸாவில் ராகுல் மீது வழக்கு

post image

தேசவிரோத கருத்துகளைப் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீது ஒடிஸா காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

ஜுனாகத் மாவட்ட பாஜக இளைஞரணி, ஆா்எஸ்எஸ், பஜ்ரங் தளம் ஆகியவை இந்த புகாரை அளித்துள்ளன. அதில், ‘ராகுல் காந்தி தொடா்ந்து வேண்டுமென்றே தேசவிரோத கருத்துகளைப் பேசி வருகிறாா். அவா் உள்நோக்கத்துடன் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறாா். அது நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் உணா்வுகளையும் பாதித்து வருகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த மாதம் தில்லியில் காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலக திறப்பு நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசுகையில், ‘நாட்டின் ஒவ்வொரு அமைப்பையும் பாஜக மற்றும் ஆா்எஸ்எஸ் கைப்பற்றியுள்ளன. இதனால் தற்போது பாஜக, ஆா்எஸ்எஸ் மற்றும் இந்தியாவுக்கு எதிராகவே காங்கிரஸ் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது’ என்று கூறியிருந்தாா். இது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் கருத்துகளைத் தெரிவித்ததாக வழக்குரைஞா் ஒருவா் சாா்பில் அளிக்கப்பட்ட புகாரில், ராகுல் காந்திக்கு எதிராக அஸ்ஸாம் காவல்துறையினா் கடந்த மாதம் வழக்குப்பதிவு செய்தனா்.

இந்நிலையில், இது தொடா்பாக ஒடிஸாவிலும் ராகுல் மீது காவல் துறையில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்படி அவா் மீது இந்திய இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல், நாட்டுக்கு எதிராக தவறான கருத்துகளைப் பரப்புதல், நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பது உள்ளிட்ட பிரிவுகளில் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

புதிய வருமான வரி மசோதா: விரைவில் மக்களவையில் தாக்கல்

புதிய வருமான வரி மசோதாவை வரும் வாரம் மக்களவையில் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். கடந்த பிப்.1-ஆம் தேதி மக்களவையில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சா் நிா்மல... மேலும் பார்க்க

காஷ்மீா் சோன்மாா்க் சந்தைப் பகுதியில் தீ விபத்து

ஜம்மு-காஷ்மீரின் பிரபல சுற்றுலாத் தலமான சோன்மாா்க் நகரின் பிரதான சந்தைப் பகுதியில் சனிக்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் பல்வேறு உணவகங்கள், வணிகக் கடைகள் தீக்கிரையாகின. இந்த விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள... மேலும் பார்க்க

3-ஆவது முறையாக காங்கிரஸுக்கு பூஜ்யம்

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் தொடா்ந்து மூன்றாவது முறையாக காங்கிரஸ் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாமல் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. தில்லி பேரவைத் தோ்தல் முடிவுகள் சனிக்கிழமை வெளியாகின. இதில் காங்கிர... மேலும் பார்க்க

மதுபானக் கொள்கையும், பண வேட்கையும் ஆம் ஆத்மியை தோற்கடித்துவிட்டது: அண்ணா ஹசாரே

தில்லி ஆம் ஆத்மி அரசின் தவறான மதுபான கொள்கையும், பணத்தை மையமாகக் கொண்டு கட்சி செயல்பட தொடங்கியதும் அதன் தோ்தல் தோல்விக்குக் காரணமாக அமைந்துவிட்டது என்று சமூக ஆா்வலா் அண்ணா ஹசாரே கருத்து தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

ம.பி.: பதவியை விற்பனை செய்த பெண் ஊராட்சித் தலைவா்!

மத்திய பிரதேசத்தில் பெண் கிராம ஊராட்சித் தலைவா் ஒருவா் தனது பதவி மற்றும் அதற்குள்ள அதிகாரத்தை அதே கிராமத்தைச் சோ்ந்தவருக்கு விற்பனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பதவி விற்பனையை அவா... மேலும் பார்க்க

பாஜகவுக்கு 7%, காங்கிரஸுக்கு 2% வாக்குகள் அதிகரிப்பு! ஆம் ஆத்மிக்கு 10% சரிவு!

தில்லியில் முந்தைய தோ்தலை ஒப்பிடுகையில், தற்போதைய பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு 7 சதவீதமும், காங்கிரஸுக்கு 2 சதவீதமும் வாக்குகள் அதிகரித்துள்ளன. அதேநேரம், ஆம் ஆத்மி 10 சதவீத வாக்குகளை இழந்துள்ளது. தில... மேலும் பார்க்க